நான் தமிழன் எனவேதான்…. …. – இலக்குவனார் திருவள்ளுவன்

நான் தமிழன் எனவேதான் தமிழில் பேசுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் படிப்பதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழைப் படிப்தில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்ப்பண்பாட்டைப் போற்றுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழ்நாகரிகத்தைப் பின்பற்றுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழர்க்கு உதவுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழினத்தைப் பே1ணுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் ஒப்பமிடுவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் வணங்குவதில்லை!   நான் தமிழன் எனவேதான் தமிழில் வாழ்த்துவதில்லை!  …

தமிழையே பேசுக! தமிழையே சிந்திக்க!- மாகறல் கார்த்திகேயர்

தமிழை முன்னே நீ கற்க; நின் மகனுக்குக் கற்பிக்க; எவ்வளவு கூடுமோ அவ்வளவு கற்க; கற்பிக்க; கேட்க; கேட்பிக்க; இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசற்க; புகழ் நிமித்த மாகவும் பொருள் நிமித்த மாகவும் ஆங்கிலம் கற்றல் சிறப்பாகாது; எப்போதும் தமிழையே தெய்வம் போலவும் நற்றாய் போலவும் சிந்திக்க; நீ தமிழ் மயம் ஆனால் நின்மக்களும் தமிழ்மயம் ஆவர்; நின்குடியும் தமிழ் மயமாகும். நின் கை தமிழ்நூல் எழுதுக நின் வாய் தமிழையே பேசுக நின் மனம் தமிழையே சிந்திக்க நோய் கொண்டு மெலியனாயின் மருந்துண்டு…

தமிழ் மக்களைப் போற்றுவோம்! – புலவர் குழந்தை

தமிழ் மக்களைப் போற்றுவோம்! – புலவர் குழந்தை  கள்ளர் என்றும் மறவர்என் றுங்கடைப் பள்ளர் என்றும் பறையர்என் றும்பழித்து என்ன நொந்தும் இயல்பில் திரிகிலா மன்னர் ஆம்தமிழ் மக்களைப் போற்றுவோம் – புலவர் குழந்தை : இராவண காவியம்  

அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி

இம்மை மறுமையின் – பயன்கள் எவருமே யடையச் செம்மை நெறியினை – விளக்கும் தெய்வ நூல் செய்தோன். வழுக்கள் போக்க வந்தோன் – நல்ல வாழ்வை ஆக்க வந்தோன்; ஒழுக்கம் காட்ட வந்தோன் – தமிழுக்கு உயிரை ஊட்ட வந்தோன். தொன்மை நூல்களெல்லாம் – நன்கு துருவி ஆராய்ந்து, நன்மை தீமைகள் வகுத்த நாவலர் கோமான். எதை மறந்தாலும் – உள்ளம் என்றுமே மறவாப் பொதுமறை தந்த – தேவன் பொய் சொல்லாப் புலவன். அறிவின் எல்லை கண்டோன் – உலகை அளந்து கணக்கிட்டோன்;…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 28 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015 தொடர்ச்சி) காட்சி – 28 அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நினைவாய்க் கவிஞரின் உள்ளத்தைக் கக்கவே வைக்க இவ்வொரு காட்சியோ! இன்னும் தூண்ட அவிழ்த்தே விரித்தார்! பட்டப்பகலாய்) கவி  :     பார்த்தாயா தம்பி! பணம் பேசும் பேச்சை! சொல்லால் சொல்ல வழியும் உண்டா? அன் :     பரம்பரையாகக் கொள்ளயடித்தே வருவோரை நாம் தான் செய்வது என்ன? கவி  :    …

தமிழ் நாடு – பாவேந்தர் பாரதிதாசன்

சேரன் செங்குட்டு வன்பிறந்த வீரம் செறிந்த நாடிதன்றோ?   சேரன் செங்குட்டுவன்… பாரோர் புகழ் தமிழ்ச் சேயே பகை யஞ்சிடும் தீயே நேரில் உன்றன் நிலையை நீயே நினைந்து பார்ப் பாயே.   சேரன் செங்குட்டுவன்… பண்டி ருந்த தமிழர் மேன்மை பழுதாக முழு துமே கண்டி ருந்தும் குகையிற் புலிபோல் கண்ணு றக்கம் ஏனோ?   சேரன் செங்குட்டுவன் … – பாவேந்தர் பாரதிதாசன்

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 27 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

காட்சி – 27 அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (பூங்குயில் ஒப்பனை கண்டு அருண் தாங்கா இன்பம் அடைகின்றான்) அருண்    :     பணியாளும் வந்து பல நாழி ஆச்சு! அணியவே இன்னும் நாழிதான் என்ன? பூங்       :     முடியள்ளி முடிக்கும் போதுதான் வந்தான்! துடிப்பதும் ஏனோ? துரிதமே வருவேன்! அருண்    :     ஆகா! என்ன! தேவியே! தேவி! ஓகோ! விண்மீன் வானுடை கட்ட! எங்கும் இன்பம் பொழிகின்ற நிலவாய்! தங்கமுகத்தாலே பார்த்தென்னைச் சிரிக்க! தேவியே! கண்ணே!…

வெல்க பிறர் நெஞ்சு! – சேலம்பாலன்

இன்தமிழின் நற்கவிஞர் இலக்குவன் திருவள்ளுவன்(ர்)  அன்புடைத் தமிழ்ப்பணிக்கே அடியேனின் வாழ்த்துகள்! தங்கள் பணியெல்லாம் தாய்த்தமிழ் நற்பணியாய் எங்கெங்கும் உள்ளோர் இதயத்தால்-பொங்கிமகிழ் வெய்திடவே எந்நாளும் ஏற்றமுறப் பொங்கட்டும்! நெய்திடுக! வெல்கபிறர் நெஞ்சு! என்றும்தமிழ் அன்புடன் கவிமாமணி சேலம்பாலன், ஈரோடு

தமிழியம் காக்கும் ஆய்தம் இலக்குவனார் திருவள்ளுவன் – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தமிழ்மொழி தமிழினம் தமிழ்நிலம் உயர்வே தம்முயிர் மூச்செனும் திருவள்ளுவன் – செந் தமிழைப் போல தொன்மை மிகுந்த தொண்டறம் செய்யும் திருவள்ளுவன் வள்ளுவம் வழியில் வாழ்வினை ஏற்று வாழு கின்ற திருவள்ளுவன் – திரு வள்ளுவன் குறளை வாழ்வியல் நெறியால் வாழ்ந்து சிறக்கும் திருவள்ளுவன் ஆக்கப் பணிகளை ஆய்ந்தே செய்யும் அன்பர் அறிஞர் திருவள்ளுவன் – தமிழ் நோக்கம் ஒன்றே தம்பணி என்று தளரா துழைக்கும் திருவள்ளுவன் எளியர் தூயர் எப்பணி யாகிலும் எழிலாய் செய்யும் திருவள்ளுவன் – தமிழ்ப் புலியர் வலியர் புடவி…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 26 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(வைகாசி 10, 2046, மே 24, 2015 தொடர்ச்சி) காட்சி – 26   அங்கம்    :     கவிஞர், அன்பரசன் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (நகையைக் கண்டு நகைத்த கவிஞர் நகைக்கோர் வழியை உரைக்கின்றார்) கவி  :     தாலிக்குத் தவியாய் தவித்தே ஒருவன் பாவியாய் இங்கே வாழ்ந்திடும் போது! பல வேலிக்கு சொந்தக்காரனின் வீட்டில் குவிந்தே கிடக்கும் கொடுமையைப் பாரேன் அன் :     இந்நிலை எதனால் புலவீர்? விந்தையுமன்றோ? கேட்க! கவி  :     போர்முனை அறியா ஒருவர்! இங்கே! இராணுவ…

தமிழா படி! தமிழில் படி! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தமிழா படி! தமிழில் படி! படி… படி முயன்று படி முன்றேனப் படி! முப்பால் படி! படி… படி ஆழ்ந்து படி! ஆய்ந்து படி! அறம் படி! படி… படி பொதுமை படி! புரட்சி படி! பொருள் படி! படி… படி இனிது படி! இயற்கை படி! அகம் படி! படி… படி புரிந்து படி! புரியப் படி! புறம் படி! படி… படி நன்றாய்ப் படி! நயமாய்ப் படி! நாலடி படி!. படி… படி நிறையப் படி! நிறைவாய்ப் படி! நீளப் படி!…

தமிழ் வாழ்த்து – கவிஞர் முத்தரசன்

 நறுந்தமிழே வாழ்த்திடுவாய்! ஆர்ப்பரிக்கும் ஆட்சியிலும் ஆளுமைசெயும் தமிழே! போர்ப்பாட்டுப் பாடுதற்குப் புறப்பட்ட பூந்தமிழே! பொறுமையுடன் நடனமிடும் புதிரான தமிழே! பெருமையுடன் வாழ்த்துகிறேன்! பெருமிதமும் கொள்கின்றேன்! வந்தாரை வாழவைக்கும் வளமான செந்தமிழே! சொந்தமெனும் உணர்வோடு சொக்குகிற தமிழே! சிந்திக்கத் தெரிந்தவர்க்குச் சிரிக்கின்ற தமிழே! நிந்திக்கத் தெரியாத .நிலைத்தபுகழ்த்தமிழே! சொல்லில் அடங்காத சொல்லடுக்குத் தமிழே! பல்சுவையில் குன்றாத பழம்புகழே! பார்முதலே! வெல்கின்ற வழியெமக்கு விழிப்புடனே தந்திடுவாய்! நல்லோனாய் இருந்திடவே நறுந்தமிழே வாழ்த்திடுவாய்! – கவிஞர் முத்தரசன்