தமிழ்ச்செல்வி தமிழமல்லன் மணிவிழா, புதுச்சேரி : ஒளிப்படங்கள்
பங்குனி 14, 2047 / மார்ச்சு 27, 2016 மாலை 6.30 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
திராவிடர் விடுதலைக்கழகம் நடத்தும் கொள்கைப் பயிலரங்கம்
சித்திரை 05, 2047 / ஏப்பிரல் 18, 2016 காலை 9.30 – மாலை 5.30 திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி திராவிடர் விடுதலைக்கழகம்
மலையகக்கல்வி மேம்பாட்டுத்திட்டம் – புலமைப்பரிசில் விழா
புதுச்சேரி, சித்தர் இலக்கியப் பன்னாட்டுக் கருத்தரங்க ஒளிப்படங்கள்
புதுவை நடுவண் பல்கலைக்கழகத் தமிழியற்புலம், பல்கலைக் கழக நல்கைக்குழுவின் ஆதரவோடு(UGC), பங்குனி 11,12 & 13 மார்ச்சு 24, 25 & 26. 2016 வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடைபெற்ற “சித்தர் இலக்கியம்”குறித்தப் பன்னாட்டுக் கருத்தரங்க ஒளிப்படங்கள் தொகுதி 01 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] [embpicasa id=”6269002082529528289″]
த.தமிழ்ச்செல்வி – க.தமிழமல்லன் மணிவிழா
‘வெல்லும் துாயதமிழ்’ மாத இதழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி – தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் மணிவிழாவைக் க.ப.அறவாணர் நடத்தி வைத்தார். முனைவர் தாயம்மாள் அறவாணர் வாழ்த்துரை வழங்கினார். இசைஞர் முருகேச கந்தசாமி வாழ்த்துப்பா பாடினார். த.தமிழ்நேயன், ச.கலைமதி ,செனித் இனியா ஆகியோர் தமிழ் உணர்வுப் பாடல்களைப் பாடினர். முன்னதாக அனைவரையும் ஆசிரியை த.தமிழ்க் கொடி வரவேற்றுப் பேசினார். இம்மணிவிழா குயவர்பாளையம் மகிழ்ச்சி(போன்சிழார்) உணவகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு முதல்வர் ந.அரங்கசாமி அவர்கள் தமிழ்ச்செல்வி முனைவர் க.தமிழமல்லன் இணையரை வாழ்த்தினார்.
தமிழர் தேசத்திற்கான ஏற்பும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட வேண்டும்! – கடலோனியா நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான ஏற்பும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட வேண்டும்! – கடலோனியா நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்கான ஏற்பும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்பட வேண்டுமென இசுபெயின் நாட்டில் பிரிந்து செல்லும் உரிமை கோரிப் போராடும் கடலோனியா (Cataloniya) மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அல்போன்சு உலோபெசு தேனா தெரிவித்துள்ளார். கடந்த பங்குனி 10, 2047 / மார்ச்சு 23, 2016 அன்று பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்று கூடல் நடத்தப்பட்டது….
கொழும்பு கம்பன் விழா 2016
அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கொழும்பு கம்பன் விழா 2016 இரண்டாம் நாள் இரண்டாம் (26) அமர்வில் விருந்தினராகக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். இந் நிகழ்வில் படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் என்ற இராமயண நாடகமும், மேல் முறையீட்டுப் பட்டிமன்றமும் நடைபெற்றன. பா.திருஞானம் – 0777375053
சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்!
தமிழ்த் தேசியப் போராளித் தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி படத்திறப்பு – நினைவேந்தல்! தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும், தம் இரு அகவைக் குழந்தை இளம்பிறையுடன் பங்கேற்றுவந்த, தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளரும், பேரியக்கச் சென்னைச் செயலாளர் தோழர் வி. கோவேந்தன் மனைவியுமான தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி, பேரியக்கத்தின் தலையில் இடிவிழுந்ததுபோல் கடந்த 11.03.2016 அன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு அகவை 31. தோழி சன்னாவும் கிட்டத் தட்ட முழு நேரச் செயல்பாட்டாளராகவே…
காவும் ஆரியங்காவும் – இரா.பி.சேது(ப்பிள்ளை)
கா என்னும் சொல் சோலையைக் குறிக்கும். அது காவு எனவும் வழங்கும். மேற்குத் தொடர் மலையில் செங்கோட்டைக்கு அருகே ஆரியங்காவு என்னும் ஊர் உள்ளது. ஆரியன் என்பது ஐயனாருக்குரிய பெயர்களில் ஒன்று. ஐயனாரை மலையாள நாட்டார் ஐயப்பன் என்பர். ஆரியங்காவில் ஐயப்பன் வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்குத் தொடர் மலைச்சாரலில் அமைந்த நெடுஞ்சோலையில் ஐயப்பன் கோயில் கொண்டமையால் அவ்வூர் ஆரியங்காவு என்று பெயர் பெற்றதென்பது நன்கு விளங்குவதாகும். தொண்டை நாட்டில் திருமாலுக்குரிய திருப்பதிகளுள் ஒன்று திருத்தண்கா எனப்படும். அழகும் குளிர்மையுமுடைய அக்…
தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்க ஒளிப்படங்கள்
மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016 அன்று சென்னை இராணிமேரிக்கல்லூரி(தன்னாட்சி) தமிழ்த்துறை நடத்திய தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார் நினைவுக் கருத்தரங்கத்தின்பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படங்கள் சிறப்புப் பொழிவுகள்: பேராசிரியர் முனைவர் இ.மறைமலை தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு கருத்தரங்கத்தலைவர் : முனைவர் ந.கலைவாணி கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் : முனைவர் சி.கலைமகள் தலைமையுரை : முனைவர் இர.அத்தர்பேகம் புரவலர் : முனைவர் இ.மதியழகி [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!] [embpicasa id=”6261464116110832241″]
திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் முவ்விணை விழா ஒளிப்படங்கள்
தை 24, 2047 / பிப். 07, 2016 திருவண்ணாமலையில் திருவண்ணாமலைத்தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்கம் 100, மொழிப்போர் 50, மொழிஞாயிறு பாவாணர் 114 ஆகிய முவ்விணை விழாவின் பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படங்கள். தலைமை: முனைவர் வே.நெடுஞ்செழியன் முன்னிலை: பேரா.இரா.சங்கர் வரவேற்புரை: மா.க.சிவக்குமார் நன்றியுரை: கி.பூவேந்தரசு சிறப்புரை: இலக்குவனார் திருவள்ளுவன் [படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க!] [embpicasa id=”6261466021645726337″]
அரசு மின் சேவை மையம் மூலம் பாடநூல்கள்!
அரசு மின் சேவை மையம் மூலம் பாடநூல்கள் பெறும் வசதி அறிமுகம்! முதல் வகுப்பு முதல் மேனிலை இறுதி வகுப்பு (+2) வரையிலான பாடநூல்களுக்கு மாணவர்கள் அரசு மின் சேவை மையத்தில் பணம் செலுத்திப் பதிவு செய்தால், வீட்டுக்கே அவை அனுப்பி வைக்கப்படும் எனத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “மாணவர்களுக்குத் தேவையான, முதல் வகுப்பு முதல் மேனிலை இறுதி வகுப்பு வரையிலான பாடநூல்களை இணையவழி…
