இலக்குவனார் இலக்கியப் பேரவையின் பாவேந்தர் விழா

அம்பத்தூர்  இலக்குவனார் இலக்கியப் பேரவை பாவேந்தர் விழா பங்குனி 15, 2046 / 05.04.2016 சிறப்புரை:  முனைவர் மு.முத்துவேல்  

மறுவாசிப்பில் அகிலன் – இலக்கிய வீதி நிகழ்ச்சி

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ‘மறுவாசிப்பில் அகிலன்’   தலைமை : திரு. இல. கணேசன்   முன்னிலை : திரு. அகிலன் கண்ணன்   அன்னம் விருதாளர் : எழுத்தாளர் அமிர்தம் சூர்யா   சிறப்புரை : முனைவர் சு. வேங்கடராமன்   இணைப்புரை: முனைவர் ப. சரவணன்   நாள்:  பங்குனி 13, 2046 – 27.03.2015 நேரம் : மணி 06.30 – 8.30 இடம்: பாரதிய வித்யா பவன்…

தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு: 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

  (பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி) [புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 2027 ஐப்பசி 18-20 / 1996 நவம்பர் 3-5 இல் “தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்” என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.] ஆகாசவாணி – வெற்றியாய்க் காட்டப்படும் தோல்வி:-             வானொலியில் ‘ஆகாசவானி’ என்று கூறுவதற்குப் பெரும் எதிர்ப்பு கிளப்பினோம். நீறுபூத்த நெருப்பு, என நம்மை நாமே கூறிக்கொண்டாலும் உண்மையில் நாம் பெட்டைப் பனைமரங்கள்தாம். இந்த ஒலிக்கெல்லாம் நடுவனரசு அஞ்சாது….

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 2 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)   தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 2 (பின்னணி) நினைத்துப் பாருங்கள்!    உங்கள் நாட்டில், உள்ளூரில் அரசியல் குழப்பம்; அமைதியில்லை. உங்கள் தொழிலுக்குக் கேடு. உங்கள் குடும்பத்துக்குக் கேடு. அந்த நேரத்தில் கப்பலில்/தோணியில் வந்து இறங்குகிறார்கள் சில அயலவர். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே மனித உருவம் என்பதைத் தவிர ஒற்றுமை என்பது மிகவும் குறைவு; உருவத்தில், நிறத்தில்,  பார்க்கும் முறையில், உடல் அசைவில், … பல வேற்றுமை….

விட்டத்தில் இல்லை விடியல்! – – சந்தர் சுப்பிரமணியன்

    வளராத பொருளென்று வானுக்குக் கீழ்வாழும் வகையே தில்லை! துளிராக வருகின்ற துளிர்ப்பொன்றே மரமாகித் தொடரும் தோப்பாய்! களராக வாழ்வெல்லாம் கழியுங்கால் விழையெண்ணம் கனவாய்ப் போகும்! தளராத உழைப்புடையார் தாமெண்ணும் உயர்வையெலாம் தமதாய்ச் சேர்ப்பர்! (1) வில்லொன்றின் இலக்கடைய விரைகாற்றைக் கிழித்தன்றோ விலக்கும் அம்பும்! கல்லொன்றில் எறும்பூரக் கால்பட்ட இடந்தேய்த்துக் கரைக்குங் கல்லை! அல்லொன்றின் இருளழிக்க ஆதவனில் செந்தீயாய் அமையுங் கோபம்! செல்கின்ற வழியெங்கும் சிறப்பான உழைப்பிருப்பின் செயந்தான் ஆங்கே! (2) அலையாடும் கடல்சேரும் ஆற்றுக்குத் துளிநீரால் அமைந்த ஆதி! மலையேறும் போதெல்லாம்…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 16– ஆ.வெ.முல்லை நிலவழகன்

(பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)  காட்சி – 16 (நாடகக் காட்சி : 5 அங்கம்      :      அருண் மொழி, பூங்குயில் இடம்       :      பள்ளியறை நிலைமை   :      (ஊடல் மிகுதியால் கூடிய பின்பு ஓடிய எண்ணத்தை உரைக்கின்றார்! இங்கே!) அருண்      :      கலைவாளர் மதிமுகமே! நிலைபுகழ் எழில் வடிவே! மலைமகள் உருவெடுத்தும் சிலையயன இருப்பது ஏன்? பூங்         :      விடிநிலவும் வந்ததத்தான் விடியுமெனச் சொல்லிவிட துடியிடையும் நோகுதத்தான்! மடியிடையில் நீர் இருக்க!   (காட்சி முடிவு)  (பாடும்)…

சமயச் சார்பற்ற மொழியும்- புனிதமான மொழியும்! : மறைமலை இலக்குவனார்

சமயச் சார்பற்ற மொழியும் புனிதமான மொழியும்!   புராணங்களின் அடிப்படையை மட்டுமே கொண்டு சமற்கிருதத்தை மொழிகளுள் தலைமைவாய்ந்த மொழியாகக் கூறப்படுவதும் இந்தியப் பண்பாட்டில் ஆரியப்பண்பாடே தலைமைச்சிறப்புடையதாகப் பேசப்படுவதும், சமயச்சார்பற்ற ஆய்வாளர்களாலும், அறிஞர்களாலும் மறுத்துரைக்கப்படுவதில்லை. மேலும் இத்தகைய கிளிப்பிள்ளை வாதங்கள் முற்போக்குப் பார்வையுடைய அறிஞர்கள் உள்ளத்திலும் செல்வாக்குப் பெற்றுவிட் டதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது. திராவிட மொழிகளின் தொன்மையை ஏற்றுக்கொள்வதில் முற்போக்கு அறிஞர்கள் காட்டும் தயக்கமும் சமற்கிருதத்துக்குக் கற்பித்துக் கூறப்படும் தொன்மையை மறுத்துரைக்கும் ஆய்வுகளை முன்மொழியாத அமைதியும் வருந்தத்தக்கன. இதன்விளைவாக வரலாற்றைப் புரிந்து கொள்ளுதற்குரிய முறையான…

”மருத்துவ அகராதி” தமிழ் – தமிழ் – ஆங்கிலம் தொகுதி – 1: அறிமுகம்

அறிவுத்தேடல் நூல் “மருத்துவ அகராதி” தமிழ் – தமிழ் – ஆங்கிலம்: தொகுதி – 1 நூலாசிரியர் : அறிஞர் த. வி. சாம்பசிவம்   அறிஞர் த. வி. சாம்பசிவம் அவர்களால் 75 ஆண்டுகளுக்கு முன் (1938) எழுதப்பெற்ற 1040 பக்கங்களைக் கொண்ட நூல் இது. தமிழுக்கு ஆக்கம் தரும் நன்முயற்சிகளில் இதுவும் ஒன்று. வாய்ப்புள்ளோர் வாங்கிப்படித்து, தங்கள் நூலகத்தில் பாதுகாக்க வேண்டிய நூல். வெளியீடு: தமிழ்ப்பேராயம் திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் (எசு.ஆர்.எம்) எ சு. ஆர். எம் நகர் காட்டாங்குளத்தூர்…

நடிப்புத்தலைவர்கள் – பேராசிரியர் அறிவரசன்

துள்ளி எழுக தோழர்களே! பாங்குடன் தமிழை வளர்ப்பதற்குப் பலவும் செய்வோம் என்பார்கள்; ஆங்கில மொழியை வளர்ப்பதற்கே அனைத்தும் செய்து முடிப்பார்கள்! வடமொழி யதனை வழிபாட்டில் வாழ்க்கைத் துணைநல மணவீட்டில் இடம்பெறச் செய்தபின் வடமொழியை எதிர்க்கிறோம் என்றும் சொல்வார்கள்! சாதியை மதத்தை மேடைகளில் சாடித் தமிழர்நாம் என்பார்கள்; வீதியில் வீட்டில் சாதிமத வேற்றுமை பேணி வளர்ப்பார்கள்! ஈழத் தமிழர் எமக்கென்றும் இசைந்த தொப்புள் உறவென்பார்; வாழத் துடிக்கும் உறவுகளை மறந்து மினுக்கித் திரிவார்கள்! ஈழமண் விடுதலை பெறவேண்டும் என்றே எகிறிக் குதிப்பார்கள்; பாழும் அடிமைத் தமிழ்நாட்டில்…

காதல் ஒரு விந்தை!

– கவிக்கோ ஞானச்செல்வன் திங்களை வென்ற ஒளிமுகத்தாள்-நறும் தேன்சுவை தோற்கும் மொழியுடையாள் கொங்கலர் மேவும் கூந்தலினாள்-எழில் கொட்டும் திருவென உருவுடையாள்! கங்கு கரையறு அன்பையெல்லாம்-விழி காட்டும் எனத்தகும் கண்ணுடையாள்! பொங்கி வரும்பெரு நிலவிடையே-உயிர் போன்றதன் காதலன் தனைக்காண்பாள்! ஆயிரம் கனவுகள் கண்டதுண்டு-புவி ஆளும் அடலுறு தலைவனுண்டு ஆயிழை குரிசில் கரம்கோத்து-தினம் ஆடிப் பாடிக் களித்ததுண்டு பாய்மரக் கப்பல் இல்லறமாம்-மிகப் பரந்த பெருங்கடல் வாழ்கையதாம் சேயிழை தென்னஞ் சோலையென-வளம் செழிக்கும் நல்லறம் எண்ணிடுவாள்! பாதச் சிலம்புகள் அமைதிபெற-இளம் பாவை ஓரிடம் தனிலமர்ந்து காதலன் வரவை மனத்தெண்ணி…

தமிழ்த்திரு வாழ்க – கவியோகி

தமிழ்த்திரு வாழ்க “திருகொலு விருக்கும் தமிழ்த் திருவாழ்க! அரனருட் புதல்வி, அருங்கலைச் செல்வி வரனருள் முதல்வி; வாழிய தமிழ்த்தாய் அறிவனல் விழியாள், அமுதக் கதிர்விரி முழுமதி முகத்தாள், மோகன காந்தம் வீசிடும் அரசி மின்னெனத் தெறிக்கும் பொலிநகை முத்தம் பொழிந்திடும் வாயாள்” – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

மேலாண்மைச் சிந்தனைகள் -பன்னாட்டுப் பயிலரங்கம்

  அன்புடையீர், வணக்கம். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், சென்னை, செம்மொழித் தமிழாய்வு  மத்திய நிறுவனமும் இணைந்து எதிர்வரும் பங்குனி 8 – பங்குனி 17, 2046 / 22-03-2015 முதல் 31-03-2015 வரை பத்து நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த உள்ளன.    பயிலரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.   அன்புடன் சி.சிதம்பரம் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர், மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302. திண்டுக்கல் மாவட்டம். அலைபேசி: +91 9843295951 மின்னஞ்சல்: mudalvaa@gmail.com.  …