கரும்பும் தூய வேளாண்மையும் – வைகை அனிசு
குல தெய்வக்கோயில்களுக்கு விற்பனை ஆகும் கரும்புகள் தேவதானப்பட்டிப் பகுதியில் குலதெய்வக்கோயில்களுக்கு கொண்டு செல்வதற்குக் கரும்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, காமாட்சியம்மன்கோயில் பகுதிகளில் கரும்பு வேளாண்மை நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் விளையும் கரும்புகளைக் காட்டிலும் இக்கரும்பு அதிகமான சுவையுடன் இருக்கும். மேலும் கோயில் அமைந்துள்ள பகுதி என்பதாலும் முதல் கரும்பைக் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதை இப்பகுதி உழவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தெய்வ பக்தியுடன், இறைச்சிக்கழிவுகள், பன்றிச்சாணம் போன்றவற்றை உரமாக பயன்படுத்துவதில்லை. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டம்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 056. கொடுங்கோன்மை
(அதிகாரம் 055. செங்கோன்மை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 056. கொடுங்கோன்மை மக்களை அலைக்கழிக்கும், தீமையான, முறைஇல்லாக் கொடுமையான வல்ஆட்சி. கொலைமேற்கொண் டாரின் கொடிதே, அலைமேற்கொண்(டு), அல்லவை செய்(து)ஒழுகும், வேந்து. மக்களை வருத்தி, அலைக்கழிக்கும், ஆட்சி, கொலையினும் கொடிது. வேலொடு நின்றான்,”இடு”என்றது போலும், கோலொடு நின்றான் இரவு. வன்முறையால் வரிகேட்டல், வேல்காட்டிக் கொள்ளை அடித்தலுக்குச், சமம். நாடொறும் நாடி, முறைசெய்யா மன்னவன், நாடொறும் நாடு கெடும். நாள்தோறும்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 055. செங்கோன்மை
(அதிகாரம் 054. பொச்சாவாமை தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 055. செங்கோன்மை மக்களது நலன்களைக் கருதியே, முறையோடு நடைபெறும் நல்ஆட்சி ஓர்ந்து,கண் ணோடா(து), இறைபுரிந்து, யார்மாட்டும், தேர்ந்து,செய்வ(து), அஃதே முறை. ஆராய்ந்த, இரக்கம் காட்டாத நடுநிலைத் தண்டனயே முறைஆம். வான்நோக்கி, வாழும் உல(கு)எல்லாம்; மன்னவன் கோல்நோக்கி, வாழும் குடி. உலகம் இன்மழையால் வாழும்; மக்கள், நல்ஆட்சியால் வாழ்வார். அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய் நின்றது, மன்னவன் கோல், …
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 054. பொச்சாவாமை
(அதிகாரம் 053. சுற்றம் தழால் தொடர்ச்சி) 02.பொருள் பால் 05.அரசு இயல் அதிகாரம் 054. பொச்சாவாமை மகிழ்ச்சியிலும், கடமை மறவாமை, மனத்தின்கண் சோர்வு அடையாமை இறந்த வெகுளியின் தீதே, சிறந்த உவகை மகிழ்ச்சியின், சோர்வு. மகிழ்ச்சியில் செயலை மறத்தல் மிகுந்த சினத்தைவிடத், தீயது. பொச்சாப்புக் கொல்லும் புகழை, அறிவினை, நிச்ச நிரப்புக்கொன்(று) ஆங்கு. மறதிமை புகழையும் கொல்லும்; வறுமை அறிவையும் கொல்லும். பொச்சாப்பார்க்(கு) இல்லை புகழ்மை; அது,உலகத்(து) எப்பால்நூ லோர்க்கும்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 053. சுற்றம் தழால்
(அதிகாரம் 052. தெரிந்து வினை ஆடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 053. சுற்றம் தழால் உறவினர்க்கு வேண்டியன கொடுத்து, அரவணைத்துக் காப்பாற்றும் உயர்பண்பு. பற்(று)அற்ற கண்ணும், பழைமை பாராட்டுதல், சுற்றத்தார் கண்ணே, உள. ஏழ்மையிலும் பழைய உறவைக் கொண்டாடல், உறவாரிடமே உண்டு. விருப்(பு)அறாச் சுற்றம் இயையின், அருப்(பு)அறா ஆக்கம் பலவும், தரும். விருப்பம் குறையா உறவாரால் அறுபடா வளநலம் அமையும். அள(வு)அளா(வு)…
பன்னாட்டு நீதிப் பொறியமைவே தமிழர் கோரிக்கை! – வே.பாரதி
ஐநா மனித உரிமை மன்றம்: பன்னாட்டு நீதிப் பொறியமைவே தமிழர் கோரிக்கை! – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே.பாரதி அறிக்கை ஐநா மனித உரிமை மன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா முன்மொழிந்து நிறைவேறிய தீர்மானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பன்னாட்டுப் புலனாய்வுக் குழு தன் அறிக்கையை 16.09.2015 ஆம் நாள் ஐநா மனித உரிமை மன்ற 30 ஆவது கூட்டத் தொடரில் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஐநா மனித உரிமை மன்ற ஆணையர் செய்யது அல் உசைன் அவர்களின் அறிக்கையும் வெளிவந்துள்ளது….
இனிக்கும் கரும்பு … கசக்கும் உழவு! – வைகை அனிசு
இனிமைக் கரும்பைப் பயிரிடுவோர் வாழ்வில் இனி்மை இல்லை! ‘காமாட்சியம்மன் கோயில் பூமியிலே கரும்பு இனிக்கும். வேம்பு கசக்கும்’ என்ற பழமொழி உண்டு. தேனி மாவட்டத்தில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் காமாட்சியம்மன் கரும்பைக் கையில் பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள் வழங்குவார். இப்பகுதியில் கரும்பு விளைந்தவுடன் எம்மதத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் இப்பகுதியில் உள்ள மயிலீசுவரன் கோயிலிலும், அருள்மிகு காமாட்சியம்மன்கோயிலிலும் முதல் கரும்பை வைத்துச் சாமி கும்பிட்ட பின்புதான் விற்பனையைத் தொடங்குவார்கள். நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாதவர்கள் இக்கோயிலில் குழந்தை வரம் வேண்டிக் குழந்தை…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 052. தெரிந்து வினை ஆடல்
(அதிகாரம் 051. தெரிந்து தெளிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 052. தெரிந்து வினை ஆடல் பணியில் அமர்த்தியபின், அவர்அவர் திறன்கள் அறிந்து, கையாளுதல் 0511 .நன்மையும், தீமையும், நாடி, நலம்புரிந்த தன்மையால், ஆளப் படும். நன்மை, தீமைகளை, ஆராய்க; நன்மையரைப் பணியில் அமர்த்துக. வாரி பெருக்கி, வளப்படுத்(து), உற்றவை ஆராய்வான், செய்க வினை. வருவாய் பெருக்கி, வளப்படுத்திப், பயன்கள் ஆய்வான் செயற்படுக. அன்(பு),அறிவு, தேற்றம், அவாஇன்மை, இந்நான்கும், நன்(கு)உடையான் கட்டே,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 051. தெரிந்து தெளிதல்
(அதிகாரம் 050. இடன் அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 051. தெரிந்து தெளிதல் எப்பணிக்கும், தக்காரை ஆராய்ந்து, தெளிந்து, பணியில் அமர்த்தல் அறம்,பொருள், இன்பம், உயிர்அச்சம், நான்கின், திறம்தெரிந்து, தேறப் படும். அறமும், பொருளும், இன்பமும், உயிர்அச்சமும், ஆராய்ந்து தேர்க. குடிப்பிறந்து, குற்றத்தின் நீங்கி, வடுப்பரியும், நாண்உடையான் கட்டே, தெளிவு. நற்குடிமை, குற்றம்இன்மை, பழிக்கு வெட்குதல் பெற்றாரைத், தெளிக. அரியகற்(று), ஆ(சு)அற்றார் கண்ணும், தெரியும்கால், …
தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 5: இலக்குவனார் திருவள்ளுவன்
5 சங்கப் புலவர்கள் வழியில் மட்டுமல்லாமல் சமயக் குரவர்கள் வழியிலும் பாடல்களை இயற்றியுள்ளார் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள். மாணிக்க வாசகர் இயற்றிய ‘போற்றித் திருவகவல்’ சிவபெருமான் குறித்தது. இதே போல் தமிழ்க்கடல் மறைமலையடிகளை நாடு போற்ற வேண்டும் எனக் கருதிய பேராசிரியர் பின்வருமாறு பாடியுள்ளார். “தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்த தலைவனே போற்றி! தமிழ் காக்கும் மறவர்களின் எண்ணத்தில் நிறைந்திருப்பவரே போற்றி! இந்தி மொழி என்னும் இருட்படலத்தை விலக்கிய செங்கதிர் ஒளியே போற்றி! தமிழ்நலம் நாடுவார்…
தமிழ் 99 விசைப்பலகை மனச்சிதைவை உருவாக்கும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் 99 விசைப்பலகை மனச்சிதைவை உருவாக்கும்! தவறான ஒன்றைச் சரியென நம்பும் மாயை பலரிடமும் உள்ளது. அதுபோன்ற மாயைதான் தமிழ் 99 விசைப்பலகையைச் சரியென நம்புவதும். அரசு, வல்லுநர் கருத்தை ஏற்பது என்ற முடிவில் மாயையை மெய்யென நம்பிய இத் தவறான கருத்தை ஏற்றுக் கொண்டது. இதன் விளைவாக, ஆவணி 14, 2046 / 31.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்த புதிய கணித்தமிழ்க் கொள்கையில், (தகவல்தொழில்நுட்பவியல் துறையின் 2015-16 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் இணையக் கல்விக்…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 8 இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 7 தொடர்ச்சி) 8 38-45.] எட்டுத்தொகை நற்றிணை குறுந்தொகை பிற நூல்களில் முகப்புப் பக்கம் அட்டவணைப் பகுதியில் தேடுதல் தலைப்பும் அதைச் சொடுக்கினால் தேடுதல் பகுதியும் வரும். மாறாக, இவற்றில் தலைப்பில் ‘சொல்’ தேடுதல் பகுதி உள்ளது(படவுருக்கள் 40 &41) ஐங்குறுநூறு உரையில் மட்டும் தேடுதல் பகுதி (பக்கம் தேடல், சொல் தேடல்) உள்ளது(படவுருக்கள் 42 & 43). பதிற்றுப்பத்து: முகப்பு இடப்பக்க அட்டவணையிலும் தலைப்பிலும் தேடுதல் குறிக்கப் பெற்றுள்ளது. சொடுக்கினால் ‘பக்கம் தேடல்’,…