தமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்

  கல்லூரிகளில் இன்று ஆங்கிலத்தின் வழியாகப் படித்துப் பட்டம் பெறும் முறையேயுள்ளது. அவரவர் மொழிவழியாகப் பயிலலே இயற்கையோடு ஒத்ததும் எளிதும் ஆகும். உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் நிலை இருந்தது; அதனை மாற்றித் தமிழின் வழியாகப் படிக்குமாறு செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவ்வாறு கல்லூரிகளிலும் தமிழ் வழியாகவே படித்துப் பட்டம் பெறும் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழ்வழியாகப் படித்துவிட்டு கல்லூரிக்கு வந்தவுடன் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் முறையால் மாணவர்கள் இடர்ப்பாடு அடைகின்றனர்.   மாணவர்கள்…

புகுமுக வகுப்பில் புகுத்துக தமிழை – பேராசிரியர் சி.இலக்குவனார்

  புகுமுக வகுப்புகளில் (Pre-University) ஆங்கிலத்தில் கற்பிக்குங்கால் – தமிழினும் –  பேச்சுத் தமிழினும் – கற்பிக்கலாம் எனப் பல்கலைக்கழகத்திலிருந்து கல்லூரிகட்கு அறிவுரைக் குறிப்பு வந்துள்ளது. உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழிற் பயிலும் மாணவர்கள் கல்லூரிகட்குள் நுழைந்ததும் அயல்மொழியாம் ஆங்கிலத்தில் கற்பிப்பதை அறிந்த கொள்ள முடியாமல் இடர்ப்படுகின்றனர் என்பது நாடு அறிந்த ஒன்றாகும். தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போதே கல்லூரிப்பாடமொழியும் தமிழ்தான் என்று சட்டம் செய்திருக்க வேண்டும்.   பி.ஏ. வகுப்புகளில் விரும்புவோர் கலைப்பாடங்களை(arts) தமிழிற்  படிக்கலாம் என்று கூறிவிட்டுத் …

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்க்கல்வி குறித்த இதழுரைகள்

பயிற்சிமொழிக் காவலர் பேராசிரியர் சி.இலக்குவனாரும் தமிழ்க்கல்வி குறித்த அவரின் சில இதழுரைகளும்     தமிழ்ப் பாடக்கல்வி, தமிழ்வழிக் கல்வி, தமிழ்மொழிக் கல்வி குறித்து ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னர்ப் பேராசிரியர் எழுதிய இதழுரைகளில் சில இவ்விதழில் தரப்படுகின்றன. அன்றைக்குப் பள்ளிநிலையில் தமிழ்வழிக்கல்வி இரு்நதமையால் கல்லூரிகளில் தமிழ்க்கல்விக்காக அவர் போராடினார். அவரே, பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி வர இருப்பது குறித்து விழிப்புரையும் வழங்கினார்.  அவர் அஞ்சியவாறு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வி பெருகிவிட்டது. இன்றைக்கு மேலும் இழிநிலையாக இருக்கின்ற தமிழ்வழிக்கல்விக்கு மூழுவிழா நடத்தப்பட்டு வருகின்றது. இச்சூழலில் அவரது இதழுரைகளைப்…

திருக்குறளும் பொது நோக்கமும் 2 – ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்

  (வைகாசி 25, 2045 / 08 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)   ஒழுக்கமுடையோர் விழுப்பமடைவர் என்பதனைத் தம் வாழ்க்கையிலேயே நடத்திக்காட்டி, ‘கூடா வொழுக்க’த்திற் கண்டிக்கப்பட்ட போலித் துறவொழுக்கம் உலகத்தாரை ஏமாற்றுவதற்கே உரியது என்பதனையும் உலகத்துக்குப் போதித்து ‘மனத்துக்கண் மாசிலராகிக்’ குணமென்னும் குன்று ஏறி நின்ற திருவள்ளுவர், அனைவரும் ஏற்றுக் கொண்டு கையாளுதற்குரிய ஒழுக்கமுறை வகுத்தது ஒருவியப்பன்று, தம் வாழ்க்கைப் பட்டறிவையே யாம் பெற்ற பேறு பெறுக இவ்வகையம் என்று சுரந்தெழும் அருள் மிகுதியினால், திருவள்ளுவர் அனைவரும் உய்யுமாறு ஒப்பற்ற ஒழுக்க முறையாக…

பூங்கோதை 5 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,

(வைகாசி 25, 2045 / 08 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ‘‘கண்ணம்மா அவள் கைகளை நன்றாகப் பிடித்துக் கொள். அவள் உண்மையிலேயே ஒரு காட்டுப்பூனையாக மாறிவிட்டாள்.’’ ‘‘வெட்கமில்லை’ ஒரு ஆண்பிள்ளையோடு சரியாக மல்லுக்கு நிற்கிறாயா? அதுவும் எனக்குக் கஞ்சி ஊற்றி வளர்க்கிற அந்தப் புண்ணியவதியின் மகனை அவர் தானே இந்த வீட்டுக்கே தலைவர்’’ என்று கூறினாள் கண்ணம்மா. ‘‘தலைவர்! அவர் இந்த வீட்டுக்குத் தலைவராக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. நான் என்ன ஒரு பணிப்பெண்ணா?’’ ‘‘இல்லை; அதை விட ஒரு படி…

புத்தர் தென்தமிழ் தெரிந்தவரே!

கௌதமபுத்தரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கதை கோப்புடன் கூறும் இலலிதாவித்தாரம் என்னும் வடமொழி வரலாற்று நூலொன்றினுள் கௌதமபுத்தர் தம் இளமையில் கற்றறிந்த மொழிகளுள் திராவிடம் அல்லது தமிழ் எனப்படும் மொழியும் ஒன்றெனக் குறிக்கப்படுகிறது. இந்நூல் சீனமொழியுள் கி.பி. முதல் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதென்றும் ஆசிரியர் ஐசக்தம்பையா தாம் எழுதியுள்ள சிவனடியாரின் அருட்பாக்கள் என்னும் ஆங்கில நூலில் குறிக்கின்றார். –          குறள்நெறி: ஆனி 32, 1995  / 15.07.64

திருக்குறளும் பொது நோக்கமும் 1

– ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்   சமரசமும், கடவுள் திருமுன் அனைவரும் சமமே என்னும் பொது நோக்கமும் நம் நாட்டில் பேசப்பட்டு நகரங்களில் மட்டுமன்றி சிற்றூர்களிலும் காட்டுத் தீயே போல் பரவி மக்களிடையே உணர்ச்சியையும் பரபரப்பையும் உண்டு பண்ணிவரும் இக்காலத்தில் ‘பொதுமறை’யாகிய திருக்குறளில், இந்நோக்கம் அமைந்திருக்கும் விதத்தை நூல் முழுவதும் பொதுவாக நோக்கிக் கண்டறிவது சாலவும் பொருத்தமுடையதேயாம்.   இருவகைச் சுவைகள் ஏற்ற அளவிற் கலந்து ஒத்து இயங்குங்கால் ஒருவித புதுச்சுவை தோன்றிச் சுவைப்போர்க்கு மிகுந்த இன்பத்தைக் கொடுக்கும். அதேபோன்று ஒரு…

பாரதப் பண்பாடு எது? – வை.தட்சிணாமூர்த்தி

  சென்ற ஆண்டிலிருந்து இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு என்று ஏதம் வந்துவிடுமோ என்ற ஐயப்பாடு பெரிய இடங்களில் மிகுந்து விட்டது. பிரிவினைத் தடைச் சட்டம் மற்றும் சில வரையறைகள் அதன் விளைவே, பூவியல் அமைப்பை ஒட்டி இந்தியா ஒரு நாடுதானா இல்லையா என்ற ஆராய்ச்சியில் நெடுநாட்களுக்கு முன்பே மேலைநாட்டு பூவியல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். சர். சான் சிடார்ச்சி என்னும் ஆங்கிலேயப் பூவியல் ஆராய்ச்சியாளர் போன்றோர் ‘‘இந்தியா பல நாடுகளின் கூட்டேயன்றி ஒரே நாடு அன்று’’ என்பர் வின்சன்ட் சிமித்சிசோம் போன்றோர் இந்தியா…

தமிழ்மொழி – தமிழ் நூல்கள் தனிச்சிறப்பும் திருக்குறள் அறப்பெரும் சிறப்பும்

  – தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ –  திருப்புகழ் இசைப்பா 1. உலக முதல்மொழி! நமது தமிழ்மொழி! உரிமை தரு மொழி! உயர்வு பெறு மொழி! மலரும் அறிவெழில்! பொழியும் நறுமொழி – மலைபோல 2. மணிகள் ஒளிதிகழ் அரிய அறமொழி! மகிழப் பலகலை உணர்வுதரு மொழி! மருவும் உயிரெலாம் பயிலவரும் மொழி! – வளம்நாடும் 3. பலநல் லறிவுளோர் பரவும் பெருமொழி! பயனுணரும் கலை அறிஞர் புகழ்மொழி! பரிவோ டருள்புரி பழமை(த்) தமிழ்மொழி! – பயில்வோர்கள் 4. பழைய குறை –…

பிளவுபட்ட கூரை – புலவர் இரா.இளங்குமரன்

‘அ…….ன்’ ‘‘மேலே காட்டிய குறியின் பொருள் யாது?   தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவரங்களும் தமிழ் மொழியில் நடக்க வேண்டும் என்பது பொருள். தொடக்க விளம்பரம் தமிழில்  வெளியிடப்பட வேண்டும். பாடசாலைகள் தொடங்கினால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவது மன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். ‘சிலேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது.’’   ‘’கும்பகோணம் தமிழாசிரியர் ஒருவர்; அவர் இலக்கணமாகவே பேசுவார்; பிறர்க்கு எளிதில்…

திருக்குறள் வட சொற் கலவாத தூய தமிழ் நூலாகும்

செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்   ஒரு மொழியாளர் இன்னொரு மொழியாளருடன் கூட்டுறவு கொள்ளுங்கால் இருசாரார் மொழிகளின் சொற்களும் அயலவர் மொழிகளில் கலப்புறுதல் இயற்கை. அக்கலப்பின் மிகுதியும் குறைவும் அந்தந்த மொழியின் வளத்திற்கு ஏற்ப அமையும், சொல்வளம் குறைந்த மொழி, சொல்வளம் நிறைந்த மொழியிடம் கடன் பெறும்.   இமயம் முதல் குமரி வரை வழங்கி வந்த தமிழோடு முதன்முதல் கூட்டுறவு கொண்டது ஆரியமே. ஆரியத்தின் கலப்பாலேயே தமிழ்மொழி பல்வேறு மொழிகளாகப் பிரிவுபட்டது. பரத கண்டத்தின் வடபகுதி (விந்தியத்திற்கு வடக்கு)யில் ஆரிய மொழிக் கலப்பு…

பூங்கோதை 4 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,

(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)   காளையப்பனுக்குத் தன் தாயினிடத்திலோ, தங்கைமாரித்திலோ மிகுதியான பற்று இருந்ததென்று கூறமுடியாது; ஆனால் பூங்கோதையினிடத்து அவனுக்கு அருவருப்பு மிகுதி என்பது மட்டும் உறுதி. தொடர்ந்து அவளுக்குத் துன்பங் கொடுத்துக் கொண்டே இருப்பான். அவனுடைய குரலைக் கேட்ட அளவிலேயே பூங்கோதையின் நாடி நரம்புகளெல்லாம் ஒடுங்கிவிடும். அவனுடைய கொடுமைகளை யாரிடத்திலே சென்று முறையிடுவது? அவன் பூங்கோதையை அடித்தாலும் மிதித்தாலும், உதைத்தாலும் அவனுடைய தாயாருக்குக் கண் தெரியாது; அவன் அவளை எவ்வளவு இழிவாகத் திட்டினாலும் அவளுக்குக்…