தமிழா எங்கே உன் தாய்? – பாவலர் கருமலைத்தமிழாழன்

உறுதி   ஏற்பாய் ! அன்னையினை   இழிவுசெய்யும்   தமிழா !   வீட்டில்             அருந்தமிழைக்   கொலைசெய்யும்   தமிழா !   நாட்டில் உன்மொழியை   ஏளனமாய்ப்   பேசிப்   பேசி             உயர்மொழியைத்    தாழ்வுசெய்து    கீழ்மை   யானாய் முன்னோர்கள்   வழிவழியாய்ப்   பேணிக்   காத்த             முத்தமிழில்   பிறமொழியின்   மாசைச்   சேர்த்து விண்வெளியில்   ஓசோனைக்   கெடுத்த   தைப்போல்             விளைவித்தாய்   ஊறுதனைத்   தூய்மை   நீக்கி ! வீட்டிற்குள்    புதையலினை   வைத்துக்   கொண்டு             வீதியிலே   எச்சிலிலை    பொறுக்கு   கின்றாய் காட்டிற்கே   எரித்தநிலா   போன்று   சங்கக்             கவின்நூல்கள்   வீணாகக்    கிடக்கு   திங்கே…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்

அனைவருக்கும், வணக்கம் ! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியை உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization,USA ) ஒருங்கிணைக்கின்றது. அனைவரும் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகின்றோம். நாள்: வைகாசி 03, 2046 /  05/17/2015 – ஞாயிற்றுக் கிழமை  நேரம்: மாலை 12.30 – மாலை 3.00 மணி (கிழக்கு நேரம்) [இடம்: Cascades Senior Center, 21060 Whitfield Pl,Sterling, VA 20165] – தரவு :  நாஞ்சில் பீட்டர்

பாளமாய் ஆனதே நேபாளம்! – உருத்ரா

மலை மடிப்புக்குள்ளிருந்தும் மண் பாம்பின் சீற்றமா? பாளம் பாளமாய் ஆனதே நேபாளம். நசுங்கிய உடல்கள் திண்காரைப் பிணங்களாய் என்னே அவலம்!. செங்கல் நொறுங்கிய குவியல்களில் தொன்மைப்படிவங்களும் தொலைந்து கிடக்கின்றன. குரல்கள் அவிழ்க்கும் முன் உயிர்ப்பூக்கள் கூழாய்ப்போயின. ஊழிக்கூத்தின் உடுக்கைகள் கோவில்களில் அதிர்ந்து காட்டிய போதெலாம் கண்களில் ஒற்றிக்கொண்டோமே ஒத்திகை தான் அது என‌ இன்று காட்டினானோ அந்த சிவன். எண்ணிக்கை தெரியாத குற்றமல்ல. கிடைக்கின்ற கைகளும் கால்களும் முழுக்கணக்கு காட்டும்போது நம் மூச்சடங்கி அல்லவா போகிறது பெரும் அதிர்ச்சியில். அந்த மக்களுக்கு நாம் தோள்…

தொடர்சொற்பொழிவு : மணிமேகலை நிறைவும் பெரியபுராணம் தொடக்கமும்

  வேனில் விழா வாணாள் உறுப்பினர் அட்டை வழங்கல் விருது வழங்கல் சித்திரை 27, 2016 / மே 10, 2015 சென்னை (தலைநகர்த் தமிழ்ச்சங்க வளாகம்)

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 23 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) காட்சி – 23 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     மரக்கிளை நிலைமை  :     (பள்ளி செல்லும் பிள்ளைகள் பற்றி செல்லப்பேடு வினவுது இங்கே) ஆண்   :  என்னப்பேடே! பார்க்கின்றாய்? என்னவோ நாட்டில் நடந்ததுபோல்! பெண்   :  பெற்றோர் தவிக்கும் திங்களென கற்றோர் பலரோ சொல்கின்றார்! ஆண்   :  எங்கும் பள்ளி தொடங்குகின்ற திங்களன்றோ? இத்திங்கள்! பெண் :   வித்தகனாக்கத் தன் பிள்ளையை! அத்தனை துன்பமா? பெற்றோர்க்கு! ஆண்  …

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு : நிறைவு – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு (ஏன் படிக்க வேண்டும்?)   முன்சொல்    16-ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த போர்த்துக்கீசியப் பாதிரி அன்றீக்கு அடிகளார் கிறித்துவ மதத்தைப் பரப்ப வேண்டி, தமிழகத்து முத்துக்குளித்துறைப் புன்னைக்காயலில் உள்ளூர் மக்களாகிய பரவரிடையே வாழ்ந்து அவர்கள் பேசிய தமிழைப் படித்தார். தாம் படித்த தமிழைப் பிற பாதிரிமாருக்குக் கற்பிக்கவேண்டி ஒரு கையேடு தயாரித்தார். அதுவே “மலபார் மொழிக் கருவி (Arte Da Lingua Malabar)” என்ற கையேடு….

மொழித் தூய்மை உலகோர் வேண்டுவது

  “தூய தமிழ் என்றால் இன்று எள்ளுவோர்களும் உளர். ஆங்கிலத்தைப் பார்” என்று அதன் கலப்புத் தன்மையைச் சுட்டிக் காட்டுவர். ஆங்கில மொழியின் வரலாற்றை அவர் அறியார். அங்கும் தூய ஆங்கிலம் வேண்டும் என்ற இயக்கம் தோன்றியுள்ளது. தூய ஆங்கில இயக்கம் (Society for Pure English) என்றே பெயரிட்டனர். அது 1913இல் தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கியவர்கள் அந்நாட்டுப் பெரும் புலவர்கள். அதைத் தோற்றுவிக்க முதன்மையாய் இருந்தவர் அந்நாட்டு அரசவைப் புலவர்.   அதற்கு முன்பு அந்நாட்டில் வேற்றுமொழிச்சொற்களை ஆங்கில மொழியில் கலப்பதை வெறுக்கும் கொள்கை…

பார்க்கும் இடமெல்லாம் பைந்தமிழே!

  உழவும் கலப்பையும் காரும் கயிறும் குண்டையும் நுகமும் சாலும் வயலும் வாய்க்காலும் ஏரியும் மடுவும் ஏற்றமும் பிறவும், பயிரும் களையும் நட்டலும் கட்டலும் முதலாய ஏரெழுபதும் தமிழ் மொழிகளால் இயன்றனவே.   தமிழர்கள் வசித்துவரும் வீடுகளின் கூறுகளாகிய தலைக்கடையும் புழைக்கடையும் கூரையும் வாரையும் கூடமும் மாடமும் தூக்கும் தூணும் கல்லும் கதவும் திண்ணையும் குறமும் தரையும் சுவரும் மண்ணும் மரனும் மற்றவும் தமிழே.   தலையும் காலும் கண்ணும் காதும் மூக்கும் மூஞ்சியும் வயிறும் மார்பும் நகமும் சதையும் நாவும் வாயும் பல்லும்…

உயர்திணை, அஃறிணைப் பாகுபாடு தமிழரின் நுண்ணறிவிற்கு அடையாளம்

  ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லதிகார முதலிலேயே உலகியற் பொருள்களை உயர்திணையென்றும், அஃறிணையென்றும் பகுத்தோதினார்.   எம் அரிய நண்பர்கள்! இப்பாகுபாட்டின் அருமையும் நுட்பமும் நாமுணராதிருக்கின்றோம். பிறமொழிகளில் எங்காயினும் இத்தகைய நுண்பகுப்பு உளதா என்று ஆராய்வோமாயின் அப்போது இதன் பெருமை நன்கு தெளியக் கிடக்கும். ஆங்கில முதலான மேல்நாட்டு மொழியிலெழுதப்பட்ட இலக்கண நூல்களை இடைவிடாது எழுத்தெழுத்தாய் ஆராய்ந்து பார்ப்பினும் அற்றின்கண் இவ்வுரிமையை பெரிய இலக்கணப் பாகுபாடு ஒரு சிறிதுங் காணப்படாது, அன்றி, இந்திய நாட்டிற் சீர்த்தி பெற்ற மொழியாய்ப் பயிலப்படும் வடமொழியிலேனும் இம்முறையுண்டோ வெனின் ஆண்டும்…

தமிழர்க்குரியனவற்றை ஆரியர் தமக்குரியன என்றனர்

 இவ்வாறு தத்துவ ஞானங்களும் அவை திருத்த விளக்கிய உபநிடதம், சிவாகம் முதலியனவும் தமிழர்க்கே உரியனவாய்ப் பின் ஆரியராற்றமிழரிடமிருந்து பெறப்பட்ட ஆரிய இரவற்பொருணூல்களாய் நிலைப்பவும், இஞ்ஞான்றை ஆரியர் அவை தமக்கே உரியன எனவும், அவை தம்மைத் தமிழர் ஓதப் பெறார் எனவும் கூறுதல் சிறுமகரானும் எள்ளிநகையாடற்பாலதாம் இஞ்ஞான்றை ஆரியர் தமிழர் செய்த நன்றியைச் சிறிதும் ஓராது தீட்டின மரத்திற் கூர் பார்த்தல் ஒப்ப, நமக்கு அறிவு கொளுத்திய பண்டைத் தமிழ் மக்கள் மரபினராம் நம்மனோர்பாற் செய்து போதரும் படித்தொழுக்கம் மிகப்பெரிது! அவர் படிற்றொழுக்க இயல்பு இணைத்தென்றறியாத…

வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!

வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்! குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தை, தமிழ் மொழியை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழ் மரபை, இவற்றின்வழி தமிழ் இனத்தைக் காப்பதற்காகத் தொல்காப்பியம் இயற்றியவர்தான் அறிஞர் தொல்காப்பியர். ஆனால், அவரது படிமத்தை நிறுவுவதற்கான கால்கோள்விழாவில் ஆரியமொழியில் பூசை! என்ன கொடுமை இது! ஒருவேளை பூணூல் அணிவித்துத் தொல்காப்பியருக்குப் படிமம் எழுப்ப இருக்கிறார்களோ என்று தெரியவில்லை. ஆரியப்பூசாரியாக இருந்தாலும்…