கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia; 1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia;152. மகவு வெருளி-Kiddophobia
கலைச்சொல் தெளிவோம்! 150. பூண்டு வெருளி-Alliumphobia பூண்டு(7) வகை பற்றி ஏற்படும் தேவையற்ற பேரச்சம் பூண்டு வெருளி-Alliumphobia கலைச்சொல் தெளிவோம்!1 51. பெண் வெருளி-Gynephobia/Gynophobia பெண்(18), பெண்கோள்(1), பெண்டிர்(63), பெண்டிரேம்(1), பெண்டினை(1), பெண்டு (18), பெண்மை(6) எனப் பெண் என்னும் சொல்லைப் புலவர்கள் 108 இடங்களில் கையாண்டுள்ளனர். பெண்களைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பெண் வெருளி-Gynephobia/Gynophobia கலைச்சொல் தெளிவோம்! 152. மகவு வெருளி-Kiddophobia குழவி என்னும் சொல் 41 இடங்களில் வந்திருந்தாலும், இளங்குழந்தையரையே பெரிதும் குறிப்பதால் பொதுவான சொல்லாகக்…
தொல்காப்பியர் சிலை – கால்கோள்விழா- காப்பிக்காடு ஊரில்
சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொல்காப்பியர் ஆய்வு மையம் அறக்கட்டளை அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கம் தமிழ் அமைப்புகள் தமிழாலயம், சாமித்தோப்பு, குமரிமாவட்டம் தலைமை: கு.பச்சைமால் முன்தொகை அளிப்பவர் : வள்ளல் கு.வெள்ளைச்சாமி தொடக்கவுரை: புலவர் த.சுந்தரராசன் சிறப்புரை: பேராசிரியர் ஆறு அழகப்பன் பேராசிரியர் பொன்னவைக்கோ இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 149 புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia
புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia புற்று என்பது குறித்துப் பின்வருவனபோல் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த (அகநானூறு : 8:1) செம் புற்று ஈயல் போல (புறநானூறு : 51: 10) புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் (பதிற்றுப்பத்து : 45:2) நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி (நற்றிணை :59:2) பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் (பெரும்பாண் ஆற்றுப்படை : 277) புற்று போன்ற தன்மையில் உடலில் ஏற்படும் நோய்தான் புற்று நோய். வேளாணியல்,…
கலைச்சொல் தெளிவோம்! 148 புதைவு வெருளி-Taphephobia
புதைவு வெருளி-Taphephobia அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு (பெரும்பாண் ஆற்றுப்படை : 69) வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு (பெரும்பாண் ஆற்றுப்படை : 123) முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே (ஐங்குறுநூறு : 197.2) மயிர் புதை மாக் கண் கடிய கழற (பதிற்றுப்பத்து : 29.12) தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான் (கலித்தொகை : 39.2) முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப (அகநானூறு : 86.23) நிலம் புதைப் பழுனிய மட்டின்…
கலைச்சொல் தெளிவோம்! 146 பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia; 147 புதுமை வெருளி-Neophobia
பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia faeces-மலம் எனச் சூழறிவியல், மீனியல், மனைஅறிவியல், மருந்தியல், கால்நடை அறிவியல் ஆகியவற்றில் பயன்படுத்தி வருகின்றனர். மலம் என்பதை இடக்கர் அடக்கலாகப் பவ்வீ (பகரத்தில் வரும் ஈகாரம்-ப்+ஈ) என்பது தமிழ் மரபு. மலத்தைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia புதுமை வெருளி-Neophobia புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுநர் (புறநானூறு : 174.16) இது தவிர, புதிது(14), புது(109), புதுவ(4), புதுவதின்(1), புதுவது(19), புதுவர்(1), புதுவன(1), புதுவிர்(2), புதுவை(1), புதுவோர்(5), புதுவோர்த்து(1), எனப் புது…
கலைச்சொல் தெளிவோம்! 144 பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia; 145 பயிர் வெருளி-Botanophobia
பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia 13 ஆம் எண் குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia 145 பயிர் வெருளி-Botanophobia பயிர்(22) சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது. பயிர் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் பயிர் வெருளி-Botanophobia – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல் தெளிவோம்! 143 படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia
படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia படி(14), படிக்கால்(1), படிநிலை(2), என்பன போன்று பல்வேறு சொற்கள் சங்கப்பாடல்களில் வருகின்றன. எனினும் இவை பெரும்பாலும் படிதல் முதலான பொருள்களையே குறிக்கின்றன. படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப (கலித்தொகை : 35 2) இதற்கு உரை எழுதியுள்ள புலவர் மாணிக்கனார் படி என்பதாவது ஒருவரது மேன்மை கருதி மனமுவந்து ஏற்பாடு செய்யும் உணவுத்திட்டம் முதலியன என்கிறார். இன்றைக்குப் பணியாளர்களுக்குத் தரப்படும் படி(allowance) என்பதற்கு இது முற்றிலும் பொருந்துகின்றது. எனினும் மாடி அல்லது ஏணி…
கலைச்சொல் தெளிவோம்! 137 நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia
நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன (மதுரைக் காஞ்சி : 682) தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து, (நெடுநல்வாடை : 55) நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய், (மலைபடுகடாம் : 149) நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர் (நற்றிணை : 154.9) நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் (குறுந்தொகை : 160.1) நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் (ஐங்குறுநூறு : 388.1) நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு (கலித்தொகை :…
படைப்பாளர்களுக்குப் பாடமாகும் செயகாந்தனின் மறைவும் பிரிவும் – இலக்குவனார் திருவள்ளுவன்
படைப்பாளர்களுக்குப் பாடமாகும் செயகாந்தனின் மறைவும் பிரிவும் – இலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள். தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சப்பானிய நண்பர் இரோசி யமசித்தா தமிழ்ச்சிறுகதை, புதின ஆசிரியர்கள் குறித்துக் கேட்டார். மு.வ., மணிவண்ணன்(தீபம் நா.பார்த்தசாரதி) முதலானவர்பற்றிக் கூறினேன். கல்லூரி மாணவனாக இருந்தபொழுது நூலகத்தில் இருந்த அனைத்து மு.வ. நூல்களையும் தமிழ்வாணன் நூல்களையும் படித்ததையும் அறிஞர் அண்ணா முதலான திராவிடப் படைப்பாளர்கள் இளந்தலைமுறையினரின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதையும் குறிப்பிட்டேன். இக்கால எழுத்தாளர்கள் பற்றிக் கேட்டார். முதுகலையில் செயகாந்தன் படைப்புகள் சிலவற்றையும் கி.இராசநாராயணன்…
விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்
விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் சித்திரை 1, 2946, ஏப்பிரல் 14, 2015 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி – 12.00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும் விண் தொலைக்காட்சியின் நீதிக்காக நிகழ்ச்சியில் பண்பாடு குறித்துக் கருத்து தெரிவிக்கின்றேன். மறு ஒளிபரப்பு இரவு 8.00 மணி – 9.00 http://wintvindia.com இணையவரியில் இணையத்திலும் உடன் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!
கலைச்சொல் தெளிவோம்! 139 நோய் வெருளி-Nosophobia
நோய் வெருளி-Nosophobia வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து (பரிபாடல் : 4:13) உண்துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின் (ஐங்குறுநூறு : 28: 1) நோயொடு பசி இகந்து ஒரீஇ, (பதிற்றுப்பத்து : 13: 27) நோய் தணி காதலர் வர, ஈண்டு (அகநானூறு : 22:20) நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! (புறநானூறு : 13: 9) இவை போல் நோய் (259), நோய்ப்பாலஃது (1), நோய்ப்பாலேன்(2), நோயியர்(1), நோயேம்(1), நோயை(2), நோலா(1), நோவ(30), நோவது…
கலைச்சொல் தெளிவோம்! 138 நெஞ்சுநோய் வெருளி-Cardiophobia
நெஞ்சுநோய் வெருளி-Cardiophobia நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப (திருமுருகு ஆற்றுப்படை :திருமுருகு ஆற்றுப்படை : 65) கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப (பொருநர் ஆற்றுப்படை : 98) நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு (முல்லைப் பாட்டு : : 81) அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின் (மதுரைக் காஞ்சி : : 472) அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சு அமர்ந்து (குறிஞ்சிப் பாட்டு : : 211) நெஞ்ச(1), நெஞ்சத்த(1), நெஞ்சத்தவன்(1), நெஞ்சத்தன்(1),…