வடக்குத்திசை – நமக்கு எமன் திசை

1. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்ன மகாகவியே எப்படி? கற்களினாலா? கபால ஓடுகளாலா?   2. கவசஊர்திகள் கிளறிப் போட்ட சேற்றில் கண்களைத் திறந்தபடி செத்துக் கிடந்த குழந்தையின் விழியில் நீலவானம் சிறுத்துச் சிறுத்து போர் விமானமாய்… இரத்தம் உறைந்த உதடுகளின் நெளிவில் ஏளனம்   3. சிட்னியில் சிறுவர் பள்ளியில் ‘இலங்கையின் தலை நகரம் எது?’ வினாவுக்கு விடை எழுதியது புலம் பெயர் தமிழ்க்குழந்தை ‘கொழுப்பு’   4. முகம் சிவந்தார் இட்லர் மகிந்த இராசபட்சேவைப் பார்த்து “ஆசுட்விட்சு புக்கன்…

மே 18 – கறுப்பு நாள் : கவிஞானி அ.மறைமலையான்

பண்டைத்தமிழ் மக்கள் மறு பதிப்பெனவே மலர்ந்தோரே! என்றும்தமிழ் மறம் ஓங்கும் என்றே களம் கண்டோரே! விழுந்த தமிழ் இனம் எழவே வீரத்தீ விதைத்தோரே! இழிந்தஈனச் சிங்களரின் எதிர்ப்பையெலாம் மிதித்தோரே! தனிநாடாம் தமிழ்ஈழம் தனைநிறுவி வாழ்ந்தோரே! புத்தமும் காந்தியமும் கைகோத்ததால் வீழ்ந்தோரே! புலித்தலைவர் ஆட்சிகண்ட பொறாமைநரி இராசபக்சே கொலைபுரிந்தான் தமிழ்இனத்தைக் கொடிய நச்சுப்பாம்பெனவே! இந்தியாஆள் காங்கிரசார் ஈன்றகருவி உதவிகொண்டே தந்திரமாய் இராசபக்சே தமிழ்இனத்தைக் கொன்றானே! இரண்டாயிரத் தொன்பதாண்டு மே-பதினெட் டாம்நாளே இருண்டதுவே தமிழ்ஈழம் இருநூறாயிரவர் இறப்பாலே! பதினெட்டு மேத்திங்கள் கதியற்றார் நினைவுநாளன்று சதிசெய்த காடையரின் விதிமுடிக்கும்…

நெஞ்சை மெல்லும் மே பதினேழு – தமிழேந்தி

நெஞ்சை மெல்லும் மே பதினேழு   வையகம் காணா வன்கொடுந் துயர்களை வரலாறு மறந்திடு மாமோ? வன்னியில் அந்நாள் சிதைந்த உயிர்களின் வலிகளைச் சொல்லிடப் போமோ? ஒருநூறு ஆண்டுகள் அல்ல, நம்மினம் உள்ளவரை நெஞ்சைப் பிளக்கும் ஒன்றுக்கும் உதவாக் கரைகளாம் நம்மை உறுதியாய் வருங்காலம் பழிக்கும் படைகளைக் கொடுத்தான் பழிகாரன் தில்லியன் பைந்தமிழ் மானம் கெடுத்தான் பல்லாண்டு பல்லாண்டாய் நெஞ்சிலே சுமந்த பழியெலாம் மொத்தமாய் முடித்தான் தடைகளைத் தகர்த்த தமிழ்ப் புலிகளின் தடுப்புகள் யாவுமே உடைத்தான் சதிகாரன் மகிந்தா தன்னுயிர் நண்பனாய்த் தமிழ்க்கேடன் அவனுக்குக்…

உயிரில் இரத்தம் வடியும் – – ஈரோடு இறைவன்  

முள்ளி வாய்க்காலில் வெந்து கிடக்கும் உடல் நெருப்பில் வேல் செய்யடா சிங்கள நரிக் கூட்டத்தின் உடல் கிழித்து தூள் செய்யடா மே 18இல் பாலச்சந்திரன் ஈகம் தூக்கி கண்ணீர் பெய்யடா அடிபட்ட புலி அடி கொடுக்கும் வரலாறு மெய்யடா உங்கள் மரண நினைவு இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆனால் மே 18 இல் மட்டும் உயிரில் இரத்தம் வடியும் நினைவே நீங்களாய் இருக்கும்போது மறக்க முடியுமா? இனியாவது மனித இனமே ஈழம் விடியுமா?

‘மே’ பதினேழு – இருள் கவிந்தநாள்… : – அறிவரசன்

                                                     ‘மே’ பதினேழு வன்னி நிலத்தின் முள்ளி வாய்க்காலில் இன எழுச்சிக்குப் பின்னடைவு ஏற்பட்ட நாள்… தமிழ் இன வரலாற்றில் இருள் கவிந்தநாள்… தமிழ்ப் பொதுமக்களும் போராளிகளும் புத்தன்பேர் சொல்பவர்களால் புதை குழிகளில் தள்ளப்பட்டநாள்… விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக அறங்கொன்றவர்களால் அறிவிக்கப்பட்ட நாள்… ஈழத்தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிட்டதாகச் சிங்களக் காடையர் நம்பத் தொடங்கிய நாள்… வன்னித் தமிழர்களுக்குப் பின்னடைவு நேர்ந்ததால் உண்மைத் தமிழர்கள் பித்துப் பிடித்து நின்றநாள்… கொழும்பும் தில்லியும் நினைத்ததை முடித்ததாகக் கை குலுக்கிக் கொண்டநாள்… நமக்கு எதிரானவர்கள் சிங்களர் மட்டுமல்லர்;…

முற்றாய் எழுக முள்ளிவாய்க்கால் நாற்றாய்- பரணிப்பாவலன்

    உற்றார் உறவுகள் உணவுக்காய் உடல்களை விற்றிட பசியுடன் விழிகள் இரண்டும் வற்றாக் கண்ணீர் வைகை ததும்பிட கற்ற கரும்புலி காடையர் பிடியில் சுற்றிய ஆடைகள் சுருங்கிச் செத்திட புற்றாய் வீழ்ந்ததே புலிப்படை கோட்டை கற்றை இனமாய் கதிர்கை இயக்கமாய் வெற்றியை மட்டுமே விளித்த தமிழராய் சாற்றியப் புகழுடன் சுற்றும் புவிக்குள்   மாற்றம் விதைத்த மறவர் கூட்டமாய் சீற்றம் கொண்டு சிங்கள நாpகளைத் தூற்றி யடித்தநம் தூயோர் எங்கே தோற்ற மறியா தொல்குடி வேந்தரே! கொற்றம் பிடிக்கவும் கொடுந்துயர் முடிக்கவும் முற்றாய்…

பேரினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்

      இறுதிக்கடன் என்பதன் மூலம் நாம் இறந்தவர்க்கு நம் மதிப்பையும் வணக்கத்தையும் செலுத்துகிறோம். இறந்தவர் நினைவைப் போற்றுவதற்கு நாம் நினைவேந்தல் என்கிறோம். இயற்கையாகவோ நோய்வாய்ப்பட்டோ  எதிர்பாரா நேர்ச்சி போன்றவற்றாலோ இறக்கும் பொழுது இவ்வாறு நினைவேந்தலாக நிகழ்த்துவது சரியே!  போராளியாக வீர மரணம் அடையும்  பொழுது நினைவேந்தலை வீர வணக்கம் செலுத்தும் வகையில் கடைப்பிடித்தலே இறந்தவர்க்கு நாம் அளிக்கும் மதிப்பாகும்! கொலை செய்யப்பட்டு இறக்கும் பொழுது,  நினைவேந்தல் நடத்தினாலும் – ‘பல்லுக்குப் பல்’ என்பதுபோல் பழிவாங்குவது தவறு என்றாலும் – பழிவாங்கும் எண்ணமே…

வன்னி மண் தின்ற பேய்கள்.. – செந்தமிழினி பிரபாகரன்

ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம்.. எம் இனம் அழிந்த சோகம் கொடும் துயரம்.. நினைந்து நினைந்து நாளுமிங்கு நாம் அழுகின்றோம்.. சிதைந்து சிதைந்து எம் இனமும் இன்னும் அழிகிறதே.. வன்னி மண் தின்ற பேய்கள்.. முப்பொழுதும் ஆட்டமிட கண்ணீரில் எம் மண்ணோ நித்தமும் குளிக்கிறதே.. ஆற்றுவார் யாருமில்லை.. யார் காப்பார் தெரியவில்லை.. நாடாண்ட இனம் இன்று நடைப்பிணமாய் வீதியிலே.. -தரவு :முகநூல்

எழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்!

    அப்பாவிகள் எழுவரும் அவர்கள் குடும்பத்தினரும் தமிழ்ச்சுற்றத்தினரும் மனிதநேயர்களும் மகிழ வேண்டிய வாய்ப்பு பறிபோய்விட்டது! பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு ஒன்று பொல்லாச் செய்தியாக மாறி விட்டது. ஏனிந்த அவலம்? யாரிதற்குப் பின்னணி? சதியாளர்கள் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை. என்றாலும் இதுபோன்ற இன எதிர்ப்புக் குரல்களும் அதனை இனப்பற்றுள்ளவர் என்ற நம்பிக்கைக்கு ஆளானவர்களே எதிரொலிப்பதும் தமிழினத்திற்கே உரியன போலும்!   ஆட்சியில் இருந்தால் ‘இந்தியனா’கவும் இல்லாவிட்டால் ‘தமிழனா’கவும் நடந்து கொள்ளும் முதுபெரும் தலைவர், ஆட்சியில் இல்லாத பொழுதும் ‘இந்தியனா’க நடந்து…

தமிழர்களின் கல்லறைத் தோட்டம்

வாழ விடுதலை கேட்டோம். துரோகிகளால் இனப்படுகொலை செய்யப்பட்டோம். அன்றோ தமிழர்களின் தேசம்.. இன்றோ தமிழர்களின் கல்லறைத் தோட்டம். நன்றி :  பாண்டி சீமான் முகநூல்  

எமது போராட்டம்: வெறும் நிகழ்வா? அல்லது வரலாறா?

எமது போராட்டம்: வெறும் நிகழ்வா அல்லது பெருமைக்குரிய வரலாறா என்பதை நீங்கள்தான்  வரையறுக்க வேண்டும் – கலாநிதி இராம் சிவலிங்கம்   அணையாமல் இருக்க  காற்றோடு  போராடுவதை வாழ்வாகக் கொண்ட  மெழுகுவர்த்தி போல்,  ஈழம்வாழ்  எம் உறவுகளும் அடக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்துக்கும் மத்தியிலே, சிங்கள அரசின் இன அழிப்பிலிருந்து  தம்மைத் தாமே காப்பாற்ற, போராட வேண்டிய துயரய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு யாரப்பா காரணம்? தரமில்லா புலம் பெயர் அணிகளும், தகுதியில்லா அதன் தலைமைகளுமல்லவா? எமது பூமியையும், அதன் பூர்வீகக்குடிகளான எம் உறவுகளையும் நாளுக்கு நாள்…

இணைவதை யாராலும் தடுக்க முடியாது – கலாநிதி இராம் சிவலிங்கம்

புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது — கலாநிதி இராம் சிவலிங்கம்     விலங்குகள் அகற்றப்பட்டு விடுதலையான எம் ஈழத் தாயின் மடியிலே; உங்களோடு சேர்ந்து நானும் அயர்ந்து உறங்க வேண்டும் என்ற ஆவலில்தானே எமது அரசியல் போரை முன்னெடுத்துச் செல்லவல்ல தகைமையும், தகுதியும் கொண்ட தன்மானத் தமிழரை இணைந்து  செயற்பட வருமாறு பல முறை அறைகூவினேன். நீதி வேண்டும் உலகம் எமக்காகப் போராடும்போது,  எமது பங்கை நாம் செய்யத் தவறினால், எமது குடிவழி எம்மை மதிக்குமா…