வெருளி நோய்கள் 1356 -1360 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1351 -1355 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1356 -1360 தேநீர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தேநீர் வெருளி.தேநீர் அருந்துவதால் செரிமானப் பாதிப்பு ஏற்படும், பித்தம் மிகுந்து நலக்கேடு வரும், உண்பதற்கு ஒரு மணி நேர இடைவெளியின்றி முன்போ பின்போ தேநீர் அருந்துவது உடலுக்குக் கேடு என்பன போன்ற காரணங்களால் தேநீர் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.sagiou என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தேநீர் எனப் பொருள்.காண்க: தேநீர் ஆக்க வெருளி(fronsophobia00 தேநீர்க் குவளை குறித்த வரம்பற்ற பேரச்சம் தேநீர்க் குவளை வெருளி.இந்தியாவில்…
குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 45. இன நலமே பாதுகாப்பு! மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௮ – 458) மனம் நன்னலமாக இருப்பினும் சான்றோர்க்கு இனநலமே பாதுகாப்பானது. பதவுரை: மன-மனத்தின்; நலம்-நன்மை; நன்கு-மிகுதியும்; உடையர்-உ்டையவர்கள்; ஆயினும்-ஆனாலும்; சான்றோர்க்கு-அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கும் பண்பாளர்க்கு; இனநலம்-இனத்தின் நன்மை; ஏமாப்பு-வலிமை, பாதுகாவல்; உடைத்து-உடையது. கருத்துரைகள் மன நலம் இருப்பினும் சிற்றினம் சேராமல் நல்லினத்துடன் சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பு…
வெருளி நோய்கள் 1351 -1355 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1346 -1350 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1351 -1355 தென்னசி மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென்னசி வெருளி.தென்னிசி மாநிலம் ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது; எட்டு அமெரிக்க மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது.இம்மக்களின் வணிகம், நாகரிகம்,பண்பாடு,நடைமுறை மீது தேவையற்ற பேரச்சம் கொள்வோர் வெருளிக்கு ஆளாகின்றனர்.00 தேடு பொறி குறித்த வரம்பற்ற பேரச்சம் தேடு பொறி வெருளி. தேடுபொறிகள் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் என்ற பேரச்சத்தால் தேடுபொறிகளை வெறுப்போர் உள்ளனர்.கூகுள், யாஃகூ முதலான பல்வேறு தேடுபொறிகள் உள்ளன….
நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 28. பெரியோரைப் பிணித்துக் கொள்க! அடைந்தார்ப் பிரிவு மரும்பிணியுங் கேடு முடங்குடம்பு கொண்டார்க் குறலாற் – றொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை யுறப்புணர்க வம்மாவென் னெஞ்சு. – நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 173 [அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரைஉறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.] கருத்துரை: அன்பானவர்களைப் பிரிதலும் தீர்க்க இயலா நோயும் கேடுகளும் உடம்பிற்கு…
வெருளி நோய்கள் 1341 -1345 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1336 -1340 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1341 -1345 அறியப்படாத ஆள், இடம், பொருள் முதலியன குறித்த அளவுகடந்த பேரச்சம் தெரிந்திராமை வெருளி.முன்பின் அறிந்திராதவர்களுடன் பழகுவதால் இன்னல்கள் நேரலாம் என அஞ்சுவர். முன்பின் என்றால் முன்னரோ பின்னரோ எனக் கருதி எப்படி இது சரியாகும் என எண்ணுகிறோம். “முன்பின் செத்திருந்தால்தானே சுடுகாடு தெரியும்” என்றால் நமக்கு முன்னவரோ பின்னவரோ செத்திருந்தால்தானே சுடுகாடு சென்றிருப்போம் எனப் பொருள். அதுபோல் முன்பின் அறியாதவர்கள் என்றால் அவரது குடும்பத்தில் அல்லது வாழ்விடத்தில் அல்லது பணியிடத்தில்…
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : இலக்குவனார் திருவள்ளுவன்
(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : தொடர்ச்சி) 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 ஈ.வெ.இரா.உரை, நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்தது 11ஆம் கட்டுரை. இநதி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல்முறையாகப் பெண்கள் கைது என்பது குறித்து 12 ஆம் கட்டுரை கூறுகிறது. எண்மர் கைது குறித்தது 13 ஆம் கட்டுரை. நவம்பர் 14 அன்று ஐந்து பெண்கள் கைதானதற்குப் பிறகு நவம்பர் 21 அன்று எட்டுத்தாய்மார்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப் பட்டனர். பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில்…
வெருளி நோய்கள் 1326 -1330 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1321 -1325 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1326 -1330 துன்பம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் துன்ப வெருளி.துன்பத்தினால் வரும் வருத்தத்தையும் இது குறிக்கும். எனினும் மன வருத்த வெருளி(Lypiphobia) எனத் தனியாக உள்ளதால், இதனைத் துன்ப வெருளி என்றே சொல்லலாம்.எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!எனப் புதிய பறவையில் கண்ணதாசன் பாடல் இடம்பெறும்.இது துன்ப வெருளியின் வெளிப்பாடே.அதுபோல்எங்கே நிம்மதி நிம்மதி என்றுதேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லைஎன மற்றொரு…
வெருளி நோய்கள் 1321 -1325 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1316 -1320 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1321 -1325 துருக்கியர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் துருக்கிய வெருளி. துருக்கியர், துருக்கிய மொழி, துருக்கியர் கலை, துருக்கியர் பண்பாடு, துருக்கிய நாடு, தொழில், விளை பொருள்கள், துருக்கிய அரசியல் முதலானவற்றைப் பேரிடர் தருவதாக எண்ணிப் பெரு வெறுப்பும் மிகு அச்சமும் கொண்டிருப்பர் இத்தகையோர். 00 கருவாய் துழாவுதல்(cunnilingus) தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் துழாவு வெருளி.cunnus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பெண்குறி. lingere என்னும் இலத்தீன் சொல்லின்…
சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055 1051. Apprentice at law பயிற்சி வழக்குரைஞர் வழக்குமுறைப் பயிலுநர் பயிற்சிச் சட்டம், 1961 இந்தியாவில் பயிற்சிப் பருவத்தைக் ஒழுங்குபடுத்துகிறது. இதில் பணிப்பயிலுநர்களுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், பாதுகாப்புகள் வரையறுக்கப்படுகின்றன. இச்சட்டம் மைய அரசால் அறிவிக்கப்பட்ட, இசைவளிக்கப்பட்ட அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும். இது வேண்டப்படும் சிறப்புப் பணிப்பயிற்சித் திட்டங்களுக்கு இசைவை வழங்குகிறது. 1052. Apprenticeship பயிற்சிப் பருவம் பணிப்பயிற்சி தொழிற் பயிற்சிநிலை மீன்பிடித்தல், கைவினை, தையல், ஊர்திப் பழுது,…
நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 26: வறுமையிலும் உதவுக! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 27 அறநெறி அறியுங்கள்! அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல். [அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர் கடு சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார் வாய் சொல்.] நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 172 பதவுரை: அறம் = அறத்தின்; நெறி =…
வெருளி நோய்கள் 1306 -1310 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1301 -1305 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1306 -1310 தீவுபற்றிய காரணமற்ற, தேவையற்ற பேரச்சமே தீவு வெருளி.வாய் வாள்வலம்படு தீவின் பொலம் பூண் வளவன்என எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் புறநானூற்றில் (397:21-2) தீவு குறித்துக் குறிப்பிடுகிறார்.பொலம்படு தீவிற்குஎனப்பொன்மலிந்துள் தீவைப் பெருங்கதை (நரவாண காண்டம் 1.2.) கூறுகிறது.பொன் நிறைந்த தீவு மேல் ஆர்வம் ஏற்படுவதுபோல் அதனை அடைவதில் அச்சம் ஏற்படுவதும் இயற்கைதானே! Insula என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தீவு.00 மூச்சுடன் கரித் தூளைக் கலந்து இழுப்பது குறித்த மிகையான பேரச்சம்…
வெருளி நோய்கள் 1301 -1305 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1296 -1300 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1301 -1305 கெட்ட மூச்சு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீயமூச்சு வெருளி.வாய்த்தூய்மையின்மை, பற்கள் சிதைவு, ஈறுகளில் சீழ் வடிதல் போன்ற காரணங்களால் வாயில் தீய நாற்றம் வருகிறது. வாயைத் தூய்மையாக வைத்துக்கொண்டு இதைத் தடுக்க வேண்டும். மாறாகத் தவறான எண்ணங்கள் கொண்டு தீய கற்பனைகளை வளர்ப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு நல்கும்.halitosis என்றால் கெட்ட மூச்சு.00 தீயன பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீயன வெருளி.தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும் (குறள்…
