திருக்குறள் அறுசொல் உரை – 087. பகை மாட்சி : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 086. இகல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 087. பகை மாட்சி படைஅறிவு, வலிமை, நல்துணை பொறுமை போன்றன பகைச்சிறப்புகள். வலியார்க்கு மா(று)ஏற்றல் ஓம்புக; ஓம்பா      மெலியார்மேல் மேக பகை.      வலியார் பகையை, விலக்குக;        மெலியார் பகையை, விரும்புக.   அன்(பு)இலன், ஆன்ற துணைஇலன், தான்துவ்வான்,      என்பரியும் ஏ(து)இலான் துப்பு….?      அன்பு,துணை, வலிமை இல்லான்,        பகைவரை எப்படி எதிர்கொள்வான்….?   அஞ்சும், அறியான், அமை(வு)இலன், ஈகலான்,      தஞ்சம்…

குறளின்பம் : தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால் – தமிழநம்பி

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. – குறள். 1107   இது, காமத்துப்பாலில், புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில் ஏழாம் குறளாகும். இக்குறளின் பொருள் : அழகும் ஒளிறும் மாநிறமும் பெற்ற அருமை நிறைந்த காதலியொடு கொள்ளும் புணர்ச்சித் தழுவல், தமக்குச் சொந்தமான உரிமை இல்லத்தில் இருந்துகொண்டு, தம்முடைய சொந்த முயற்சியால் முறையாக ஈட்டிய வருவாயைக்கொண்டு சமைத்து உருவாக்கப்பட்ட உணவைத், தாமும் விருந்தினருமாக, நிறைவாரப் பகுத்துஉண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் இணையானது என்பதாகும்….

திருக்குறள் அறுசொல் உரை – 086. இகல்: வெ. அரங்கராசன்

(அதிகாரம்  085. புல்அறிவு ஆண்மை தொடர்ச்சி) 02. பொருள் பால்     12. துன்ப இயல் அதிகாரம்   086. இகல் வெறுப்பு, பகைமை, பேரிழப்பு துயரம்எனப் பெருக்கும் மனமாறுபாடு. இகல்என்ப .எல்லா உயிர்க்கும், பகல்என்னும்      பண்(பு)இன்மை பாரிக்கும் நோய்.       பிரிவுஎனும் தீப்பண்பை வளர்க்கும்        கொடிய நோய்தான் மனமாறுபாடு.   பகல்கருதிப் பற்றா செயினும், இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.      பிளவால் விரும்பாதன செய்வார்க்கும்,        மாறுபாட்டால், தீங்கு செய்யாதே.     இகல்என்னும் எவ்வநோய் நீக்கின், தவல்இல்லாத்…

திருக்குறள் அறுசொல் உரை – 085. புல்அறிவு ஆண்மை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 084. பேதைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம்  085. புல்அறிவு ஆண்மை    பேர்அறிஞர் என்று காட்டுதற்குக் கீழ்அறிவைக் கைஆளும் அறியாமை அறி(வு)இன்மை, இன்மையுள் இன்மை; பிறி(து)இன்மை,      இன்மைஆ வையா(து) உலகு.    அறிவு இல்லாமையே, வறுமை;        பிறஎலாம், வறுமைகள் அல்ல.   அறி(வு)இலான் நெஞ்(சு)உவந்(து) ஈதல், பிறிதுயாதும்    இல்லை, பெறுவான் தவம்.        அறியான் மனம்மகிழ்ந்து தருதல்,        பெறுவான் செய்த தவத்தால்தான்.   அறி(வு)இலார், தாம்தம்மைப் பீழிக்கும் பீழை,   …

திருக்குறள் அறுசொல் உரை – 083. கூடா நட்பு: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 082. தீ நட்பு தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல் அதிகாரம் 083. கூடா நட்பு  கூடாத மனங்களின் கூடாத போலிமை நட்போடு கூடாமை. சீர்இடம் காணின், எறிதற்குப் பட்டடை,    நேரா நிரந்தவர் நட்பு.          மனம்கூடா நண்பர், வாய்ப்புவரின்,      துயரம் செய்வார்க்கும் துணைஆவார்.     இனம்போன்(று) இனம்அல்லார் கேண்மை, மகளிர்    மனம்போன்று, வேறு படும்          போலிமை நண்பர்தம் நட்பும்,          விலைமகளிர் மனம்போல் மாறுபடும்.   பலநல்ல கற்றக்…

திருக்குறள் அறுசொல் உரை – 084. பேதைமை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 083. கூடா நட்பு தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 084. பேதைமை அறிய வேண்டுவன அறியாமையும்,    அறிய வேண்டாதன அறிதலும். பேதைமை என்ப(து)ஒன்று யா(து)…?எனின், ஏதம்கொண்டு,    ஊதியம் போக விடல்.         தீமையைப் பிடித்துக் கொண்டு,          நன்மையைப் போகவிடும் அறியாமை.   பேதைமையுள் எல்லாம் பேதைமை, காதன்மை      கைஅல்ல தன்கண் செயல்.         ஒழுக்கம் அல்லாத செய்கை,        அறியாமையுள் பெரிய அறியாமை.   நாணாமை, நாடாமை, நார்இன்மை,…

பிறப்பால் வேறுபடுத்துபவன் செத்தவனாவான்! (குறள் கருத்து) – தமிழ நம்பி

ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். – குறள் 214.   இக்குறள் அறத்துப்பாலில் ‘ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் நான்காவதாகும். இதன் பொருள் : மாந்தராய்ப் பிறந்தவர் அனைவரும் ஒப்பானவர், சமமானவர், ஒத்தவர் என்பதை அறிகின்றவனே உயிர்வாழ்கின்றவன் ஆவான். மற்றையான் செத்தாருள் ஒருவனாக – நடைப்பிணமாக – வைத்து எண்ணப்படும் என்பதாகும்.   ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ – என்று 972-ஆம் குறளிலும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். எல்லா உயிர்களும் சமமானவை என்று அறியாதவன் நடைப்பிணமாகக் கருதப்படுவதால், அஃறிணையைக் குறிப்பிடுவதைப் போல ‘செத்தாருள் வைக்கப்படும்!’…

திருக்குறள் அறுசொல் உரை – 082. தீ நட்பு : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 081. பழைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல்  அதிகாரம் 082. தீ நட்பு  தீப்போன்று, கொடிய பேர்அழிவுதரு தீமையான நட்போடு சேராமை.   பருகுவார் போலினும், பண்(பு)இலார் கேண்மை      பெருகலின், குன்றல் இனிது.            பண்புஇலார் போலித் தீநட்பு        நிறைதலினும், குறைதல் இனிது.     உறின்நட்(டு), அறின்ஒரூஉம், ஒப்(பு)இலார் கேண்மை,    பெறினும், இழப்பினும் என்?          பெறும்போது, ஓங்கும்; அறும்போது,          நீங்கும் தீநட்பு எதற்கு?   உறுவது…

திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்- ஆய்வுரை 2. : இலக்குவனார் திருவள்ளுவன்

2   இதேபோல், அடுத்த இயலில், ‘கனியிருப்ப’ என்பதற்குப் பிற உரையாசிரியர்கள் விளக்கங்களைத் தொகுத்தளித்துள்ளார்.   நாக்கின் இயல்பு முதலானவற்றைக்கூறிவிட்டு, கனியிருப்பக் காய்கவரக் கூடாமைக்குப் பின்வரும் வகையில் விளக்கம் அளிக்கிறார். 1.) கனியைக் கவர்ந்து உண்பதால் உண்டாகும் ஆக்கங்கள் 2.) காய்களை உண்பதால் உண்டாகும் கேடுகள் 3.) கனிச்சொல் சொல்வதால் உண்டாகும் ஆக்கங்கள். 4.) காய்ச்சொல் சொல்வதால் உண்டாகும் கேடுகள். இவ்வாறு ஆழமாக விளக்குவதுடன் இன்சொற்களங்கள் யாவை, வன்சொற்களங்கள் யாவை எனவும் நமக்கு உணர்த்துகிறார்.   கடுஞ்சொல் வேண்டா, கனிச்சொல் வேண்டும் என்பதற்கு அறநெறிச்சாரம்,…

திருக்குறள் அறுசொல் உரை – 081. பழைமை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 080. நட்பு ஆராய்தல் தொடர்ச்சி) 02. பொருள் பால்     11. நட்பு இயல். அதிகாரம் 081. பழைமை பற்பல ஆண்டுகளாய்த் தொடரும்  பழம்நட்பின் சிறப்புஉரிமை, பெருமை.   பழைமை எனப்படுவ(து) யா(து)?எனின், யாதும்    கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.        எதனாலும் கீழ்மைப்படா நட்புஉரிமை          பெற்ற நட்பே, பழைமை.       நட்பிற்(கு) உறுப்புக் கெழுதகைமை; மற்(று)அதற்(கு)      உப்(பு)ஆதல், சான்றோர் கடன்.          உப்புபோல், அமையும் உரிமைச்        செயல்தான் நட்பிற்கு உறுப்பு. பழகிய நட்(பு)எவன்…

திருக்குறள் அறுசொல் உரை – 080. நட்பு ஆராய்தல் : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 079. நட்பு தொடர்ச்சி) 02. பொருள் இயல் 11. நட்பு இயல்      அதிகாரம் 080. நட்பு ஆராய்தல் வாழ்க்கை முழுதும் கூடவரும் ஆழ்நட்பை, ஆராய்ந்து ஏற்றல்.   நாடாது நட்டலின் கே(டு)இல்லை; நட்டபின்,        வீ(டு)இல்லை, நட்(பு)ஆள் பவர்க்கு.          ஆராயா, நட்பு கேடு; ஏன்எனில்,          நட்புக்குப்பின் விடுபடல் கடினம்.   ஆய்ந்(து)ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை,     தான்சாம் துயரம் தரும்.            ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் நட்பு,          இறுதியில் சாவுத் துன்பம்தான்.  …

திருக்குறள் அறுசொல் உரை – 079. நட்பு : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 078. படைச் செருக்கு தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல்      அதிகாரம் 079. நட்பு   இணைஇலா நலம்தரும் துணையாக  விளங்கும் வளர்நட்பின் இலக்கனம்.   செயற்(கு)அரிய யாஉள நட்பின்? அதுபோல்,    வினைக்(கு)அரிய யாஉள காப்பு?          நட்புபோல் அரியதோர் நல்உறவும்,        பாதுகாப்பும், வேறு எவை?         நிறைநீர, நீரவர் கேண்மை; பிறைமதிப்    பின்நீர, பேதையார் நட்பு.           அறிஞரின் நட்பு, வளர்பிறை;        அறிவிலியின் நட்பு தேய்பிறை.   நவில்தொறும்…