புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.16 -1.7.20
(இராவண காவியம்: 1.7.11 -1.7.15 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் கழகமோ டமர்ந்து தென்னர் கனிதமி ழாய்ந்தாய்ந் தன்னார்வழிவழி புகழின் வாழ வறிதுபார்த் திருத்தல் நம்மோர்க்கழகல வெனவே பாழு மலைகடல் கழகத் தாங்குப்பழகவே யேற்ற காலம் பாத்துமே யிருந்த தம்மா. நல்லவ ருறவை நாடி நணித்துவந் தணித்தா யன்னார் இல்லிடத் திருந்த ளாவி யின்புறு மறிஞர் போலச் சொல்லிடத் தினிய வின்பந் தோய்தமி ழுறவை நாடிப் புல்லியே யளவ ளாவப் பொருகடல் நினைத்த தம்மா. எண்டிசை யவாவு மின்பத் தியைந்துகட்…
அப்படி.. அப்படி! – மு இராமச்சந்திரன்
அப்படி.. அப்படி! ஆசைகளோடு அலைந்தால் எப்படி? அடிக்கடி வீழ்ந்து கிடந்தால் எப்படி? வரப்புகளின்றி. பாய்ந்தால் எப்படி வசதிகளின்றி குடித்தனம் எப்படி? அசதிகளோடு கிடந்தால் எப்படி? ஆட்டம் விடாது நடந்தால் எப்படி? சுகம் சுகமென்று கிடந்தால் எப்படி? சுற்றுச் சூழலை மறந்தால் எப்படி? கூடிக் களிக்க மறந்தால் எப்படி? குடும்பம் இன்றிக் கிடந்தால் எப்படி? அன்பும் நேசமும் விதைப்பாய் அப்படி! வசதிகள் தேடி செய்வாய் அப்படி! கூத்தும் குடியும் விடுவாய் அப்படி குழந்தைத் தனங்களை விடுவாய் சொற்படி.. கன்றாய் தாயாய் மகிழ்வாய் நற்படி கற்றாரோடு படிப்பாய்…
மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! – பழ.தமிழாளன்
மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! 1. நெற்றியிலே பெண்குறியும் நிலைபெற்ற(து) உண்டோ ? நெற்றிதனில் பிறந்தவராம் பிராமணர்கள் என்பார் உற்றதொரு பெண்குறியும் தோளதனில் உண்டோ ? உலகாள்வோர் பிறந்தகுறி அக்குறியே என்பார் பெற்றதொடை பெண்குறியும் பிறங்குவதும் உண்டோ ? பொருள்வணிகர் தோன்றுகுறி அதுதானாம் என்பார்.// நிற்கின்ற தாளதனில் பெண்குறியும் உண்டோ ? நிறையுழைப்புச் சூத்திரர்கள் பிறந்த குறி என்பார் ! 2. பிறக்குமிடப் பெண்குறிகள் பிறந்தவிடம் நான்காய் பேதமையை விளைவிக்கும் மனுநூலின் கூற்றை அறவுணர்வு பெற்றிருக்கும் …
தமிழவள்! – மு. இராமச்சந்திரன்
தமிழவள்! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார் தமிழர் குலக் கொழுந்தாக அன்னைத் தமிழை வஞ்சி வஞ்சி யெனவே அவளும் வளர்ந்தாள் அவளும் வளமாய் அறிவாய்!.. செஞ்சி செஞ்சி சீர்பெற அழகாய் செய்தனர் புலவர் கவியென வடிவாய் மன்னர் எழுந்தனர் மாதவள் செழிக்க மயக்கம் தீர்க்க சங்கம் பிறக்க… ஊரும் உலகும் அவள் பெயர் படிக்க உருண்டது காலம் பலர்வழி நடக்க… வளர்ந்தது சோலை ஆடலும் இனிக்க வந்து விழுந்தது இசையென முழக்க.. அணிந்தாள் அன்னை உடைபல உடுத்த அணிகலன் எடுத்து பதித்தனர் முத்தாய் பொன்னும் மணியும்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.11 -1.7.15.
(இராவண காவியம்: 1.7.6 -1.7.10. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 11. கேட்டிடிற் காதுக் கின்பம் கிளந்திடின் நாவுக் கின்பம் ஊட்டிடி னுளத்துக் கின்பம் உணர்ந்திடி னுணர்வுக் கின்பம் பாட்டுரை நடையிற் செல்லும் பழந்தமிழ்ப் பாவாய் நீதான் வீட்டிலா வின்ப மானால் விரும்பிடார் யார்தான் சொல்லாய். 12. அஎன வாயங் காக்கின் அன்னையுன் புலனா றைந்தும் முக்கனி தேன்பால் கண்டும் முகஞ்சுழித் தினைந்தே யொல்கப் புக்கெழீ யியல்பா யின்பம்…
பகுத்தறிவுத் தன்மானப் பெரியார் பகலவனே ! – பழ.தமிழாளன்
பகுத்தறிவுத் தன்மானப் பெரியார் பகலவனே ! 1. மனுநூலை நம்பவைத்து மக்களையே மடமைதனில் ஆக்கி வைத்த மாண்பில்லா ஆரியத்தின் மடமைமுகத் தோலுரித்த மாண்பின் மிக்கோன் பனுவலெனும் வேதத்தின் முடக்காற்றை மணக்காதே வைத்த பெம்மான் பிறப்பதனில் சாதிகண்டு பரமனுச்சி அமர்ந்திருந்த ஆரி யத்தை நுனிநாவாம் பகுத்தறிவின் அம்பாலும் கோலாலும் வென்ற வீரன் நற்றமிழத் தன்மானம் பகுத்தறிவால் ஆரியத்தை விரட்டி வைத்தோன் தனிச்சிறப்பார் பெரியாரே தமிழினத்தின் மூச்சுக்காற் றாக மாறித் …
திலீபன் சாகவில்லை! – யோ புரட்சி
திலீபன் சாகவில்லை! பசி வந்தால் பற்று பறக்காது பசி வந்தால் பத்தும் பறந்திடுமெனும் பழமொழியை பார்த்தீபன் பொய்யாக்கினான். தேசம் பசித்திருக்கலாகாதென தேகம் பசித்திருந்தான். திருவிழா காணும் நல்லூர் தியாக விழா கண்டதே. ஆலய பூசை மறந்து உறவுகள் அண்ணா உன்முன் திரண்டதே. காந்தி அன்று இருந்திருந்தால் உன் காலடிக்கே வந்திருப்பார். திலீபன் உன் செய்கை கண்டு கிரீடம் தந்திருப்பார். தியாகத்தை பருகியதால்தானா சிறுதுளி நீர் பருகவில்லை. மெழுகாய் உருகியதால்தானா உணவு கேட்டு உருகவில்லை. மரணத்துக்கு போகையில் யாரும் மாலை சூடுவரோ.. இறக்கப் போகுமுன் எனக்குப்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.6 -1.7.10.
(இராவண காவியம்: 1.7.1-1.7.5. தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 6. பொருவள மின்றியே புகல டைந்தெனப் பெருவள மிக்கதன் பெயரின் மேம்படும் ஒருவள நாட்டினை யுண்டு வந்திடத் திருவுளங் கொண்டதத் தீய வாழியும். 7. அவ்வள நாட்டினும் அரிய தாகவே குவ்வளத் தமிழர்கள் கொண்டு போற்றிடும் இவ்வுல கத்திலா வினிமை மிக்கிடும் செவ்விய தமிழுணத் தேர்ந்த வக்கடல். 8. இனிமையி னுருவினள் இயற்கை வாழ்வினள் …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.1-1.7.5.
(இராவண காவியம்: 1.6.41- 1.6.43 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 1. இங்ஙனம் பல்சிறப் பியைந்து பல்வள முங்கியே செந்தமிழ் மொழியை யோம்பியே தங்களுக் கரசர்கள் தாங்க ளாகவே மங்கலம் பொருந்திட வாழ்ந்து வந்தனர். 2. இவ்வகை வாழ்கையி லினிது போற்றிடும் செவ்வியர் பொருளினைத் தீயர் நன்றென வவ்வுத லுலகியல் வழக்கம் போலவே கவ்வைநீர் வேலையுங் கருத்துட் கொண்டதால். 3. அல்லது வழியிற்கேட் பாரற்…
புரட்சி விதைகளை விதைத்தாரே இலக்குவனார்
புரட்சி விதைகளை விதைத்தாரே! தத்தனா தானனத் …… தனதான தத்தனா தானனத் …… தனதான ……… பாடல் ……… வற்றிடா நீர்வளச் சிறப்போடு உற்றசீர் வாய்மேடு–தலம்வாழ்ந்த சிங்கார வேலர் இரத்தினத்தாச்சி செய்தவப் பயனென உதித்தாரே ஒப்பிலாப் போர்க்குண மறத்தோடு முத்தமிழ் காத்திடப் பிறந்தாரே வளைந்திடாத் துணிவுக்கு உருவாக வையகம் போற்றிய இலக்குவரே! தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன …… தனதான முற்றிய புலவரின் உற்றநல் துணையொடு நற்றமி ழறிவினை –உளமாரப் பெற்றபின் இளையவர் கற்றிடும் வகையினில்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.41- 1.6.43
(இராவண காவியம்: 1.6.36- 1.6.40 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் 41. தகையுற வத்தமிழ்ச் சங்கந் தங்கினோர் வகையுறப் புலவர்கள் வகுத்த பாக்களைத் தொகையுறச் செய்துநூல் தொகுத்து மோதியும் திகழுற வாய்ந்தநேர் செய்து வந்தனர். 42. முத்தமி ழாய்தர முறையி னாக்கிய அத்தமிழ்ச் சங்கமவ் வண்ணல் பின்னரும் வைத்ததம் முன்னவர் வழியைப் பின்றொடர்ந் தொத்தினி தோம்பிட வோங்கி வந்ததே. 43. அந்நிலை யிருந்தநம் அருமைத்…
வெற்றிச்சிங்கம் இலக்குவர்- மறைமலை இலக்குவனார்
வெற்றிச்சிங்கம் இலக்குவர் தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன …… தனதான சட்டத்துறை நீதித் துறை பொறியியல் நுட்பத்துறை ஆட்சித்துறை அறிவியல் ஒட்பம் பல தேர்ந்திடும் மருத்துவம் எனவோதும் புத்தம்புது கல்வித்துறைகளில் தித்தித்திடும் தமிழ்மொழி இடம்பெற நித்தம் வற் புறுத்திநம் அரசுடன் –போராடி பக்தவத்சலரது ஆட்சியில் மக்கள்திரள் தெருவினில் கூட்டியே தெள்ளத்தெளி தமிழில் பரப்புரை – செய்தாரே உச்சிக்கதிர் வெப்பச் சருகென மக்கள்நலன் கெட்டுத் தொலைந்திட ஒற்றைத்தனி மொழியா என இவர் —- கிளர்ந்தாரே விட்டுக் கொடுத்திடின் நாம்…
