வாக்காளர் ஆத்திசூடி – இலக்குவனார் திருவள்ளுவன்

வாக்காளர் ஆத்திசூடி அளவிலா மதிப்புடைய வாக்குரிமையைப் பயன்படுத்த வாக்களிப்பீர்! ஆற்றல் மிக்கவரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பீர்! இன்னலைத் துடைக்க வருவோரைத் தேர்ந்தெடுப்பீர்! ஈடிலாச் சிறப்புடைய வாக்குரிமையைப் பயன்படுத்துவீர்! உங்களுக்காக உழைப்பவரைத்தேர்ந்தெடுப்பீர்! ஊக்கமுடன் செயல்படுவோரைத் தேர்ந்தெடுப்பீர்! எளிமையைக் கடைப்பிடிப்பவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஏற்றம்தரும் வல்லவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஐந்தாண்டுகளுக்குப் பொறுப்பானவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஒற்றுமைக்கு வழிவகுப்பவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஓங்குபுகழ் தருபவரைத் தேர்ந்தெடுப்பீர்! ஓளவியம்இல்லாதாரை(ஏய்க்காதவரை)த் தேர்ந்தெடுப்பிர்! – இலக்குவனார் திருவள்ளுவன் [வாக்காளருக்கான வேண்டுகோள் முழக்கங்கள் ஆத்திசூடி என்னும் பெயரில் தரப்பட்டுள்ளன.]

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி- த.மா.கா. சார்பில் திருச்சியில் மாபெரும் மாநாடு

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி – த.மா.கா. சார்பில் திருச்சியில்  மாபெரும் மாநாடு  6 கட்சித் தலைவர்கள்  உரையாற்றினர். மக்கள் நலக்கூட்டணி:   நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி-த.மா.கா. சார்பில் அமைக்கப்பெற்ற கூட்டணி 234 தொகுதிகளிலும்  போட்டியிடுகின்றது. வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.   கூட்டணியின் முதல்- அமைச்சர் வேட்பாளரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான விசயகாந்து,  தலைமையில்  மாநாடு நடைபெற்றது.   ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர்  இராமகிருட்டிணன், இந்தியப் பொதுவுடைமைக்  கட்சியின் மாநிலச்…

வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! – வ.கோவிந்தசாமி

வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை!   இந்தியச் சனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை! மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை! அடிமை வாழ்வை எண்ணி – அதில் கொடுமை நிலையெண்ணி விடுதலை வேட்கையிலே – அன்று வீரர் பலர் இருந்தனர் – அவர்கள் நித்தம் நித்தம் தம் நிலையை எண்ணி – தம் சித்தம் கலங்கி நின்றார் – அன்று சிந்தையில் துணிவு கொண்டார். யுத்தம் பல புரிந்து இரத்தம் பலர் சொரிந்து பெற்றது இந்தக் குடியரசு – அதை நன்றே பேணும் புவியரசு….

வாக்குகளுக்கு ஏனோ விலை? – சா.சந்திரசேகர்

வாக்குகளுக்கு ஏனோ விலை? பொழியுது வாக்குறுதி மழை வாக்குகளுக்கு ஏனோ விலை நயமாகப் பேசுவது தான் அரசியல் கலை நல்லோருக்கு வாக்களித்து மற்றோருக்கு வைப்போம் உலை                                           – சா. சந்திரசேகர் கவிதைமணி, தினமணி 17.11.2015

மின் விளக்கைத் தாமசு எடிசனும், ஊழலைக் கருணாநிதியும் கண்டுபிடித்தனர் – விசயகாந்து தாக்கு

மின் விளக்கைத் தாமசு எடிசனும், ஊழலைக் கருணாநிதியும் கண்டுபிடித்தனர் – விசயகாந்து தாக்கு பல்பை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஊழலைக் கண்டுபிடித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியின் மாபெரும் மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி மாநாடு திருச்சியில் புதனன்று நடைபெற்றது. மாநாட்டில் பேசிய விசயகாந்து, ”தமிழக முதல்வர் செயலலிதா, மக்களைத் தமது குழந்தைகள் என்கிறார். அப்படியென்றால் தமது சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு எழுதிக்கொடுத்துவிட வேண்டியதுதானே! மின்…

தவறாமல் வாக்களிப்போம்! தக்கவர்க்கு வாக்களிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தவறாமல் வாக்களிப்போம்! தக்கவர்க்கு வாக்களிப்போம்! தேர்தல் நாள் – வைகாசி 03, 2047 / மே 16, 2016     தேர்தல்நாளில் வாக்களிப்பது நம் கடமை. கட்சித்தலைவர்கள் உட்பட பலரும் “நீங்கள் யாருக்காவது வாக்களியுங்கள். ஆனால்,தவறாமல் வாக்களியுங்கள்” என்கின்றனர்.    வாக்களிப்பது நம் உரிமை! அதனைத் தக்கவர்க்கு அளிப்பதே நம் கடமை!   நம்மை ஐந்தாண்டுகள் ஆளப்போகிறவர்கள் நம் குறைகளைக் களைபவர்களாகவும் நமக்கு உற்றுழி உதவுநர்களாகவும் இருக்க வேண்டும். யாருக்கோ வாக்களிப்பதன் மூலம் நாம், நம் கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள்  ஆவோம்!  அதுபோல்…

திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! – கோ. மன்றவாணன்

திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! விரலில் கருப்பு மை வைக்கும்போதே தெரியவில்லையா… நம்நாடு நம்மக்களை நம்பவில்லை என்று! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் தரும் அட்சயப் பாத்திரம் ஆவோம் என்பவர்கள்… தேர்தலுக்குப் பிறகு எங்கள் திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! விதிமீறல்களை வேடிக்கை பார்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்புதானோ தேர்தல் ஆணையம். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்பது கனவு சனநாயகம். மந்திரிகள் மட்டுமே மன்னர்கள் ஆவது நவீன சனநாயகம்! ஊழலில் சிதறிய ஒரு சொட்டே வெள்ளமாய்ப் பாயும் விந்தையைப் பார்க்கலாம் தேர்தல் திருவிழாவில் மட்டுமே! பணம் வாங்கி வாக் களித்த…

மாற்றத்தை விரும்பும் மக்கள் – திருவாரூர்ச்செல்வன்

மாற்றத்தை விரும்பும் மக்கள்     கடந்த தேர்தல்களைவிட இத்தேர்தலில் மக்கள் மனநிலை மாறியுள்ளது. பொதுவாக இதற்குமுன்பும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினர். ஆனால் அவர் இல்லாவிட்டால் இவர், இவர் இல்லாவிட்டால் அவர்  என்பதுபோல், முந்தையத் தேர்தலில் புறக்கணித்தவரை இந்தத் தேர்தலில் புறக்கணித்தும் இந்தத் தேர்தலில் புறக்கணிப்பவரை அடுத்தத் தேர்தலில் வரவேற்றும் மாற்றத்தை வெளி்ப்படுத்தினர். இத்தகைய போக்கே இருமுதன்மைக் கட்சிகளுக்கும் திருந்திய பாதையில்  நடைபோடாமல் முந்தைய குற்றப்பாதையிலேயே விரைந்து செல்லும் தன்மையை உருவாக்கியது. இதனால்தான்  மக்கள் எதிர்த்தாலும் அரசே மதுவை விற்றல், தமிழ்வழிப்பள்ளிகளை மூடல்,…

மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும். – வைகோ

”மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்” – வைகோ   திருச்சி பஞ்சப்பூரில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா., கூட்டணியின் மாற்று அரசியல் வெற்றிக்கூட்டணி மாநாடு நேற்று இரவு நடந்தது. மாநாட்டுக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். மாநாட்டில் த.மா.கா., தலைவர் வாசன் பேசியதாவது: தமிழகத்தில், 50 ஆண்டுகளாக மாறிமாறி தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி செய்து விட்டு, அவர்களுக்குள் ஒருவரையொருவர் குற்றஞ் சொல்லி வருகின்றனர். இரு கட்சிகளின் அரசியலை மக்கள் நன்கு புரிந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி…

ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் – ஏகாந்தன்

ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் – ஏகாந்தன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அழகாக முகம் காட்டவே ஆடிக்கொண்டு வருகிறாய் உன் வருகையினாலே உவகை மிகக்கொண்டு அப்பாவி மக்கள் வாய்பார்த்து நிற்க அசராது பேசி மகிழ்வார் ஆயிரம் ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளி வீசி அசத்திடுவார் ஈவுஇரக்கம் எள்ளளவுமின்றி ஏய்த்துப் பிழைப்பார் எத்தியே மகிழ்ந்திடுவார் ஏதுமறியா ஏழைகளை ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் அயோக்கிய சிகாமணிகள்!  – ஏகாந்தன், புது தில்லி கவிதைமணி,  தினமணி 17.11.2015

ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா! – ‘இளவல்’ அரிகரன்

ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா! பொய்களின் ஊர்வலங்கள் அணிவகுக்க, ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா……. அரசியல்வாதிகளின் குழப்பங்களால் அவ்வப்பொது அதற்கு முன்பாகவே வரும் பெருவிழா……. ஒருநாள் மட்டுமே மகுடஞ்சூட்டி ஒற்றைவிரலுக்கு மை பூசி ஆண்டுமுழுமைக்கும் கரிபூசும் அரசியல்வாதிகளின் பொதுவிழா….. கால்பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்குரிமையை லஞ்சப்பொருளாக்கி கைப்பணம் முழுதுமிழக்கும் வாக்காளர்தம் முட்டாள்நாள் விழா…… இலவசங்களில் ஏமாந்து முழக்கங்களில் மயக்குற்று பரவசத்தில் ஆழ்ந்துபோகும் தேசத்திற்கான ஒருவிழா…….. அரங்கேற்றத்திலேயே திருடுபோகும் மேடைகள்….. முதுகுக்குப் பின்புறமே முகத்துதிப் பூச்சூட்டல்கள்….. காதிலே வாக்குறுதிப் பூச்சுற்றி கன்னத்திலே சேற்றுச் சந்தனம்பூசி…. கைகளிலே விலங்குகள் பூட்டி… கால்களுக்குச்…

ஆண்டவர்கள் ஓய்வெடுக்கட்டும்! ஆண்டவன் கட்டளை இது! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆண்டவர்கள் ஓய்வெடுக்கட்டும்! ஆண்டவன் கட்டளை இது!   தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகள்,  நிறைகளும் குறைகளும் கொண்டவையே! இவ்வாறு இருப்பது இயற்கையே! குறிப்பாக இப்பொழுது  தேர்தல் களத்தில் உள்ள செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் பாராட்டத்தக்கப் பணிகளும் ஆற்றி உள்ளனர். ஆனால்,   அதே நேரம், வாயில் தமிழ் முழங்கிக்கொண்டே,  செயலில் தமிழை மறந்தவர்களாக, இருவரும் உள்ளனர். எதை எதையோ கட்டணமாகத் தர முடிபவர்களால் கல்வியையும் மருத்துவ வசதியையும் ஏன் இலவயமாகத் தர இயலவில்லை? பொருள்களைக் கட்டணமின்றித் தரும்பொழுது அவற்றின் கொள்முதலில் ஆதாயம் பார்க்க இயலும். கல்வியையும்…