இலங்கைக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் தேவை: த.ஈ.ஆ.அ (டெசோ)

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாகப் பன்னாட்டு உசாவல் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற,த.ஈ.ஆ.அ (டெசோ) அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் நடைபெற்று வரும் பொதுவளஆய மாநாட்டில் இந்தியா பங்கேற்றதற்கு, திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதி தலைமையிலானஇவ்வமைப்பு அமைப்பு, மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது. எனினும் தமிழ் ஈழத்தில் நடைபெற்ற பேரினப்படுகொலையை வெறும் போர்க்குற்றமாகவும் மனித உரிமை மீறல்களாகவும் மட்டுமே குறிப்பிட்டுள்ளது வருந்தத்தக்கது.

தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’

அன்புடையீர், வணக்கம்.  ஒரு புதிய முயற்சியாக, நம் தமிழ் மக்களின் தேவைக்கான ஒரு முயற்சியாக  தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’ அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதை 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘அறிஞர் அண்ணா அறக்கட்டளை’ சார்பில் அமைக்கவிருக்கிறோம். இது யாரும் எதிர்பாராத முயற்சிதான். ஆனால் இந்த ‘அறிஞர் அண்ணா இல்லம்’ மனிதகுலம் இருக்கும் வரை நிலைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதை அமைக்க விரும்புகிறோம்.  ஆகவே இப்போது இருக்கிற அரசியல் கட்சிகளின் சூழ்நிலையில், எந்த கட்சியின் தலையீடும் இல்லாத வகையில் இந்த இல்லத்தை உடனடியாக நாம்…

பூட்டப்பட்டது அண்ணா மேம்பாலம்!

  மாணாக்கர் எழுச்சி!   முள்ளிவாய்க்கால் முற்றத்தை உடனே மறு சீரமைப்பு செய்ய வேண்டியும் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன்  முதலான தமிழ் ஆர்வலர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டியும்  மாணாக்கர் போராட்டம் நாடெங்கும் நடைபெறுகிறது. அதில் ஒன்றாக, வரலாற்றில் முதன்முறையாக சென்னை அண்ணா மேம்பாலத்தைச் சங்கிலியால் பூட்டிப் போக்குவரத்தை முடக்கினர்  மாணாக்கர்கள். இப்போராட்டத்தில் 70 மாணாக்கர்களும் இயக்குநர் கௌதமன்  முதலான உணர்வாளர்கள் பலரும் தளையிடப்பட்டுள்ளனர். போராட்டங்கள் மேலும் பரவும் முன்னர் அரசு தலையிட்டு நல்ல முடிவு காணும் எனப் பொதுமக்கள்…

பரிவுகாட்டப்பட வேண்டியவர்களைப் பாழ்கிணற்றில் தள்ளலாமா?

சிறப்புமுகாம்வாசிகள் மடல் அனுப்புநர் : இலங்கைச் சிறைவாசிகள் இலங்கைச் சிறப்புச்சிறை மத்தியச் சிறை வளாகம் திருச்சி ஐயா வணக்கம். நாம் இந்த  மக்களாட்சி நாட்டின் விருந்தாளிகள். எம்மீது ஐயத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுப், பிணையில் வெளியே வந்தவர்கள் . வழக்கை முடிக்காமல் சொந்த நாட்டிற்குச் சென்று விடுவார்கள் எனும் அடிப்படையில் வெளிநாட்டவர் தடுப்புச் சட்டம் 3[2]உ-ஐப் பயன் படுத்தி எம்மைச் சிறப்பு முகாம்களில் அடைக்கின்றீர்கள். எமது விடுதலைக்கு நீண்ட காலம் ஆகும் என்பதைக் கருத்திற் கொண்டு உச்சநீதி மன்றம், உயர் நீதி மன்றங்கள்…

மும்பை சு.குமணராசனுக்குப் பாராட்டு

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில்  பத்து நாட்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ”தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் இதழியல் பணிக்காகப் பாராட்டப் பெற்றார்.   விழாவில் பாலச்சந்திரன் இ.ஆ.ப. பாராட்டிச் சிறப்புரையாற்றினார்.

மருத்துவப் பண்டுவம் கடனாளி ஆக்குகிறது: சசி தரூர்

சென்னை : ”மருத்துவப் பண்டுவத்திற்காகக், கடனாளிகளாகும் நிலை, இந்தியாவில் நிலவுகிறது. எனவே, குறைந்த செலவில், தரமான மருத்துவம் வழங்க, மருத்துவர்கள் முன்வர வேண்டும்,” என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், சசி தரூர் கேட்டுக் கொண்டு உள்ளார். இராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின், 18 ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள், பட்டயப்  படிப்புகளில், சிறப்பிடம் பெற்ற, 51 மாணவ, மாணவியருக்குத் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றுகளை வழங்கி, சசி…

தளையிடப்பட்ட தமிழாசிரியரை விடுதலை செய்க!

 சத்தியம் தொலைக்காட்சியில்   கடந்த வாரம் ‘சத்தியம் – அது சாத்தியம்’ நிகழ்ச்சி இரவு 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை நடந்தது. அதில், “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா? தவறா?” என்ற விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காங்கிரசு சார்பில்சட்ட மன்ற உறுப்பினர் விசயதாரணி , பாசக மாநிலப் பொருளாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று விவாதம் செய்துகொண்டிருந்தனர். காங்.கின் பேச்சு சரியாக இல்லை என்றும் இதனால் உணர்வுள்ள ஒருவர் தொலைபேசி வாயிலாகப் பேச வந்துள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றம் வைப்பது தமிழர்களின் கடமை. இதைப்பற்றி…

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!

  இந்திய – சிங்களக் கூட்டுப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவேந்தும் விதமாக, தஞ்சை விளாரில், உலகத் தமிழர் பேரமைப்பால் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுவரையும், பூங்காவையும் இடித்த தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 போராளிகளை விடுதலை செய்யக் கோரியும்

மதிமுக வழக்குரைஞர் மாநாடு : விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி தீர்மானம்

    மதிமுகக் கழக வழக்குரைஞர் மாநாடு 16.11.13 சனிக்கிழமை காலை 10.00 மணிக்குச்  சென்னை, எழும்பூர், வேனல்சு சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராசு மகாலில் கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்குரைஞர் தேவதாசு தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் காலை அமர்வில் பின்குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஏற்காடு இடைத்தேர்தல் : 27 பேர் வேட்புப் பதிவு

ஏற்காடு இடைத்தேர்தலில்,  திசம்பர், 4 இல் நடைபெற உள்ள, ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான, வேட்புப்பதிவு கடந்த, 9 ஆம் நாள் தொடங்கி, நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதுவரை, அ.தி.மு.க., – தி.மு.க., வேட்பாளர்கள் உட்பட, 27 பேர்  விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களில், இரண்டு பேர், அ.தி.மு.க.,

யாழில் காவல்துறையினர் கொடூரமான தாக்குதல்: உலகத் தலைவர்கள் அதிர்ச்சி

  காணாமல் போனவர்களுடைய உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைப்  பொறுத்துக் கொள்ள இயலாத சிங்களக்காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக பெண்கள் என்று பாராமல் எம்மையும் பாதிரியார்களையும் தாக்கினர். கவனயீர்ப்புப் போராட்டத்தில் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சரவணபவன்,

இசை அமைப்பாளர் பரத்வாசின் திருக்குறள் பாடல் பேழை

இசை அமைப்பாளர் பரத்வாசு. 1330 திருக்குறள்களையும் 500 பாடகர்களைக் கொண்டு பாட வைத்துத் திருக்குறள் பாடற்பேழை உருவாக்குகிறார்.  திரையிசையால் பணம் கிடைத்தாலும் மன நிறைவிற்காகத் திருக்குறள் பாடலிசை முயற்சியில் ஈடுபட்டுவருவதாக இசைஅமைப்பாளர் பரத்வாசு கூறுகிறார்.