பேரூராட்சிகளில் கொள்ளையோ கொள்ளை!

பேரூராட்சிகளில் கொள்ளையோ கொள்ளை! ஆண்டுதோறும் தணிக்கை செய்ய சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.   தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் நடைபெறும் கொள்ளைகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது மன்னன் இல்லாத கோட்டை, தண்ணீர் இல்லாத ஆறு, அதிகாரம் இல்லாத காவலர், மரங்கள் இல்லாத மலை, தெய்வம் இல்லாத கோயில் என அடுக்கிக்கொண்டே போவார்கள். திரைப்படங்களில் காண்பிப்பது போல போடாத சாலை, வெட்டாத கிணறு, கட்டப்படாத கழிப்பறைகள் எனக் கணக்கு காட்டி பணத்தைக் கொள்ளையடிப்பது உண்டு.   பொதுவாகத் தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிப்பகுதிகளில் பலவித முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன….

நுகர்பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாட்டம்

விலையில்லாப் பொருட்கள் வழங்கப்படுவதால் நுகர்பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாட்டம்   தேவதானப்பட்டிப் பகுதியில் விலையில்லா அரைவை, கலவை, விசிறி போன்றவை வழங்கப்படுவதால் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படக்கூடிய அரிசி, மண்ணெண்ணெய், சீனி, பருப்பு வகைகள் நிறுத்தப்பட்டுள்ளன.   விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும் பணியில் நுகர் பொருள் கடை ஊழியர்களும், வருவாய்த்துறை ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் வழங்கக்கூடிய   பங்கீட்டுப் பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கவில்லை. இதனால் இதனை நம்பி இருந்த ஏழை எளிய மக்கள் மிகவும் துன்பத்தில் உள்ளனர்….

கலைச்சொல் தெளிவோம்! 132&133. நடை வெருளி-Ambulophobia நிற்பு வெருளி-Stasibasiphobia

நடை வெருளி-Ambulophobia நிற்பு வெருளி-Stasibasiphobia நடக்க (1), நடக்கல் (1), நடக்கும் (5), நடத்த (2), நடத்தல் (1). நடத்தி (1), நடத்திசின் (1), நடந்த (5), நடந்து (8), நடப்ப (1), நடலைப்பட்டு (1), நடவாது (1), நடவை (2), நடன் (1), நடான (1), நடை (119), நடைய (1), நடையர் (1), நடையோர் (1), நில் (6) முதலிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. நடப்பதற்கும் நிற்பதற்கும் தேவையற்ற பேரச்சம் ஏற்படுவதுண்டு. இவையே நடை வெருளி-Ambulophobia நிற்பு வெருளி-Stasibasiphobia, Stasiphobia…

கலைச்சொல் தெளிவோம்! 131. நஞ்சு வெருளி-Iophobia

நஞ்சு வெருளி-Iophobia/Toxiphobia/Toxophobia/Toxicophobia நஞ்சு என்னும் சொல்லைச் சங்கப்புலவர்கள் 4 இடங்களில் பயன்படு்த்தி உள்ளனர். நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; (நற்றிணை : 355.7) கவை மக நஞ்சு உண்டாஅங்கு (குறுந்தொகை : 324.6) நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டாங்கு, அளி இன்மை (கலித்தொகை : 74.8)            நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, (புறநானூறு : 37.1) பிறர் நஞ்சு கொடுத்துக் கொல்வார்களோ என எண்ணி ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய நஞ்சு வெருளி-Iophobia , Toxiphobia, Toxophobia, Toxicophobia…

கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia

கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia    பணி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 9 இடங்களில் இடம் பெற்றிருந்தாலும், பணிவு அல்லது தாழ்தல் என்னும் பொருள்களிலேயே வந்துள்ளன. தொழில் என்னும் சொல்தான் 84 இடங்களில் பல்வகை வேலைகளையும் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. மருந்தில் கூற்றத்து அருந்தொழில் (புறநானூறு : 3.12) முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலில் (பரிபாடல் : 3.71) செய்தொழில் கீழ்ப்பட்டாளோ, இவள்? (கலித்தொகை : 99.12) தொழில் செருக்கு (அகநானூறு : 37.6) மழை தொழில் உதவ (மதுரைக்…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : முகவுரை

[இன்றைக்கு நாடகங்கள் அருகிவிட்டன. மேடை நாடகங்களும் சூழலுக்கேற்ற புரிதலைஉடைய பேச்சு வழக்காக உள்ளனவே தவிர, எப்பொழுதும் புரியும் தன்மையில் இருப்பதில்லை. நகைச்சுவை என்ற பெயரில் துணுக்குத் தோரணங்களாகப் பெரும்பாலான நாடகங்கள் உள்ளன. ஆனால்,நல்ல நாடகங்களைப் படைத்துத் தருவோர் நம்மில் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவராகக் கனடா அறிவியலர் சி.செயபாரதன் விளங்குகிறார். சீதையின் பிற்கால வாழ்வை அடிப்படையாகக் கொண்டு சீதாயணம் என்னும் பெயரில் அருமையான நாடகத்தை உருவாக்கியுள்ளார். இராமனின் மறுபக்கத்தைப் பெரும்பாலோர் மறைத்திருக்க, அதனை வெளிக்கொணருவோர் வேறு கருத்துலகில் உழலுவதால் ஏற்கப்படாச் சூழலே உள்ளது. இந்நிலையில்…

செயல் அலுவலரின் ஊழலாட்டங்கள்!

  திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலராக இருப்பவர் தங்கையன்.   இவர் ஒத்துழைப்பால் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில், 18 அகவைக்கும் குறைவான   இரியாசு என்ற வேட்பாளர் 11 ஆவது தொகுதிக்காகத் தேர்தலில் நின்றுள்ளார். தேர்தலில் நின்று வெற்றி பெற்று விட்டார். இவரை எதிர்த்து நின்ற இசட் 719. கூட்டுறவு வங்கித்தலைவர் சையது இபுராகிம் மனைவியின் உடன்பிறப்பு சியாவுதீன் அதிமுக வேட்பாளராக நின்று தோல்வியுற்றார். தற்பொழுது துணைத்தலைவராக இருக்கும் சுல்தான் மதிமுக சார்பில் போட்டியிட்டார். அப்பொழுது தோல்வியடைந்த வேட்பாளர்கள்,   18 அகவைக்கும்…

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 7 : இலக்குவனார் திருவள்ளுவன்

(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.]   வாழும் மூத்த மொழித் தகுதி             வாழ்விழந்த மொழிக்குத்தான் செம்மொழித் தகுதி தருவோம் எனக்கூறி உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கு அத்தகுதி மறுக்கப்படுவதால், ‘வாழும் மூத்தமொழி’ என்ற தகுதியைத் தமிழுக்குத் தந்து தமிழ்க்கண்டத்திலும் ஐ.நா. போன்ற உலக அமைப்புகளிலும்…

வடக்கு-கிழக்கில் வாழும் தமிழனின் திறந்த மடல்!

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து   விவாதத்திற்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பச் செய்திருக்கின்றது.   தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால் மட்டுமே பதிவு சாத்தியம் என்றும், தான் ஒருபோதும் பதிவு செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். இதனை அவர் தனது அரசியல்தந்திரமாக நினைத்திருக்கலாம். ஆனால் அவரது இக்கருத்தை மக்கள் எந்தளவிற்கு ஏற்பார்கள் என்பதும்…

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் : மாத இலக்கியக் கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாத இலக்கியக் கலந்துரையாடல் எமது புத்தாண்டு ஒருங்கிணைப்பு: வைத்திய கலாநிதி இலம்போதரன் நிகழ்ச்சி நிரல்: எமது புத்தாண்டு – காலக்கணித மரபு – கலாநிதி பால.சிவகடாட்சம் எமது புத்தாண்டு – தமிழர் மரபு – திரு.வே.தங்கவேலு (நக்கீரன்) எமது புத்தாண்டு – அறிவியல் மரபு – திரு.சிவ.ஞானநாயகன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: சித்திரை 12, 2046 / 25-04-2015 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் 3A, 5637, Finch avenue East, Scarborough,…

வரன்கொடை கொடுமைக்கு முடிவே இல்லையா?

திருமணங்கள் நரகத்தில் முடிவாகின்றன! மகளிர் நாளில் திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை   திருமணங்கள்   உம்பர் உலகில்(சொர்க்கத்தில்) உறுதிசெய்யப்படுகின்றன என்பது மக்கள் நம்பிக்கை. சில பெண்கள் திருமணத்தால் நரகவேதனைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது இன்றைய வழக்கம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளம்பெண்களைத் திருமணம் முடிப்பதும் அதன் பின்னர் அப்பெண்ணிற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மணவிலக்கு அளிப்பதும் வாழையடி வாழையாக இருந்துவருகிறது.   வரன்கொடை(வரதட்சணை) கொடுமை, மாமியார் கொடுமை, கணவன் கொடுமை ஆகியவற்றைப் பொறுத்துக்கொண்டாலும் ஏன் என்று கேள்விகேட்டால் திருமண விலக்கு அதாவது விவாகரத்து உடனடியாக வழங்கி…

தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்? – கவிமணி

வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்; வந்தமத வேழம் வணங்கிடுமே; – சந்தமெழப் பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்? – கவிமணி தேசிகவிநாயகம் (பிள்ளை)