தேனிப் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகள்-பொதுமக்கள் அவதி

தேனிப் பகுதியில் கடந்த சில நாளாகப் பெய்த மழையின் காரணமாகச் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.    இருவழிச்சாலை அமைக்கும் பணியும் புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்றது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து தேவதானப்பட்டி வரை சாலைவேலைகள் நடைபெற்றன. அதன் பின்னர் அப்பணி நிறுத்தப்பட்டது. அப்போது இருந்தே தேவதானப்பட்டிச் சாலைகள் பழுதடைந்தன.  இருவழிச்சாலை அமைக்கப்படும்போது அச்சாலை செப்பனிடப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்தது. தற்பொழுது அந்தப்பணி நிறுத்தப்பட்டது. இதனால் தேவதானப்பட்டியிலிருந்து பெரியகுளம் வரை செல்லும் சாலையும், தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை செல்லும் சாலையும் பழுதடைந்துள்ளன….

ஐரோப்பியப் பண்டுவ மருத்துவக் கழகத்தின் மதிப்புமிகு உறுப்பினர் வீரப்பன்

   ஐரோப்பியப் பண்டுவ மருத்துவக் கழகம்(European Society of Intensive Care Medicine)  மரு. சிதம்பரம் வீரப்பன் அவர்களுக்கு  மதிப்புமிகு உறுப்பினர் (Honorary Member) எனும் விருதை நிகழாண்டு புரட்டாசி 11-15, 2045 / செப். 27 – அக்.1 நாள்களில் பார்சலோனா நகரில்  நிகழ்ந்த 27-ஆம் அனைத்துலக மாநாட்டில்,  வழங்கியது.  இதுகாறும் பதின்மூவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இவ்விருது, 4 ஆண்டுகள் கழித்து வழங்கப்பெறுவதும், இவ்விருதை வாங்கும் முதல் ஆசியர், இந்தியர், தமிழர் இவர்தாம் என்பதும் இச்சிறப்பைக்கூட்டுவன.   இக்கழகம் 7000 உறுப்பினர்களைக் கொண்டது;…

செஞ்சீனா சென்றுவந்தேன் 15 – பொறி.க.அருணபாரதி

       (புரட்டாசி 12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 15.சீனாவில் “ஊடகங்கள்”   சாலையோரம் சில இடங்களில் இதழ்களும், நாளேடுகளும் விற்பனை ஆகிக்கொண்டிருந்ததைப் பார்த்தென். ஊடகச்சுதந்திரம் இல்லாதநாடு சீனா என்கிறார்களே, இங்கு எப்படி ஊடகஇதழ்கள் விற்கின்றன என வியப்போடு பார்த்தேன். நான் பார்த்தவகையில், அவற்றுள் பெரும்பாலானவை திரைப்படம், நவநாகரிகச் சீனப்பெண்களின் உடைகள் குறித்துப் பேசும் புதுப்பாணி வடிவமைப்புகள், கடைவணிகம், செய்திகள் என பரவிக்கிடந்தன. அரசியல் பற்றி பேச, அரசின் ஏடு மட்டுமே! அதிலும் சில விதிவிலக்குகள் உண்டென்றால், அது அரசு…

உண்ணாநோன்பைக் கொச்சைப்படுத்தாதீர்!

உண்ணாநோன்பு என்பது ஒரு தவம். பழந்தமிழர்கள் தங்களுக்கு இழுக்கு ஏற்பட்டபொழுது மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் (குறள் எண்: 969) என்பதற்கு எடுத்துக்காட்டாக, வடக்கிருந்து உணவுமறுத்து உயிர்விட்டுள்ளனர். உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கும் சமணர் செயல், ’சல்லேகனை’ எனப்படும்.    இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்    கடைதுறத்தல் சல்லே கனை. என்கிறது ‘அருங்கலச் செப்பு’ என்னும் சமணநூல். பொறுத்துக் கொள்ள இயலாமல் பிறரால் ஏற்படும் தொல்லை, தீராமல் தொடர்ந்து துன்பம் தருகின்ற நோய், தாங்க இயலா முதுமைத் தொல்லை, ஆகியன வரும்…

எழுத்தினூடே விரியும் தோழர் தியாகுவின் சித்திரம்

புரட்டாசி 26, 2045 / அக்.12, 2014 சென்னை   மார்க்சியம், சிறை இலக்கியம், கல்வி, தியாகுவின் உரைகள், மொழியாக்கம்  

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் ! – எம். செயராம(சர்மா) … மெல்பேண்

       இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்      இல்லையென்று சொல்லுவதில்லை      கருணையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்      காட்சிதர மறுப்பதுமில்லை        ஆணவத்தை அகற்றிப்பாருங்கள் – அவன்       அரவணைக்கக் கரத்தைநீட்டுவான்       நாணயாமாய் நடந்துபாருங்கள் – அவன்       நாளுமெங்கள் அருகில்வந்திடுவான்      உணர்வுகொண்டு பாடிப்பாருங்கள் – அவன்      உள்ளமதில் வந்துநின்றிடுவான்      தெளிவுடனே நாளும்தேடுங்கள்  –…

**தமிழர் தாழ்வும் வாழ்வும் – ஙூ**

  (புரட்டாசி12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 7. இந்தியா என்றால்‘இந்தி’யாவா? இந்தியா உண்மையான மக்களாட்சி நாடு எனில் தாய்மொழி வாயிலாகக் கல்வியும் வேலைவாய்ப்பும் அமைந்து அனைவருக்கும் சம வாய்ப்புரிமை இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தி படித்தவர்க்கே இந்தியாவில் வாழ இயலும் என மோசடியான சூழலே விளங்குகிறது. சான்றாகத் தமிழ்நாட்டில் உள்ள படைத்துறைப் பள்ளியான சைனிக் பள்ளியில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும். இந்திக்காரர்கள் தம் தாய்மொழியில் எளிதில் பெறக் கூடிய வாய்ப்பைப் பிற…

ஆலமரம் – முனைவர் எழில்வேந்தன்

அணுவுக்குள் இருக்கும் ஆற்றலைப் போல மிகச்சிறு விதைக்குள் அடங்கியிருந்த பேருருவம் நான். ஆலமரம் அற்புத அருமரம். ஈகக் குருதியின் சேற்றில் முளைத்து உகங்களின் தாகம் தேக்கிய விழிகளின் கண்ணீர்த் துளிகளால் துளிர்த்த மரம் நான். விரிந்து கிளை பரப்பி விழுதுவிட்டு அடர்ந்து பசுமையாய் பரந்து நிற்கிறேன் என் படர்ந்த நிழலுக்காகவும் பழத்தின் சுவைக்காகவும் நேசமாய் வந்தமரும் பறவைகளின் பாசறை நான். பற்பல வண்ணப் பறவை இனங்களின் மொழிகள் என்னவோ வேறு வேறுதான் பாடும் பண்ணின் சிந்தனை மட்டும் என்றென்றும் ஒன்று. நான் உழைக்கும் பறவைகளின்…

அயல் மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்

தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகள் கோயில் விழாக்களில் கொண்டாடப்படுவதன் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பண்பாட்டுக் கலைகளின் வளர்ச்சிக்கு நாட்டுப்புறக்கோயில்கள் தாய்வீடாக விளங்கிவருகின்றன. நாட்டுப்புறக்கலைகள் மனிதனின் உள்ளத்தில் ஊற்றாக எழும் உண்மையான உணர்ச்சிகளின் வடிவமாக அமைந்துள்ளன. சமயஉணர்வு, அச்சஉணர்வு, பேயோட்டம், வலிமை, பொழுதுபோக்கு என்று பலவிதமாகக் கலைகளின் நோக்கத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம். தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஊஞ்சலாட்டம், புலிவேடம், கோமாளி ஆட்டம், காவடியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், பச்சை குத்தும் கலை போன்றவை இன்றும் நடத்தப்படுகின்றன….

சிலம்பொலிச்செல்லப்பன் அவர்களின் 85 ஆம் பிறந்தநாள் விழா – இளங்கோ விருது வழங்கல்

 புரட்டாசி 5, 2045 / 21.09.2014 : தமிழறிஞர் சிலம்பொலிச்செல்லப்பன் அவர்களின் 85 ஆம் அகவை நிறைவை யொட்டிச், “சிலப்பதிகாரப் பெரு விழா’’ எனும் விழா சென்னை ஏ.வி.எம். இராசேசுவரி அரங்கில் நடைபெற்றது. காலையில், பிறந்த நாளை முன்னிட்டுச் சிலப்பதிகார அறக்கட்டளையை, தி.மு.க. பொதுச்செயலர்  பேராசிரியர் க.அன்பழகன்  தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, “இளங்கோ விருதினை’’ நீதியரசர் அரு.இலக்குமணன் அவர்கள் வழங்கினார். விருதுடன் ‘பூம்புகார் சிற்பி’ என்ற பட்டமும், ஓர் இலட்ச உரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்பட்டன….