வெல்க குறள் நெறி – புலவர் வேலவன்

  1. கூடல் நகரில் குறள்நெறித் தென்பெருகி ஓடல் இனிதே உவந்தது. 2. குறள் நெறிப் பூங்குயிலே கொள்கைப் புரட்டர் குரல்நெறிக்க வந்தாயோ கூறு. 3. எழுதத் தெரிந்தோர் எழுத்தாள ராகுந் தொழுநோய் துடைப்பாய் துணிந்து. 4. பிறழ்நெறியே பேசுகின்ற பித்தருளும் மாற குறள்நெறியே கூவு குழைந்து. 5. அருள்நெறி பேச அவம் செய்து வாழும் இருள்நெறி யாளரை எற்று. 6. பாலில் நீர் பெய்துவிற்கும் பாவியரைப் போலெழுது நூலில்தீச் சொற்கலப்பின் நூறு. 7. குறுக்குவழி யோடுங் குறுமதியைக் கொட்டிப் பொறுப்பு வழிகாட்டிப் போற்று,…

ஒற்றுமையே உயர்நிலை – கவிமணி

                ஒற்றுமையாக உழைத்திடுவோம் – நாட்டில்      உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்; வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் – இன்னும்      வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம்.                 கூடி விருந்துண்ண வேண்டவில்லை – பெண்ணைக்      கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை; நாடி எவரொடும் நட்பினராய்த் – தேச      நன்மைக் குழைப்பதில் நட்டம் உண்டோ?                    கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு – சாதி      கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு, பாரதத் தாய்பெற்ற மக்கள் என்று – நிதம்      பல்லவி பாடிப் பயன்…

என்றும் உள்ள தென்றமிழ்- நாமக்கல் கவிஞர்

  அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி        அன்னை வாழ்க வாழ்கவே. வைய கத்தில் இணையி லாத               வாழ்வு கண்ட தமிழ் மொழி        வான கத்தை நானி லத்தில்               வரவ ழைக்கும் தமிழ்மொழி பொய்அ கந்தை புன்மை யாவும்               போக்க வல்ல தமிழ்மொழி        புண்ணி யத்தை இடைவி டாமல்               எண்ண வைக்கும் தமிழ்மொழி மெய்வ குத்த வழியி லன்றி               மேலும் எந்தச் செல்வமும்        வேண்டி டாத தூய வாழ்வைத்               தூண்டு கின்ற தமிழ்மொழி…

தமிழ்த் தெய்வ வணக்கம் – கவிஞர் முடியரசன்

தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலையென்றால் இன்பமெனக் கேது. பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும் ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும் மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே சாவா வரமெனக்குத் தா. தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால் தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய் அடிக்கே எனையாண் டருள். – பூங்கொடி

வேண்டும்! வேண்டும்! – ஓ.மு.குருசாமி

  தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காக்க வேண்டும்! தளராமல் எந்நாளும் உழைக்க வேண்டும்! வாய்மொழியைச் செயலுருவா ஆக்க வேண்டும்! வள்ளுவர்தொல் காப்பியமும் பரவ வேண்டும்! ஆய்வுரைகள் தமிழ்மொழியில் பெருக வேண்டும்! தண்டமிழே தலை சிறந்து விளங்க வேண்டும்! ஓய்ந்துவிடும் மனமுடையார் குறைய வேண்டும்! உலகமெலாம் தமிழ்நூல்கள் செல்ல வேண்டும்! திருவுடைய ‘குறள் நெறியே’ பரவ வேண்டும்! தினந்தினமும் திருக்குறளை ஓத வேண்டும்! அருளுடையார் அன்புடையார் பெருக வேண்டும்! அறிவுடையார் மொழிகாக்கக் கிளம்ப வேண்டும்!. உருவடைய நற்செயலை ஊக்க வேண்டும்! உண்மைக்கு வணக்கமதைச் செய்ய வேண்டும்! இருளுடைய…

பிறமொழி கலந்து பேசக் கூசு ! – கவிஞர் இரா .இரவி !

  இயல் இசை நாடகம் முத்தமிழ் முத்திரை தமிழ் ! ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ் ! திருக்குறளால் பெருமை பெற்ற மொழி தமிழ் ! திருவள்ளுவரால் உலகம் அறிந்த மொழி தமிழ் ! எண்ணிலடங்காச் சொற்களின் சுரங்கம் தமிழ் ! எண்ணிட இனித்திடும் மொழி நம் தமிழ் ! உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக ! உலகில் பன்னாட்டு மொழி தமிழ் அறிந்திடுக ! உலகம் முழுவதும் ஒலிக்கும் நம் தமிழ் ! உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் தமிழ்…

தமிழே! – கவிஞர் தே.ப.பெருமாள்

நிறைவினில் மலர்ந்தொளிரும் தமிழே – என் நெஞ்சத்தில் அமுதாகும் தமிழே! உறவினில் உயிரான தமிழே –  என் உணர்வினில் கவிபேசும் தமிழே! ஒழுக்கத்தின் மணம்வீசும் தமிழே –  வீர உருவத்தில் கூத்தாடும் தமிழே! விழுப்பத்தின் நலமுரைக்கும் தமிழே –  நீதி மேவியே கோலோச்சும் தமிழே! நிலவின் குளிர்பெற்ற தமிழே –  கதிர் நிரப்பும் ஒளிபெற்ற தமிழே! மலரின் மெதுவேற்ற தமிழே –  தேன் வழங்கும் சுவை கொண்ட தமிழே! மின்னின் விசைகொண்ட தமிழே –  கடல் விரிக்கும் திரைமுழக்கத் தமிழே! கன்னி நிறைபொலியுந் தமிழே…

தமிழ்த்தாயே! – முனைவர் மறைமலை இலக்குவனார்

    உன்னை நாள்தோறும் மூச்சுத் திணற வைக்கிறார்கள் இந்த அச்சு அடிப்பாளர்களும் பத்திரிகைக் காரர்களும்! எலும்பில்லாத தங்கள் நாக்கையே ஆயுதமாய்க்  கொண்டு உன்னை நாள்தோறும் கொலை செய்யப் பார்க்கிறார்கள் ஊடகத் தொகுப்பாளர்கள்! உன்னைக் குற்றுயிரும் குலையுயிருமாகச் சித்திரைவதைச் செய்வதிலேயே இன்பம் அடைகிறார்கள் திரைப்பட நடிக நடிகையரும் பின்னணிப் பாடகர்களும்! உன்னை நாள்தோறும் ஊமைக்காயப் படுத்துகிறார்கள் பள்ளிப் பிள்ளைகளும் ஆசிரியர்களும்! பல்கலைக் கழகப்  பேர்வழிகளோ உன்னை மானபங்கப் படுத்த முயற்சி செய்கிறார்கள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்! தமிழ்த்தாயே! இத்துணை இன்னல்களுக்குப் பிறகும் இன்னும் …….

இலக்குவனார் எழுதுகோல்-வீழாமல் காக்கும் ஊன்றுகோல்!

  மண்ணுக்கும் பொண்ணுக்கும் பொன்னுக்கும் போராடும் மாந்தரிடை மொழிக்காய்ப் போராடி, தமிழர் இனமானம் காத்தபேரா சிரியர் இலக்குவனார் தனக்கு இலக்கு தமிழர் முன்னேற்றம் காசுபணம் விலக்கி நேர்மைத் திறத்தால் மாசிலா மனத்தால் போராடும் குணத்தால் ஓரிடம் நின்று பணியாற்ற வழியின்றி வேறுவேறு ஊர்கள் தோறும் சென்று காலத்தை வென்று சாதனை படைத்தவர்! கால்பதித்த இடமெலாம் தன்தடம் பதித்தவர்! கன்னித் தமிழை உயிராய் மதித்தவர்! செல்லும் இடமெலாம் தமிழ்முழக்கம் செய்ததால் செல்லரித்த மனங்கள் மலர்ந்தன! சோம்பிய இறகுகள் துடித்தன! சாம்பிய இமைகள் திறந்தன! தமிழை நினைந்து,…

கவிதை உறவு இலக்கியப் பரிசுப் போட்டி

 கவிதை உறவு இலக்கியப் பரிசுகள் பெற ஏப்பிரல் 10-ஆம் நாளுக்குள் புத்தகங்களை அனுப்பவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிப்பிரிவுகள் பரிசுகள் விவரம் வருமாறு:-  மரபுக் கவிதை  :  துரைசாமி(நாடார்) -இராசாம்மாள் நினைவுப் பரிசு புதுக்கவிதை : ஊர்வசி செல்வராசு நினைவுப் பரிசு மனிதநேயம்-வாழ்வியல் : சுப்பையா – தங்கம்மாள் நினைவுப் பரிசு சிறுகதை : சு. சமுத்திரம் நினைவுப் பரிசு இலக்கிய கட்டுரைகள் :  முனைவர் மு. வரதராசனார் நினைவுப் பரிசு ஆய்வு- பொதுக் கட்டுரைகள் :  முனைவர் சி. இலக்குவனார் நினைவுப் பரிசு மேலும்…

குறள் நெறி பரப்புக ! – புலவர் இரா. இளங்குமரன்

  1. தமிழன் பெருமை உரைத்ததற்குத்                 தக்க தேதும் உண்டேயோ? அமுதும் எந்தம் மொழி என்றால்                 ‘‘ஆ ஆ’’ உலகில் எத்துணைப் பேர் அமுத மொழியின் திளைக்கின்றார்?                 அளக்க வேண்டாம்’’ எனச் சொல்லி உமிழாக் குறையாய்ப் பழிக்கின்றார்.                 உள்ளம் நைய அம்மம்மா! 2. ‘‘ஆண்ட மொழியெம் மொழி’ என்றால்                 அழகாம் உங்கள் மொழி’யென்று மாண்ட மொழிக்காய் வாழ்வாரும்                 மட்டம் தட்டப் பார்க்கின்றார்; ஆண்டு வந்த அன்னியரோ                 ‘‘அடிமை ஆகிக் கிடந்தீரே! வேண்டும் இந்தப் புக’’…

என் தாய் – – தமிழ்மகிழ்நன்

அன்பினைக் காட்டி அறிவினைப் புகட்டி அணியெனத் திகழ்பவள் என்தாய்! தென்றலாய் வீசித் தேன்தமிழ் பாடி சிந்தையில் நிறைந்தவள் என்தாய்! மன்றிலில் பெயர்த்தி மாண்புடை பெயரர் மலர்ந்திட மகிழ்பவள் என்தாய்! வென்றிடும் வித்து! விளைநிலம் அவளே விறலவள் தந்தனள் வாழ்க! கனவினும் கடமை கணமதுள் மறவாள் கலங்கரை விளக்கமே என்தாய்! இனம்மொழி நாடு ஈடிலா உயிராய் ஏற்றியே போற்றுவள் என்தாய்! தனக்கென வாழாள் தன்மகார் வாழத் தன்னுயிர்ப் பொருளினைத் தருவாள்! மனமுயிர் மெய்யும் மலரென உருகும் மழலையர் குணமவள் குணமே! சுவைமிகு உணவை நொடியினில் சமைப்பாள்…