விழிகளை மூடிக்

குழிகளில் உறங்கும்

வீரக் குழந்தைகளே! – நாங்கள்

விடுதலை வென்றிடக்

குழிகளை விட்டு

வெளியினில் வாருங்கள்! – நீங்கள்

வெளியினில் வாருங்கள்!

(விழிகளை மூடிக்…)

உயிரினைக் கொடுத்து உறவினைக் காத்த

உங்களை மறப்போமா?

உறங்கியே வாழும் உங்களை மறந்த

மனிதராய் இருப்போமா?

(விழிகளை மூடிக்…)

மானம் அழிவின்றி வாழவே உயிரைத்

தானம் செய்தீரே! – இந்த

வானமே போற்றும்

வையகம் வாழ்த்தும்

என்று நீ வாழ்வீரே!

(விழிகளை மூடிக்…)

நள்ளிரா வேளையில் கல்லறை தேடியே

நாம் உமை வணங்குகின்றோம்! – அங்கு

நெய்விளக்(கு) ஏற்றியே தமிழர் நம் வாழ்வினில்

போற்றியே தொழுகின்றோம்!

 

நிலவன், வாகைத்தொலைக்காட்சி