பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’- களம் : 1   காட்சி : 1

(‘புதியபுரட்சிக்கவி’: முன்னுரை – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி – களம் : 1   காட்சி : 1 களம் : 1   காட்சி : 1 அரசன் இருக்க – அமைச்சர் வருகிறார் அகவல் அமைச்சர் : ஆல்போல் வளர்க அரசர் கொற்றம்           கடிதில்       அழைத்த காரணம் யாதோ? அரசன் :      வருக அமைச்சரே அமர்க ஈங்கே *        அமுத         வல்லிஎன்  ஆசைக் கொருபெண்           தமிழிலக்  கியங்கள் தமிழிலக் கணங்கள்           அமைவுற  ஆய்ந்தாள்  அயல்மொழி  பயின்றாள்           ஆர்ந்த       ஒழுக்கநூல் நீதிநூல்…

தமிழ்நாடும் மொழியும் 13 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 12 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி ஆனால் காப்பியக் காலத்திலே இம்முறை அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் காப்பிய க்காலத் தமிழ்ச்சமுதாயம் காதலை நாடவில்லை போலும். அதுமட்டுமல்ல; கோவலன் கண்ணகி திருமணத்திலே முத்தீ வளர்க்கப்பட்டது; பார்ப்பான் மறை ஓதினான்; மணமக்கள் தீவலம் செய்தனர். அஃதோடு இம்மணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் பெற்றோர்கள். மணமக்களின் ஒப்புதல் கேட்டதாகத் தெரியவில்லை. இறுதியிலே கண்ணகி – கோவலன் மணமக்களாகிவிடுகின்றனர். பிறகு பிரிந்துவிடுகின்றனர். கோவலன் போற்றா ஒழுக்கம் புரிகின்றான். கேட்பாரில்லை; அதுமட்டுமா? கோவலனுக்கு நண்பனாகவும் அறவுரை கூறுபவனாகவும் இருப்பவன் மாடலன் என்னும்…

தமிழ்நாடும் மொழியும் 12 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 11 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி சமய நிலை திருமால், பிரம்மா, சிவபிரான், முருகன் இவர்களைப் பற்றி மிகுதியாகவும், பலராமன், கொற்றவை இவர்களைப் பற்றி ஆங்காங்கும் சங்க நூல்கள் கூறுகின்றன. அந்தணர் மந்திர விதிப்படி வேள்விகள் செய்தனர் என்றும், அவர்கள் ‘சிறந்த வேதம் விளங்கப் பாடி, விழுச் சீரெய்திய ஒழுக்கமொடு புணர்ந்து, அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்’ பெரியோராய் விளங்கினர் என்றும், ஒருவன் இம்மையிற் செய்த வினையின் பயனை மறுமையில் அடைவான் என மக்கள் எண்ணினர் என்றும், கணவன் இறப்பின் மனைவி உடன்கட்டை…

தமிழ்நாடும் மொழியும் 10 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 9 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி பண்டைத்தமிழர் இயற்கைப் பொருள்களையே தெய்வங்களாக வழிபட்டனர். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன்; முல்லை நிலக் கடவுள் மாயோன்; மருதநிலக் கடவுள் இந்திரன்; நெய்தற் கடவுள் கடற்றெய்வம்; பாலை நிலக் கடவுள் கன்னி. குழலும், முழவும், யாழும், பறையும் கடவுள் வழிபாட்டின்கண் ஒலித்தன. உழவு, கைத்தொழில், வாணிகம் முதலிய தொழில்கள் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கின. கைத்தொழிலில் சிறந்து விளங்கியது நெசவுத்தொழிலே. பருத்தி, ஆட்டுமயிர், எலி மயிர் முதலியன கொண்டு மக்கள் ஆடைகளை நெய்தனர். ஆடைகள் மிக நுட்பமாக…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.36- 1.6.40

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31- 1.6.35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் கூட்டிய புலவரைக் குமரி நாட்டிடைநாட்டிய தமிழ்க்கொடி நுடங்கு நாளவைக்கோட்டியி லவரவர் கொணர்ந்த பாக்களைஏட்டிடை யிருந்தரங் கேற்றி னானரோ. அண்ணிய புலவர்பே ரவையிற் றங்கள்பாக்கண்ணிய வுட்பொருட் கருத்தைப் பேரவைஉண்ணியே யுடன்பட வுரைத்துத் தம்முளத்தெண்ணிய படியரங் கேற்றி னானரோ.

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31 – 1.6.35

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் தாய்க்கொலை புரிந்தவர் தமிழ்க்கொலை புரிந்தாராய்க்கொலை புரிந்தவட வாரியரின் மானச்சேய்க்குண மிலாதவிழி தீயரை யொறுத்தேதாய்க்குநிக ராகிய தமிழ்மொழி வளர்த்தார். கழகம் – மேற்படி வேறு வண்ணம் +++++ சேய்க்குணம் – தாயைப் பேணுங் குணம். 32. கல் – மலை. 33. புலக்கண் அறிவுக்கண். அலகு உறு – அளவுபட்ட, பகுதிப் பட்ட அது, அகம் புறம் +++++ இராவண காவியம் –…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.27 – 1.6.30

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் வாய்மொழி பொதிந்திடுசொன் மாலைபல வேய்ந்துதாய்மொழி வளர்த்திடு தமிழ்ப்புலவர் தம்மைஆய்மொழி புனைந்தில கரியணை யிருத்திப்போய்மொழி பெறாதிலகு பொன்முடி புனைவார். தேங்குபுகழ் தாங்கிய செழும்புலவர் கொள்ளஓங்குமுகில் தோய்முக டுயர்ந்தமலை யேறிஆங்கவர்கள் கண்டநில மானவை யனைத்தும்பாங்கொடு கொடுத்துயர் பசுந்தமிழ் வளர்த்தார். என்றுமுயர் செந்தமி ழியற்புலவர் கொள்ளக்கன்றினொடு தூங்கிவரு கைப்பிடி புணர்ந்தவென்றுகொடு வந்தவெறி வேழமது தந்துநன்றியொடு தொன்றுவரு நற்றமிழ் வளர்த்தார். மாணிழை புனைந்துமண வாமல ரணிந்தும்பாணரொடு கூடவரு பாடினியர்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.23- 1.6.26

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.18 – 1.6.22 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்  23.    சொற்சுவை யடுத்தொளிர் தொடைச்சுவை நிறைந்த                  நற்சுவை யுடைப்பொரு ணலச்சுவை செறிந்த                  பற்சுவை படச்செயுள்செய் பாவலர்கொ ளப்பொன்                  னிற்சுவை கொடுத்துய ரியற்றமிழ் வளர்த்தார்.           24.     மண்ணுமுழ வோடுகுழல் நண்ணுமிசை யாழின்                  எண்ணொடு கலந்திலகு மேழிசை பொருந்தப்                  பண்ணொடு திறந்தெரிபு பாடுமவர் கொள்ள                  எண்ணிய கொடுத்துய ரிசைத்தமிழ் வளர்த்தார்.           25.     உண்ணிகழ்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.18 – 1.6.22

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.13 – 1.6.17 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் ஷ வேறு வண்ணம்           18.     ஏடுகை யில்லா ரில்லை யியலிசை கல்லா ரில்லை                  பாடுகை யில்லா யில்லை பள்ளியோ செல்லா ரில்லை                  ஆடுகை யில்லா ரில்லை யதன்பயன் கொள்ளா ரில்லை                  நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.           19.     தமிழென திருகட் பார்வை தமிழென துருவப் போர்வை                  தமிழென துயிரின் காப்புத்…

  புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6. 13 – 1.6. 17

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 13.     ஈங்கொரு புதுமை யில்பொரு ளுவமை                       யெனத்தகு சிறுமுகை மணம்போற்                  பாங்கொடு மக்கள் பற்பல பெற்றும்                       பழமையென் றளவிடு மகவுந்                  தாங்கிய தாவிற் கன்னியா யிளமை                       ததும்பிடுந் தண்டமிழ்த் தாயை                  நீங்கிய விளமைச் சிறியவ ருலக                       நெறியிலா ரொத்துளே மெனலே.           14.     வண்புகழ் மூவ ரொடுதமிழ்க் குயிரை                       வழங்கிய…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3- 1.6.7 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்           8.     ஒருமொழி யேனு மினையநாள் காறு                      முலகெலாந் தேடியு மடையா                 இருவகைக் கைகோ ளன்பினைந் திணையோ                      டெழுதிணை யகம்புற மென்னும்                 பொருளினை யுடைய பழந்தமிழ்த் தாயைப்                      பொருளிலா ளெனப்புகல் பொய்யர்                 மருளினை யுண்மைப் பொருளென மதிப்போர்                      மதியினுக் குவமையம் மதியே.           9.     பேசுநற் குணமு மெழுதெழில் வனப்பும்                      பெரியர்சொற்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3-1.6.7

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21- 1.6.2தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம்            3.     இனியசெந் தேனு மினியவான் பாலு                       மினியதீஞ் சுவைநிறைந் தியலும்                  கனியதன் சாறுங் கரும்பினின் சாறுங்                       கனிவரு முதலவின் பருப்பும்                  இனியவின் சுவையொன் றேயுளங் கேட்டற்                       கினிமைநம் பாலிலை யென்று                  கனியவுள் ளுருகிக் கவன்றிட விரங்கிக்                       கைசெயுங் கனிதமிழ் மொழியே.            4.     உரப்பியுங் கனைத்து முடிமுத லடிநாக்                       குழறியுங் குழறியு…