தமிழர்களின் அடையாளம் திருக்குறள் – அமெரிக்கவாழ் தமிழர் உரை

      தமிழர்களின் அடையாளம் திருக்குறள் அமெரிக்க வாழ் தமிழர் உரை   காட்சி வழியாகத் தமிழில் இயற்பியல் கணிதம்,  பாடங்களைப்   பெருந்தொடர் குறுந்தகடாக  வழங்குதல் விழா      தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும், அவற்றின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது.        பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம், விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றார்.   பள்ளிச் செயலர்…

ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க!

“தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்”  சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கருத்தரங்கில் கோரிக்கை!   தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு விழா –  கருத்தரங்கம்,  மாசி 16, 2047 / 28.02.2016 மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.   சென்னை எம்ஞ்சியார் நகர் மகா மகால் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்…

உலகாள்வோம் உயிர்த் தமிழால்! – குறள்நதி

  உலகாள்வோம் உயிர்த்    தமிழால்!            பாரெங்கும் நிலைத்திட்ட பொங்குதமிழ் -அன்று சங்கம்பல கண்டிட்ட மதுரத்தமிழ் அகத்துடன் புறம்தந்த தீந்தமிழ் -என்றும் அணியாக நிலைத்திட்ட பைந்தமிழ் இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !            காவியம்பல தந்திட்ட முத்தமிழ் -நமக்குள் கவிகள்பல புகுத்திட்ட பூந்தமிழ் கவிபாட  இனித்திட்ட தேன்தமிழ் -நம்மையெல்லாம் கவிஞனாய் இங்குப் பாடவைத்த அருந்தமிழ் இன்பமுடன் நாம் தமிழைப் படித்திட்டால் -இனி உலகாள்வோம் உயிர்த்தமிழால் எந்நாளுமே !    தமிழ்த்தாயைத் தாலாட்டும்  பத்துப்பாட்டு-எங்கும் தமிழ்மொழியை வளர்க்கின்ற  எட்டுத்தொகை…

நூலை ஆராய்ந்து ஏற்க! – உமாபதி சிவனார்

நூலை ஆராய்ந்து ஏற்க!   தொன்மையாம் எனும் எவையும் நன்றாகா; இன்று தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா; துணிந்த நன்மையினார் நலங்கொள்மணி பொதியும் அதன் களங்கம் நவையாகாது என உண்மை நயந்திடுவர்; நடுவாம் தன்மையினார் பழமை அழகு ஆராய்ந்து தரிப்பார்; தவறு நலம் பொருளின்கண் சார்வு ஆராய்ந்து அறிதல் இன்மையினார் பலர் புகழில் ஏத்துவர் ஏதிலர் உற்று இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கு என ஒன்று இலரே   -உமாபதி சிவனார், சிவப்பிரகாசம், அவையடக்கப்பாடல்

தமிழக வாழ்வாதார அழிப்பு – கருத்தரங்கம்

இந்திய எரிவளி ஆணையக் (GAIL) குழாய்கள் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும் – கருத்தரங்கம்   மாசி 08, 2047 – 20-2-2016 சனிக்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை இதழாளர் மன்றத்தில் இந்திய எரிவளி ஆணையக் (ழுஹஐடு) குழாய்ப் பதிப்பின் கண்டத்தை(ஆபத்தை) விளக்கும் இதழாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தற்சார்பு உழவர்கள் சங்கத் தலைவர் தோழர் கி.வெ.பொன்னையன், திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பார்கள் தோழர் பிரவின், தோழர் திருமுருகன், இந்திய எரிவளி ஆணையக் (GAIL)…

புதுச்சேரி – தனித்தமிழ்க் கழகத்தின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஒளிப்படங்கள்

  .ஆ. 2047   மாசி – கும்பம் 3  -15.02.2016 புதுச்சேரி தனித்தமிழ்க் கழகம் நடத்திய தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா! தலைமை :பெ.தமிழ்நாவன் வரவேற்புரை: சீனு.அரிமாப்பாண்டியன் கருத்துரை: சி.தமிழ்மாறன், சி.வெற்றிவேந்தன், முத்து.சேரன், புதுவைத் தமிழ்நெஞ்சன் சிறப்புரை: முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் நன்றியுரை: கு.அ.தமிழ்மொழி   [ படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம். ]

தாய்மொழிநாள் உரை – தமிழ் சூசை

இனிய நண்பர்களே! மாசி 09, 2047 – 21 02 2016 பிற்பகல் 3.00 மணிக்குத் திருச்சிராப்பள்ளி தூய பவுல்இறையியல் கல்லூரியில் பாவாணர் தமிழியக்கக் கூட்டம்   தலைப்பு : “தாய்மொழிநாள்” பன்னாட்டு மன்றம் (U.N.O) அறிவித்தநாள். வங்காளர்கள் பங்களாதேசத்தில்தாய்மொழிக்காக உயிர் நீத்தநாள். தாய்மொழி உணர்வு தாய்மொழிவழிக்கல்வி உலகத்தாய்மொழிக்காப்பு போர்கள். இந்தி எதிர்ப்புப்போர்பற்றிய என்(இ.சூசை) உரை . நண்பர்கள்,  மாணவர்கள் வருக! வருக! இ.சூசை

தருசன் படுகொலைக்கு எதிரான மே 17 இயக்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

  தருசன் படுகொலை என்பது இனப்படுகொலையின் தொடர்ச்சியே!   சிங்களப் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, வயிற்றில் கல்லைக் கட்டி, கிணற்றில் வீசிப் படுகொலை செய்யப்பட்ட ஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தருசன் படுகொலைக்கு நீதி கேட்டுக் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தினால் தை 22, 2047 / 05-02-2016 வெள்ளி அன்று மாலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது.   தருசன் படுகொலை என்பது இனப்படுகொலையின் தொடர்ச்சியே! இலங்கையின் அரசியல் சட்டம் தமிழர்களுக்கு எதிரானது என்பதே உண்மை. அமெரிக்கத் தீர்மானம் என்பது…

சென்னைக் கம்பன் கழகத்தின் தமிழ்க் கூடல்

அன்புடையீர் வணக்கம். சென்னைக் கம்பன் கழகத்தின் தமிழ்க் கூடல் தனிப்பாடல் வரிசையில்  தை 26, 2047 / 09-02-2016 அன்று   ‘குமரகுருபரர்’ பற்றி சிறப்புரையாற்ற இருப்பவர் முனைவர் தெ. ஞானசுந்தரம். ‘சிவதனுசு’ பற்றி சிற்றுரை ஆற்ற இருப்பவர் செல்வி  அனுகிரகா ஆதிபகவன். ‘தமிழ்நிதி’ விருது பெறுபவர் முனைவர் இரா. நாராயணன். உறவும் நட்புமாய் வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.