வெருளி நோய்கள் 1321 -1325 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1316 -1320 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1321 -1325 துருக்கியர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் துருக்கிய வெருளி. துருக்கியர், துருக்கிய மொழி, துருக்கியர் கலை, துருக்கியர் பண்பாடு, துருக்கிய நாடு, தொழில், விளை பொருள்கள், துருக்கிய அரசியல் முதலானவற்றைப் பேரிடர் தருவதாக எண்ணிப் பெரு வெறுப்பும் மிகு அச்சமும் கொண்டிருப்பர் இத்தகையோர். 00 கருவாய் துழாவுதல்(cunnilingus) தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் துழாவு வெருளி.cunnus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பெண்குறி. lingere என்னும் இலத்தீன் சொல்லின்…
சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055 1051. Apprentice at law பயிற்சி வழக்குரைஞர் வழக்குமுறைப் பயிலுநர் பயிற்சிச் சட்டம், 1961 இந்தியாவில் பயிற்சிப் பருவத்தைக் ஒழுங்குபடுத்துகிறது. இதில் பணிப்பயிலுநர்களுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், பாதுகாப்புகள் வரையறுக்கப்படுகின்றன. இச்சட்டம் மைய அரசால் அறிவிக்கப்பட்ட, இசைவளிக்கப்பட்ட அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும். இது வேண்டப்படும் சிறப்புப் பணிப்பயிற்சித் திட்டங்களுக்கு இசைவை வழங்குகிறது. 1052. Apprenticeship பயிற்சிப் பருவம் பணிப்பயிற்சி தொழிற் பயிற்சிநிலை மீன்பிடித்தல், கைவினை, தையல், ஊர்திப் பழுது,…
நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 27 அறநெறி அறியுங்கள்! அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். [அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர் கடு சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார் வாய் சொல்.] நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 172 பதவுரை: அறம் = அறத்தின்; நெறி =…
வெருளி நோய்கள் 1306 -1310 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1301 -1305 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1306 -1310 தீவுபற்றிய காரணமற்ற, தேவையற்ற பேரச்சமே தீவு வெருளி.வாய் வாள்வலம்படு தீவின் பொலம் பூண் வளவன்என எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் புறநானூற்றில் (397:21-2) தீவு குறித்துக் குறிப்பிடுகிறார்.பொலம்படு தீவிற்குஎனப்பொன்மலிந்துள் தீவைப் பெருங்கதை (நரவாண காண்டம் 1.2.) கூறுகிறது.பொன் நிறைந்த தீவு மேல் ஆர்வம் ஏற்படுவதுபோல் அதனை அடைவதில் அச்சம் ஏற்படுவதும் இயற்கைதானே! Insula என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தீவு.00 மூச்சுடன் கரித் தூளைக் கலந்து இழுப்பது குறித்த மிகையான பேரச்சம்…
வெருளி நோய்கள் 1301 -1305 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1296 -1300 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1301 -1305 கெட்ட மூச்சு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீயமூச்சு வெருளி.வாய்த்தூய்மையின்மை, பற்கள் சிதைவு, ஈறுகளில் சீழ் வடிதல் போன்ற காரணங்களால் வாயில் தீய நாற்றம் வருகிறது. வாயைத் தூய்மையாக வைத்துக்கொண்டு இதைத் தடுக்க வேண்டும். மாறாகத் தவறான எண்ணங்கள் கொண்டு தீய கற்பனைகளை வளர்ப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு நல்கும்.halitosis என்றால் கெட்ட மூச்சு.00 தீயன பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீயன வெருளி.தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும் (குறள்…
சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050 1047. Appreciation ஆராய்தல்; பாராட்டுதல்; மதிப்பிடுதல்; விளங்கிக் கொள்ளுதல் சட்டத்தில் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள் முறையீட்டின் போது வழங்கப்பட்ட ஆதாரத்தை மதிப்பீடு செய்து ஆராய்ந்து பார்க்கும் செயல்முறையைக் குறிக்கும். இது நீதித்துறை எடுத்துரைப்பு, முழு நம்பகம், நிகழ்தகவு விதி, நீதித்துறை தவறாக செயல்படுவதைத் தடுத்தல் முதலியவற்றை உள்ளடக்கியது. 1048. Appreciation of evidence சான்றின் மதிப்பீடு சட்டத்தில் சான்றின் அல்லது ஆதாரத்தின் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள். சட்டநடவடிக்கைகளின் போது அளிக்கப்பட்ட ஆதாரத்தின்…
குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 43: தூய மனத்தவர்க்கு அவர்க்குப் பின்பும் புகழ் நிலைத்து நிற்கும் – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 44 புகழைத் தருவது நற்றுணையே! மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௭ – 457) மன்னுயிர்க்கு ஆக்கம் தருவது நல்ல மனநிலையே! எல்லா வகையான புகழையும் தருவது நல்லினத்தின் துணையே! பதவுரை: மனநலம்=மனத் தூய்மை, மனத்தது நன்மை; மன்னுயிர்க்கு= நிலைபெற்ற உயிர்க்கு; ஆக்கம்=பெருக்கம், செல்வம், சொத்து, உயர்வு, ஆற்றல்; இனம்=குலம், சுற்றம்,…
வெருளி நோய்கள் 1291 -1295 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1286 -1290 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1291 -1295 தீங்கிழைக்கும் தீயவன் அல்லது தீயவள் குறித்த அளவுகடந்த பேரச்சம் தீயர் வெருளி.தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பவர்களைக் கண்டு வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் கதைகளிலும் வரும் தீய பாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தும் பேரச்சத்திற்கு ஆளாவர். பொறாமையால் அல்லது பழி வாங்குவதற்காகத் தனக்குச் சூனியம் வைப்பதாக அல்லது மந்திரத் தகடு வைப்பதாக எண்ணியும் பிறர் மீது வெறுப்பும் சினமும் கொண்டு அஞ்சுவர்.00 தீச்செய்தி பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீச்செய்தி…
வெருளி நோய்கள் 1286 -1290 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1281 -1285 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1286 -1290 தீக்கோழி(நெருப்புக் கோழி) மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் தீக்கோழி வெருளி.Strouthokamel என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தீக்கோழி.“தீக்கோழி அருகே இருந்து ஒலி எழுப்பாதீர். அது உங்கள் கண்களைக் கிழித்து நெஞ்சகத்தைப் பிளந்து விடும்’ என்று சொல்லப்படுவதால் தீக்கோழி குறித்த பேரச்சம் வருகிறது.பொதுவாக நெருப்புக் கோழி என்று சொல்லப்பட்டாலும் எழுத்துச் சுருக்கத்திற்காகத் தீக்கோழி எனக் குறிக்கப் பெற்றுள்ளது.00 தீக்காயம் குறித்த வரம்பற்ற பேரச்சம் தீக்காய வெருளி.தனக்குத் தீக்காயம் ஏற்பட்டால் அது குறித்து…
சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046 1043. Axiom ஏற்புடைமை சான்று தேவையில்லாமல் மெய்யாக அறியப்படும் வெள்ளிடையுண்மை; பரவலாக ஏற்றுக் கொள்ளப் படுவது. ஏற்புடைமை அடிப்படை யிலேயே வாதங்கள் எழுவதால் அடிப்படைக் கோட்பாடு எனக் கொள்ளப்படுகிறது. சட்டம் சார்ந்த வாதத்திற்கான அடிப்படைத் தளமாகவும் செயல்படுகிறது. சான்றாக, ஒப்பந்தச் சட்டத்தில், ஒப்பந்தத்திற்கு இரு தரப்பின் ஒப்புமை தேவை என்பது அடிப்படைக் கோட்பாடாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1044. Axiomatic வெளிப்படையாகத் தெரிந்த மூதுரையார்ந்த தானே தெளிவான, ஐயத்திற்கு இடமில்லாத(சந்தேகமில்லாத), மறுக்க…
வெருளி நோய்கள் 1276 -1280 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1271 -1275 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1276 -1280 திரைப்படம் அல்லது திரையரங்குபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் திரைப்பட வெருளி.திரைப்படம் பார்ப்பதற்கும் திரையரங்குகள் செல்வதற்கும் காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். இருட்டு வெருளிக்கு ஆளானவர்களுக்கும் திரைஅரங்கு இருட்டு அளவற்ற பேரச்சத்தை அளிக்கிறது. திரையரங்க வசதிக் குறைபாடுகளால் எரிச்சலுற்றும் வெறுப்பு கொள்கின்றனர். திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகள், கூச்சமளிக்கும் நெருக்கமான காட்சிகள் போன்றவற்றாலும் திரைப்பட வெறுப்பு கொள்வோர் உள்ளனர். இவற்றைப்பார்க்கும் இளம் பருவத்தினர் கெட்டுப்போவர் எனவும் இவற்றின்மீது வெறுப்பு கொள்கின்றனர். இப்பொழுது திரையரங்கு…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23. எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது – தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23 எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு இதே நேரம் நாம் எத்தனை, எத்துணை என்பவற்றை வேறுபாடு தெரியாமல் பயன்படுத்துகிறோம் என்பதையும் பார்க்க வேண்டும். உரிய வேறுபாட்டை நன்கு அறிந்து அதற்கேற்ப பயன்படுத்த வேண்டும். எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிப்பிடும். சான்றாக ஒரு புத்தகம், இரண்டு மடல்கள், மூன்று வீடுகள், நான்கு அறைகள், ஐந்து பேர்கள், ஆறு…
