தொல்காப்பிய விளக்கம் – 9 (எழுத்ததிகாரம்)

தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நன்னூலாசிரியர், நெட்டெழுத்தே வேண்டியளவு நீண்டி ஒலிக்கும் என்றும் அதன் அடையாளமாக நெட்டெழுத்தின் பின்னர் அதன் இனக்குற்றெழுத்துத் தோன்றி நிற்கும் என்றும் கூறியுள்ளார். இக்கருத்து, தொல்காப்பியத்திற்கு மாறுபட்டது.   தொல்காப்பியர் முன்பு, மூன்று மாத்திரையாக ஒலித்தல் ஓரெழுத்துக்குக் கிடையாது என்றும் (நூற்பா 5) மாத்திரையை நீ்ட்டிச் சொல்ல வேண்டிய இடங்களில் மாத்திரைக்கேற்ப எழுத்துகளைச் சேர்த்து ஒலித்தல் வேண்டும் என்றும் (நூற்பா 6) கூறியுள்ளமை நோக்கத்தக்கது.   42.   ஐ, ஔ, என்னும் ஆயீரெழுத்திற்கு…

கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு வங்கிக்கணக்கேடும் ஆவணமாகும்.

தென்மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலகம், கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான ஆவணங்களுள் ஒன்றாகப் பொதுத்துறை வங்கிகளின் கணக்கேடு-வங்கிக்கணக்கு விவரங்களை ஏற்று அறிவித்துள்ளது.இதனை அறிவித்துள்ள சென்னை மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலர் செந்தில் பாண்டியன் பின்வரும் வங்கிகள் அவ்வாறு ஏற்பதற்குரியன என அறிவித்துள்ளார்:   அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி,பரோடா வங்கி,இந்தியா வங்கி, மகாராட்டிரா வங்கி, கனரா வங்கி, இந்தியா மைய வங்கி, கூட்டாண்மை வங்கி(கார்ப்பரேசன் வங்கி) , தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் கடலோடி வங்கி (ஓவர்சீசு வங்கி), கீழ்த்திசை வணிக வங்கி(ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சு), பஞ்சாப்பு…

தானியங்கிப் பொறியில் பணம் எடுக்க எண்ணிக்கைக் கட்டுப்பாடு வருகிறதாம்!

     வங்கிக்குச் செல்லாமல் எந்நேரமும் பணம் எடுக்கும் வாய்ப்பினை எல்லா நேரத் தானியங்கி மையங்கள் அளித்து வருகின்றன. தான் கணக்கு வைத்துள்ள வங்கிகியின் தானியங்கிப் பொறியில் மட்டுமல்லாமல் பிற வங்கிகளின் தானிப்பொறிகளிலும் பணம் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்துப் பிற தானிப் பொறிகளில் மாதத்திற்கு 5 தடவைக்குமேல் எடுத்தால்  கட்டணம் என அறிமுகப்படுத்தினர். இப்பொழுது் கணக்கு வங்கி, பிற வங்கி  என்ற வேறுபாடின்றி ஒருவர் மொத்தமாக மாதம் ஐந்து தடவைக்குமேல் தானிப் பொறியைப் பயன்படுத்தினால் கட்டணம் பெற இந்திய வங்கிகள் சங்கம்,  சேம(ரிசர்வு) வங்கிக்குப் பரிந்துரைத்துள்ளது….

பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு மறைந்தார்!

     தன்மானத்தை உணர்த்திய தந்தை பெரியாரின் களப்பணிகளில் தளபதிகளாகச் சிலர் விளங்கியுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர்களுள் ஒருவர் திருவாரூர் தங்கராசு. முத்தமிழ் வாயிலாகக் குறிப்பாக மேடைப்பொழிவிலும் நூலுரையிலும் திரைஉரையாடலிலும்  மூடநம்பிக்கைக்கு எதிராகவும் தன்மானத்திற்கும் தன்மதிப்பிற்கும் சார்பாகவும் பெரியாரின் கருத்துகள் குண்டுகளாக வீசப்பட்டன! பெரியாரியத்தின் கேடயங்களாக விளங்கின! ஒழுக்கக்கேடுகளுக்கு எதிராகவும் மறுமணத்திற்குச் சார்பாகவும் அவர் எழுதிய ‘இரத்தக்கண்ணீர்’  திரைப்படம் இன்றளவும் பேசும் காவியமாக விளங்குகிறது! நடிகவேள் எம்.ஆர்.இராதாவிற்குத் தனி முத்திரை பதித்த இத்திரைப்படத்தின் கதை உரையாடல் திருவாரூர் தங்கராசு அவர்கள்தாம்! பின்னரும் சில திரைப்படங்களுக்குக் கதை…

தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக்கொண்டாட வேண்டும்

தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து  10.01.14 அன்று அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 23-1-2008- இல் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், தை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை காங்கிரசு சார்பில் இ.எசு.எசு.இராமன், பாமக சார்பில் கி. ஆறுமுகம், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் என். நன்மாறன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக சார்பில் மு….

100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன்

‘’அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாறாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற மாக்கவி பாரதியின் வரிகளை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் சிங்கப்பூரில் உள்ள தமிழாசிரியர் ஒருவர் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்… நம்புங்கள் அவர் ஏழை மாணவர்களுக்காக 100  புதுக்காணி நிலத்தில் இலவச பள்ளிக் கூடமும் கட்ட இருக்கிறார். அவர்  ஓர் ஏழையை மட்டுமல்ல கிட்டத்தட்ட 500 ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மிகவும் வறிய நிலையில் இருந்த பத்து ஏழை…

பிரணாப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் மீதான கொடுந்தாக்குதலை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம்!

2009-2009இல், தமிழீழத்தில் இனப்படுகொலைப் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி, அப்போரை சிங்களத்துடன் இணைந்து வழி நடத்தியப் போர்க்குற்றவாளி பிரணாப்பு.  இன்று இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ள அவர், திசம்பர் 20 அன்று, சென்னை இலயோலாக் கல்லூரியில் நடைபெறும் ஒரு விழாவிற்கு வந்தார். அப்பொழுது அவருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்றதாகத், தமிழின உணர்வாளர்கள் மீதும், மாணாக்கர்கள் மீதும் தமிழகக் காவல்துறை கொடுந்தாக்குதலை நடத்தியது. திசம்பர் 19 ஆம் நாள், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், இன உணர்வாளருமான திரு….

திருக்குறளும் புதிய பார்வைகளும் – பேரா.மறைமலை பொழிவு

      7/1/14 செவ்வாய் மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தில் “திருக்குறளும் புதிய பார்வைகளும்” என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் பொழிவு நிகழ்ந்தது. துறைமுகப்பொறுப்புக் கழக மேனாள் அலுவலர் புலவர் வீரமணி தலைமை தாங்கினார். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த முனைவர்.பிரான்சிசு சவரிமுத்து சிறப்பு விருந்தினராகப் பாராட்டப்பட்டார். வரவேற்புரை  பட்டிமன்றச் செயலர் பொறி. பக்தவத்சலம்               தலைமையுரை புலவர் வீரமணி

டி.இராசேந்தர் திமுகவில் இணைந்தார்

 குரு அழைத்ததால் இணைந்தேன் என்று  அறிவி்ப்பு இலட்சிய திமுக தலைவர்  விசய டி.இராசேந்தர் 27.12013 மாலை 6 மணி அளவில் தன் மனைவி உசாவுடன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார்; கருணாநிதியைச் சந்தித்து  ஏறத்தாழ 1 மணிநேரம்பேசினார். பின்னர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் உடல்நலம்  உசாவிவிட்டு இரவு 7 மணி அளவில் கருணாநிதி இல்லத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது விசய டி.இராசேந்தர் கண்ணீர் மல்கச் செய்தியாளர்களிடம், ஆர்க்காடு விராசாமி  தலைவர் பார்க்கவேண்டுமென்று கூறி இங்கு அழைத்து…

தமிழ் வழிபாட்டுப் போர் ஆதரவுப் பயணத்தில் கரூர் இராசேந்திரன்

  அண்மைக் காலங்களில், தமிழில் குடமுழுக்கு நடத்திய முன்னோடியும் தமிழ் வழிபாட்டு மொழியாக மீளவும் ஆட்சிசெய்ய தொண்டாற்றி வருபவருமான வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் தில்லை நடராசர் கோயிலில் தமிழ் வழிபாட்டுப் போருக்கு ஆதரவளிக்க, தன் குடும்ப உறுப்பினர்களான மனைவி மணிமொழி, மகன் அன்புத்தேன், மகள் அமுதசத்யா, மருமகள் அன்பரசி ஆகியோருடன் சிதம்பரம் சென்றார். மேலும் பயணத்தின் ஒரு  பகுதியாக, இயேசுகிறித்துவின் கொள்கைப் பரப்புரைப்பணியாற்ற தமிழகம் வந்து, கொஞ்சம் இறைப்பணியும்,  மிகுதியும் தமிழ்ப் பணியும் ஆற்றிய  அறிஞர் சீகன் பால்கு (ஐயர்) தங்கியிருந்த தரங்கம்பாடிக்கும் சென்று…

தமிழ் பிரபாகரன் விடுதலை! நேற்றிரவு சென்னை வந்தார்.

    இலங்கையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன், வடக்கு மாகாண  அவை உறுப்பினர் பசுபதி (பிள்ளை) ஆகியோருடன் உடன் பயணம் மேற்கொண்ட பொழுது தளையிடப்பட்ட மகா.தமிழ் பிரபாகரன் நேற்று 28.12.12 சனி யன்று விடுதலை செய்யப் பெற்றார். இரவே சென்னை வந்துசேர்ந்தார். கிளிநொச்சிப் பகுதியில் இருந்த அவர், எங்ஙனம் யாழ்ப்பானம் பகுதியில் ஒளிப்படம் எடுத்திருக்க முடியும் என்ற உண்மையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப் பட்டுள்ளார். வரும் 30.12.13 திங்கள் மாலை செய்தியாளர் கூட்டத்தில் முழு விவரம் குறித்துத் தெரிவிப்பதாக தமிழ்ப்பிரபாகரன் அகரமுதல்…