சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 831-850
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 822-830– தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 831-850 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 831. க்ருக(ஹ)ம் – வீடு 832 ஆகாச(ஸ)ம் – வெளி, விண் 833. ச(ஸ)ந்தோச(ஷ)ம் – மகிழ்ச்சி 834….
தோழர் தியாகு எழுதுகிறார் 215 : காலுடுவெல் கலைவண்ணம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 214 : வான்தொடு உயரங்கள் தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார்காலுடுவெல் கலைவண்ணம் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இராபருட்டு காலுடுவெல் முதலில் திருத்தொண்டராக 1838இல் சென்னைக்கு அனுப்பப்பட்டு, 1841இல் இடையன்குடி வருவதற்கு முன்பே அப்பகுதியில் கெரிக்கு, சத்தியநாதன் ஆகியவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். கிறித்துவத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு சிறு கூட்டமும் உருவாகியிருந்தது. இவர்கள் வழிபாடு செய்வதற்காக ஒரு சிறிய ஆலயமும் கட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கிறித்தவர்களை முறையாக வழிநடத்த முழுநேரத் திருத்தொண்டர்கள் இல்லை. எனவே அவர்கள் முழுமையாகக் கிறித்துவத்தில் ஊன்றி நிற்கவில்லை. காலுடுவெல்…
5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ
சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்ஆசியவியல் நிறுவனம், சென்னைஉலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு ஏப்பிரல் 5-7, 2024 5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோசெரட்டன் இலிசில் நேப்பெர்வில்லி உறைவகம்SHERATON LISLE NAPERVILLE HOTEL
தோழர் தியாகு எழுதுகிறார் 214 : வான்தொடு உயரங்கள்
(தோழர் தியாகு எழுதுகிறார் 213 :தமிழ்ப் பணி, பின் ஆலயப் பணி) தோழர் தியாகு எழுதுகிறார்வான்தொடு உயரங்கள் இனிய அன்பர்களே! வட அமெரிக்கா என்பது புவியியல் நோக்கில் ஒரு கண்டத்தைக் குறிப்பது போல் அரசியல் நோக்கில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் குறிக்கும் சொல்லாக ஆளப்படுகிறது. வட அமெரிக்காவின் அரசியல் தலைநகராக வாசிங்குடன் உள்ளது. வாசிங்குடன் என்ற பெயரில் ஒரு மாநிலமும் (அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு நாடு) இருப்பதால் தலைநகரம் வாசிங்குடன் – Washington D.C. எனப்படுகிறது. DC என்றால் District of Columbia….
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 14 : முதிர்பருவம் – தொடர்ச்சி) ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 1928-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் முதல் தேதி முதல் நான் அரசு வேலையிலிருந்து விலக வேண்டி வரும் என்று முன்பே அறிந்திருந்தபடியால் அதற்காக அது முதல் என் வாழ்நாட்களை எப்படி கழிப்பது என்று ஒரு தினசரிப் பட்டி ஏற்படுத்திக்கொண்டேன். அதை எழுது முன் எனது நண்பர்களில் பலர் நீ ஏன் மறுபடியும் வழக்குரைஞராகப் பழகலாகாது என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அன்றியும் சனவரி மாதம் 31-ஆந்தேதி என்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 53 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 52 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2) அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 1/2 மாயூரத்திற்குச் சென்ற மூன்றாம் நாள் ‘பாடங் கேட்க ஆரம்பித்துவிட்டோம்’ என்ற சந்தோசத்தில் நான் மூழ்கினேன். “சாமா, நீ இன்றைக்கு நைடதம் கேட்க ஆரம்பித்ததே நல்ல சகுனம். கலியின் தொல்லைகள் நீங்குவதற்கு நைடதத்தைப் படிப்பார்கள். இனிமேல் நம் கட்டம் தீர்ந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்” என்று என் தந்தையார் சொன்னார். அது வாசுத்தவமென்றே நான் நம்பினேன். மனிதன் முயற்சி செய்வதெல்லாம் ஏதாவது நம்பிக்கையை…
தோழர் தியாகு எழுதுகிறார் 213 :தமிழ்ப் பணி, பின் ஆலயப் பணி
(தோழர் தியாகு எழுதுகிறார் 212 : “ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்”-தொடர்ச்சி) தமிழ்ப் பணி, பின் ஆலயப் பணி இனிய அன்பர்களே! வரலாற்றில் சுவடு பதித்த பெருமக்களை வெறும் அறிவூற்றுகளாகப் பார்த்தலும் பார்க்கச் செய்தலும் போத மாட்டா. அவர்களைக் குருதியும் சதையுமாக அறிதலும் அறியச் செய்தலும் வேண்டும். காலம் நீண்டு கரைந்த பின் இதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்போதும் கூட அவர்களின் அறிவுப் படைப்புகள் அல்லாத பொருண்மியப் படைப்புகள் அவர்களைக் கற்கப் பேருதவியாகும். அவ்வுலகியத்தில் ஆழ்ந்த சமயக் குருமார்களைப் பொறுத்த வரை அவர்களின் இவ்வுலகிய…
ஊரும் பேரும் 48 : இரா.பி.சேது(ப்பிள்ளை): தளியும் பள்ளியும்
(ஊரும் பேரும் 48 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும் 3- தொடர்ச்சி) ஊரும் பேரும் தளியும் பள்ளியும் திருவாரூர்-மண்தளி குகைக் கோயில்களும் கற் கோயில்களும் தோன்று முன்னே, மண்ணாலயங்கள் பல இந் நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பழமையான நகரமாகிய திருவாரூரில் உள்ள பாடல் பெற்ற கோயில்களுள் ஒன்று மண்தளி என்று குறிக்கப்படுகின்றது. அம் மண்தளியில் அமர்ந்த மகாதேவனை, “தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர் அம்மானே பரவையுள் மண்டளி யம்மானே” என்று சுந்தரர் பாடும் பான்மையால், தமிழ்ப்புலமை…
தோழர் தியாகு எழுதுகிறார் 212 : “ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்”
(தோழர் தியாகு எழுதுகிறார் 211 : ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும் – தொடர்ச்சி) “ஐம்பது பவுனும் ஐந்நூறு தலைக்குத்தும்” இடையன்குடியின் பழங்குடிகளான நாடார்கள், அவர்களின் பனையேறும் தொழில், அவர்கள் வாழ்ந்த குடிசைகள்… இவை எல்லாவற்றையும் பற்றி இரா.பி. சேதுப்பிள்ளை எழுதுவதைப் படித்த பின்… இன்றைக்குள்ள இடையன்குடியைப் பார்க்கும் போது வியப்பாக இருந்தது. “இத்தகைய செம்மணற்பரப்பிற் சிறந்தோங்கி வளரும் பனைமரங்கள் கண்களைக் கவர்ந்து குளிர்விக்கும் செழுமை வாய்ந்தனவாம். பிளந்த கள்ளியும் விளிந்த முள்ளியும் நிறைந்த தேரியினில் கற்பகத்தருவெனத் தழைத்துச் செழித்து வளரும் பனைகளே அந்நிலத்தில்…
தோழர் தியாகு எழுதுகிறார் 211 : ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும்
(தோழர் தியாகு எழுதுகிறார் 210 : நடந்தார் வாழி காலுடுவெல்! – தொடர்ச்சி) ஒட்டிய மண்ணும் ஒட்டாத மணலும் இனிய அன்பர்களே!தேரிக்காடு என்று முதன்முதலாக எப்போது கேள்விப்பட்டேன், தெரியுமா? கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கரும்பொன்ம ஈரயிரகை (Titanium dioxide) ஆக்கம் செய்யும் தொழில் அமைக்க (இ)டாடா குழுமம் மாநில அரசோடு புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்தது. தேரிக்காட்டில் கடலோரத்திலிருந்து தொடங்கி பலநூறு சதுரக்கல் பரவிக் கிடக்கும் தாது மணலைத் தோண்டியள்ளி வேதிச் செயல்வழிகளின் ஊடாகப்…
தமிழ் வளர்த்த நகரங்கள் 6. – அ. க. நவநீத கிருட்டிணன் : மதுரையின் மாண்பு
(தமிழ் வளர்த்த நகரங்கள் 5. – அ. க. நவநீத கிருட்டிணன் : தமிழ் வளர்த்த சங்கங்கள் 2/2 -தொடர்ச்சி) அத்தியாயம் 3. மதுரையின் மாண்பு இனிமையான நகர் மதுரை தமிழகத்தின் முதன்மையான நகரமாகவும் பாண்டிய நாட்டின் பழமையான தலைநகரமாகவும் இரண்டாயிரம் ஆண்டுகளாக விளங்கிவரும் இணையிலாப் பெருமையுடையது மதுரைமாநகரம். மதுரை என்ற சொல்லுக்கு இனிமையென்பது பொருள். என்றும் இனிமை குன்றாத தனிப்பெருநகரமாகச் சிறப்புற்று விளங்குவது இந்நகரம். இதனை முதற்கண் தோற்றுவித்த பாண்டியன், நகரைத் தூய்மை செய்தருளுமாறு இறைவனை வேண்டினான். மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரப்பெருமான் தன்…
ஆளுமையர் உரை 64,65 & 66 : இணைய அரங்கம்: 17.09.2023
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி (திருவள்ளுவர், திருக்குறள் 418) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 64,65 & 66 : இணைய அரங்கம் ஆவணி 31, 2057 ஞாயிறு 17.09.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: உரைச்சுடர் செல்வி ந.காருண்யா “தமிழும் நானும்”…
