தோழர் தியாகு எழுதுகிறார் 220 : அவலமான கல்விச் சூழல் 1/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 219 : உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா? – தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார்அவலமான கல்விச் சூழல் 1/2 இனிய அன்பர்களே! தமிழ்நாட்டின் கல்விநிலை குறித்துக் கவலைப்படுவதில் இளைஞர் அரண் தனித்து விடப்படவில்லை. சவகர் நேசன் போன்ற கல்விச் சிந்தனையாளர்கள் இந்நிலை குறித்து மிக ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டு வருகின்றோம். மாநிலக் கல்விக் கொள்கையில் என்ன எதிர்பார்க்கிறோம் எனபது குறித்து சூன் 10ஆம் நாள் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வியாளர்களும் பேராசிரியர்களும் புதிய…

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி

தமிழ்ப் புத்தகத் திருவிழா, பெங்களூருசிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி 1.11.2022 முதல் 31.10.2023 வரை வெளியிடப்பட்ட அனைத்து வகையான நூல்களும் விண்ணப்பிக்கத் தகுதிக்குரியன.பின்வரும் பரிசுகள் வழங்கப் பெறும்.முதல் பரிசு உரூ.5,000/-இரண்டாம் பரிசு உரூ. 3,000/-மூன்றாம் பரிசு உரூ. 2,000/-3 ஊக்குவிப்புப் பரிசுகள் – ஒவ்வொன்றும் உரூ.1,000/- தொடர்பிற்கு : 6363118988 ; tamilbookfestivalblr@gmail.com விண்ணப்பிப்போர் 2 நூல்கள், நூலாசிரியர் ஒளிப்படம், நூலாசிரியர் குறிப்பு, பதிவுக்கட்டணம் நூலொன்றுக்கு உரூ.500இற்கான கேட்போலை அளிக்க வேண்டும்.நூலோ பதிவுக்கட்டணமோ திருப்பியளிக்கப்படமாட்டாது.விண்ணப்பங்கள் முழு விவரங்களுடன் வர வேண்டிய இறுதி நாள்…

தொல்காப்பிய மன்றம், கனடா, ஆண்டு விழா

புரட்டாசி 06, 2054 சனி 23.09.2023 மாலை 6.00 கனடா, தொல்காப்பிய மன்றத்தின் 8 ஆம் ஆண்டு நிறைவு விழா தமிழிசைக் கலைமன்றம், இசுகார்பரோ அழைப்பிதழ் காண்க. முனைவர் செல்வநாயகி சிரீதாசு

ஊரும் பேரும் 49 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஈச்சுரம்

(ஊரும் பேரும் 48 : இரா.பி.சேது(ப்பிள்ளை): தளியும் பள்ளியும்- தொடர்ச்சி) ஊரும் பேரும் ஈச்சுரம்    ஈசன் என்னும் பெயராற் குறிக்கப்படுகின்ற சிவபிரான் உறையும் கோயில் ஈச்சுரம் எனப்படும். தேவாரப் பாமாலை பெற்ற ஈச்சுரங்கள் பல உண்டு. அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துரைத்தார் திருநாவுக்கரசர்.       “நாடகமாடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம்       நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கான       கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்       குக்குடேச்சுரம் அக்கீச்சுரம்” என்று கூறிச் செல்கின்றது அவர் திருப்பாசுரம். நந்தீச்சுரம்    இக் காலத்தில் மைசூர் என்று பெயர் பெற்றுள்ள எருமை…

தோழர் தியாகு எழுதுகிறார் 219 : உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா?

(தோழர் தியாகு எழுதுகிறார் 218 : அறிவும் அறமும் மக்கள் பக்கம் நிற்பதற்கே!- தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார்உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா? இனிய அன்பர்களே! கல்வி பெறுவது மக்கள் உரிமை! கல்வி தருவது அரசின் கடமை! என்பது கல்வி உரிமையை வலியுறுத்துகிற நாம் தரும் முழக்கம். ஒரு சிலர் கேட்கின்றனர்: அரசினால் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி தர முடியுமா? இது கட்டுப்படியாகுமா? என்று சிலர் கேட்கின்றனர்: அரசின் நிதி நிலைக்கு இது சரிப்படுமா? வரவுக்கு மேல் எப்படிச் செலவு செய்ய…

தமிழ் வளர்த்த நகரங்கள் 7 – அ. க. நவநீத கிருட்டிணன் : இலக்கிய மதுரை

(தமிழ் வளர்த்த நகரங்கள் 6 – அ. க. நவநீத கிருட்டிணன் : . மதுரையின் மாண்பு தொடர்ச்சி) அத்தியாயம் 4. இலக்கிய மதுரை மாங்குடி மருதனார் காட்டும் மதுரை தென்னகத்தின் தொன்னகரும் தமிழகத்தின் தலைநகருமாகிய மதுரையை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்கப் புலவர்கள் முதல் இற்றை நாள் புலவர்கள் ஈறாகப் பலரும் புகழ்ந்து பாடியுள்ளனர். மதுரை மாநகரின் மாண்பினை விரிவாக எடுத்து விளக்கும் இலக்கியங்களும் பலவுள, அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன மதுரைக்காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம், திருவிளையாடற்புராணம் என்னும் நான்கு நூல்களுமாகும். கடைச்சங்கத் தொகை…

தோழர் தியாகு எழுதுகிறார் 218 : அறிவும் அறமும் மக்கள் பக்கம் நிற்பதற்கே!

(தோழர் தியாகு எழுதுகிறார் 217 : குடியாட்சியமும் கல்வியும் – தொடர்ச்சி) அறிவும் அறமும் மக்கள் பக்கம் நிற்பதற்கே! இனிய அன்பர்களே! “மிகினும் குறையினும் நோய் செய்யும்” என்ற வள்ளுவர் வாக்கு மருந்து அதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பினும் பொதுவாக எல்லா நிலைமைகளுக்கும் பொருந்தும் படியானதே.!அந்தத் திருக்குறள் முழுவதையும் பார்த்தோமானால் மேலும் சுவையான முடிவுகள் பெறப்படும்.“மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்வளி முதலா எண்ணிய மூன்று.” திருக்குறள் 941.மு. வரதராசனார் உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்…

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் , 1. தமிழ்க்கலை

(தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்): முன்னுரை – க. அன்பழகன் – தொடர்ச்சி) 1. தமிழ்க்கலை (சென்னை  ஒய்.எம்.சி.ஏ. பட்டி மன்ற முதல் ஆண்டு நிறைவிழாவில் பேசியது) தமிழ் நாட்டில் சில காலமாகப் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. அவ்வுணர்ச்சி ஆக்கத்திற்குப் பயன்படுமாக! இத்தகைய பட்டிமன்றங்கள் பல இந்நாட்டில் காணப்படல் வேண்டும். இயற்கைக்கு மாறான கொள்கைகளை அழித்துவிடுங்கள். ஆனால், இயற்கை நெறிப்பட்ட கொள்கைகள் இன்று அழிக்கப்பட்டு வருதலைக்காண வருந்துகிறேன். அது கூடாது. இத்துறையில் சிறப்பாக மகளிர் முயற்சி செய்தல் வேண்டும். ஆடல், பாடல், நகைச்சுவை இவை பெரிய கலைகளாம். என்…

தோழர் தியாகு எழுதுகிறார் 217 : குடியாட்சியமும் கல்வியும்

(தோழர் தியாகு எழுதுகிறார் 216 : கலைமகள் எனும் தொன்மம்-தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார்குடியாட்சியமும் கல்வியும் இனிய அன்பர்களே! படிக்க வேண்டும்! ஏன் படிக்க வேண்டும்? நல்ல வேலைக்குப் போய்ப் பொருளீட்டுவதற்காகப் படிக்க வேண்டும். படிக்கா விட்டால் மற்றவர்களோடு போட்டியிட்டு முன்னேற முடியாதல்லவா? சுருங்கச் சொல்லின் வாழ்க்கைக்கு அணியமாக வேண்டும் என்பதற்காகவே கல்வி! இதுதான் கல்வி பற்றிப் பரவலாக நிலவும் நம்பிக்கை. இதை மறுத்த கல்வியாளர் அமெரிக்காவைச் சேர்ந்த அறிஞர் சான் தெவி. இவர் அம்பேத்துகரின் ஆசிரியர். “கல்வி என்பது வாழ்க்கைக்கு அணியமாதல் அன்று….

பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்

(பூங்கொடி 14 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகை – தொடர்ச்சி) பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல் பூங்கொடி கண்ணிர் புத்தகம் நனைத்திட ஆங்கது கண்ட அருண்மொழி வெதும்பிக் கண்ணிர் மாற்றிக் கவலையை ஆற்ற எண்ணினள் குறுகி, ஏனோ கலங்கினை? மக்கள் கலக்கம் மாற்றிடல் ஒன்றே  25 தக்கதென் றெண்ணிச் சார்ந்தனம் ஈண்டு ; நாமே கலங்குதல் நன்றாே ? நம்பணி ஆமோ பூங்கொடி! அவலம் விட்டொழி மலர்வனம் சென்று மாற்றுக் கவலை அலர்பூங் காவுள் ஆறுதல் கிட்டும் ; 30 பூம்பொழில் தந்திடும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 216 : கலைமகள் எனும் தொன்மம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 215 : காலுடுவெல் கலைவண்ணம்-தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார்கலைமகள் எனும் தொன்மம் இனிய அன்பர்களே! தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கொள்கை அறிக்கையில் தமிழ்த் தேசியத்துக்கும் சமூக நீதிக்குமான இடையுறவை விளக்கப்படுத்தப் பாவலர் பாரதிதாசனிடமிருந்து நான் எடுத்துக்காட்டிய கவிதை வரிகள் –“சாதி ஒழித்தல் ஒன்று – நல்லதமிழ் வளர்த்தல் மற்றொன்றுபாதியை நாடு மறந்தால் – மற்றப்பாதி துலங்குவதில்லை.” பாரதிதாசனின் இந்த வரிகள் “பாரதி உள்ளம்” என்ற கவிதையில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க செய்தி. இந்த வரிகளின் அடிப்படையில் பாரதியைச் சாதி…

தொல்லியல் கருத்தரங்கம், தஞ்சாவூர்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மாநிலக் கருத்தரங்கம் அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு  வரலாறு நாள் :  சித்திரை 04 & 05, 2054 ++++++ 21& 22.09.2023 இடம் : தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் பத்து அமர்வுகள் – விவரம் அழைப்பிதழில் முதல் அமர்வில்  மூன்றாவது கட்டுரையாளர் இலக்குவனார் திருவள்ளுவன் – இலக்குவனார் குறிப்பிடும் மாமூலனார் புலப்படுத்தும்வரலாற்றுச் செய்திகள்