கலைச்சொல் தெளிவோம்! 127: ஞமன்-pointer

 பாயிண்ட்டர்/pointer என்பதற்குச் சுட்டுமுள், சுட்டிக்காட்டி, குறிமுள், காட்டி, சுட்டி, எனப் பலவாறாக ஆட்சியியல், வேதியியல், பொறிநுட்பவியல், மனையியல், தகவல் நுட்பவியல், கணக்கியல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.  தெரிகோன் ஞமன்போல (புறநானூறு 6. 9) எனத் துலாக் கோலின் முள்முனை கூறப்பட்டுள்ளது. மேலே குறித்தவற்றைவிடச் சங்கச்சொல் சிறப்பாகவே உள்ளது.   ஞமன்-pointer – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 126 : கொழு-awl

நாஞ்சில்ஆடிய கொழுவழிமருங்கின் (பதிற்றுப்பத்து 58.17) என வருவது போன்று கொழு(65) என்னும் சொல் கொழுப்பு, செழிப்பு, கலப்பையில் பதிக்கும் இரும்புஆணி, துளையிடும் பெரியஊசி முதலான பொருள்களில் கையாளப்பட்டுள்ளது. துளையிடும் பெரிய ஊசி என்னும் பொருளில், கொழுச்சென்ற வழித் துன்னூசி யினிது செல்லுமாறுபோல (தொல். பாயி. உரை). எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்பொழுது ஆ(வ்)ல்/ awl-தமரூசி (தொல்.,பொறி.,கல்.) என்றும் கூரூசி(தொல்.) என்றும் சொல்லப்படுகின்றது. சங்கச் சொல்லாகிய கொழு என்பதே பொருத்தமான சொல்லாக அமைகின்றது.  கொழு-awl – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 125 : இவரி/இவருநர்-jockey

சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் (நற்றிணை 67.1) குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல், உந்தி (மதுரைக்காஞ்சி 245) என்னும் இடங்களில் செல்லுதல், செலுத்துதல் என்னும் பொருள்களில் இவர்தல் கையாளப்பட்டுள்ளது. குதிரையேறிச் செலுத்துபவரை இவருநர் எனலாம். பொறியியல், இயற்பியல் முதலான அறிவியல் துறைகளில் இவரி எனச் சொல்லலாம். இவரி/இவருநர்-jockey – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் : Haptephobia, Aphephobia & Chiraptophobia

கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் தீண்ட(3), தீண்டல்(1), தீண்டலின்(4), தீண்டவர்(1), தீண்டற்கு(1), தீண்டா(1), தீண்டாது(1), தீண்டி(21), தீண்டிய(3), தீண்டு(1)தீண்டு்ம் (1), தொடு(10), தொடுதல்(2), எனப் பல சொற்கள் தொடுதலைக்குறிக்கும் வகையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பிறரால் தொடப்படுவது குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் தீண்டுகை வெருளி-Haptophobia/Haphephobia/ Haptephobia அல்லது தொடுகை வெருளி–Aphephobia/ Aphenphosmphobia அல்லது தீண்டல் வெருளி-Chiraptophobia எனப்பெறும். [தீண்டு > தீண்டுகை+ வெருளி; தொடு> தொடுகை+ வெருளி] – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 105. கீறல் வெருளி 106. குருதி வெருளி107. கூட்ட வெருளி 108. கோழி வெருளி

கலைச்சொல்  105.கீறல் வெருளி-Amychophobia பொதியில் முனிவன் புரை வரைக் கீறி (பரிபாடல் : 11.11) என வருகிறது. கீறு>கீறல்+வெருளி கீறல் வெருளி-Amychophobia கலைச்சொல்  106. குருதி வெருளி-Hemophobia/Hematophobia குருதி என்னும் சொல்லை 66 இடங்களிலும், குருதித்து(1), குருதிய(1) ஆகியசொற்களையும் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். குருதியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய குருதி வெருளி-Hemophobia/Hematophobia   கலைச்சொல்  107. கூட்ட வெருளி-Ochlophobia/Demophobia/Enochlophobia ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து (பதிற்றுப்பத்து : 72.12) மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய (பதிற்றுப்பத்து : 88.24)…

கலைச்சொல் தெளிவோம்! 109. சல வெருளி;110. சாவு வெருளி;111. சிவப்பு வெருளி;112. சூன்று வெருளி

கலைச்சொல் 109. சல வெருளி-Hydrophobia  தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார் (பரிபாடல் : 90) சல சல என்று ஓடிச் செல்வதால் நீருக்குச் சலம் எனப் பெயர் வந்ததென்பர் அறிஞர்கள். சலத்தைக்கண்டு ஏற்படும் இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் சல வெருளி-Hydrophobia [சல வெருளி என்பது நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்குத் தண்ணீரைக் கண்டால் ஏற்படும் பேரச்சம். இதனைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சல பய ரோகம் என்று குறிக்கிறது.] கலைச்சொல்  110. சாவு வெருளி -Necro Phobia/Thanato Phobia/ Thantophobia…

கலைச்சொல் தெளிவோம்! 101. கருதுபு வெருளி 102. கழுது வெருளி 103. காற்று வெருளி104. பறத்தல் வெருளி

  101. கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia  கருதி (2), கருதிய (1), கருதியது (1), கருதியாய் (1), கருதின் (1), கருதுபு(1), கருதும் (2), கருதுவிர்(1) என்னும் சொற்களைச் சங்கப் பாடல்களில் பயன்படுத்தி உள்ளனர். எண்ணிக் கருதுவதால் வருவதுதானே கருத்து. சிலருக்குக் கருத்தைக் கேட்டாலேயே தேவையற்ற பேரச்சம் ஏற்படும். கருத்துகள், அறிவாராய்ச்சித் திறன் ஆகியவற்றால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் கருதுபு வெருளி/கருத்து வெருளி-Allodoxaphobia/ Ideophobia 102. கழுது வெருளி-Demonophobia/Daemonophobia   கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக்காஞ்சி 633) கழுது புகவயர…

கலைச்சொல் தெளிவோம்! 99& 100. ஒளி வெருளி-Photo Phobia; ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia

99& 100. ஒளி வெருளி-Photo Phobia ஒளிர்வு வெருளி-Photoaugliaphobia   ஒள் (118), ஒள்வானமலை(1), ஒளி(76), ஒளிக்கும் (6), ஒளித்த (6), ஒளித்தன்று (1), ஒளித்தாள் (1), ஒளித்தி (1), ஒளித்து (9), ஒளித்தென (1), ஒளித்தேன் (1), ஒளித்தோள் (2), ஒளிப்ப (3), ஒளிப்பன (1), ஒளிப்பார் (1), ஒளிப்பான் (1), ஒளிப்பின் (1), ஒளிப்பு (1), ஒளிப்பேன் (1), ஒளியர் (1), ஒளியவை (1), ஒளியோர் (1), ஒளிர் (13), ஒளிர்வரும் (3), ஒளிரும் (1), ஒளிவிட்ட (2), ஒளிறு (41),…

கலைச்சொல் தெளிவோம்! 98. இரைச்சல் வெருளி-Acousticophobia

 98. இரைச்சல் வெருளி-Acousticophobia   பரிபாடல் திரட்டு இரண்டாம் பாடலில் ஆரவார ஒலி இரை எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இரை என்னும் சொல்லடிப்படையில் பிறந்த சொல்லே இரைச்சல். இரைச்சலைக் கேட்கும் பொழுது ஏற்படும் பேரச்சம் இரைச்சல் வெருளி. இரைச்சல் வெருளி-Acousticophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 97. ஒலி வெருளி-Phonophobia

 97. ஒலி வெருளி-Phonophobia ஒலி (115), ஒலிக்குங்கால் (1), ஒலிக்குந்து 92), ஒலிக்கும் (19), ஒலித்த (1), ஒலித்தல் (1), ஒலித்தன்று (1), ஒலித்து (9), ஒலிந்த (2), ஒலிப்ப (29), ஒலிப்பர் (1), ஒலிபு (1), ஒலிய (1), ஒலியல் (5), ஒலிவரும் (9) என ஒலிபற்றிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. சான்றுக்குச் சில: ஓங்கு திரை ஒலி வெரீஇ, (பொருநர் ஆற்றுப்படை : 206) ஒலி முந்நீர் வரம்பு ஆக (மதுரைக் காஞ்சி : 2) கல்லென்று இரட்ட, புள்ளினம்…

கலைச்சொல் தெளிவோம்! 96. எண் வெருளி-Arithmophobia

கலைச்சொல் தெளிவோம்! 96. எண் வெருளி   எண்(19), எண்கை(1), எண்பதம்(1), எண்பேரெச்சம் (2), எண்மர்(2) என எண்ணிக்கை தொடர்பான சொற்களைச் சங்கப்பாடல்களில் காணலாம். எண் என்பது எண்ணிக்கை பொருளுடன், எட்டு என்ற எண்ணிக்கை, எளிமை ஆகிய பொருள்களையும் தரும் வகையில் சொற்கள் உள்ளன. எண்களைப் பற்றியும் சிலர் அஞ்சுவர். இவ்வாறு எண் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம், எண் வெருளி-Arithmophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 95. உருமு வெருளி -Brontophobia

 95. உருமு வெருளி-Brontophobia உருமு பற்றிய சங்கஇலக்கிய அடிகள் வருமாறு: உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் (நற்றிணை : : 104:10) உருமுப் படு கனலின் இரு நிலத்து உறைக்கும் (ஐங்குறுநூறு :: 320:3) உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு, கொளை புணர்ந்து (பதிற்றுப்பத்து : : 30: 42) உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, ( கலித்தொகை : : 45: 3) உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் (அகநானூறு : :92:11) இடி…