பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 8
(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 7 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி ஏதுமறியாத குமரி, செட்டியார் ஏதோ கவலையாக இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு வருந்தினாள். “என்னாங்க உடப்புக்கு? ஒரு மாதிரியா இருக்கறிங்க.” “ஏன்! அதெல்லாம் ஒண்ணுமில்லையே! “ரொம்பக் களைச்சாப்போல இருக்கறிங்க” “எனக்கென்ன களைப்பு ! நான் என்ன, உன் போல வெயிலிலே வேலை செய்கிறேனா?” “உங்களுக்கு ஏனுங்க, தலை எழுத்தா என்ன, கூலி வேலை செய்ய? நீங்க மகாராசா.” “உனக்கு மட்டும் தலை எழுத்தா, இவ்வளவு இளம்…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 289-294
(தமிழ்ச்சொல்லாக்கம்: 281-288 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 289-294 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 289 – 293. உடலசைவுகள் : 5 289. உத்தானிதம் — மல்லாத்தல் 290. திரியக்கு — குறுக்கு அல்லது ஒருகணித்தல் 291. ஆசிதகம் — உட்காத்தல் 292. (இசு)திதம் — நிற்றல் 293. ஆன்மிதம் — குனிதல் நூல் : கொக்தோகம் (1910) பக்கம் : 171 ★ 294. மகாவித்துவான் – பெரும்புலவர் மார்க்கண்டேய புராணம் வசனகாவியமும் அரும்பத விளக்கமும் இஃது சென்னை பிரசிடென்சி காலேசில் தமிழ்ப்புலமை…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 61
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 60 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 22 தொடர்ச்சி அப்பாவின் நினைவு, உள்ளத்தில் உண்டாக்கிய உரத்துடன் எதிரே உட்கார்ந்திருந்த மீனாட்சிசுந்தரத்தையும், முருகானந்தத்தையும் நோக்கி உறுதியான குரலில் கூறலானாள் பூரணி. “நீங்கள் மிக்க அனுபவசாலி, எவ்வளவோ பெரியவர். உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் சொல்லுகிற காரியத்துக்கு எப்படி இணங்குவதென்று தான் தயக்கமாக இருக்கிறது. இத்தகைய உலகியல் வழிகளில் சிக்கிப் பொருளும் புகழும் பெறுவதை என் தந்தையே தம் வாழ்நாளில் வெறுத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்போதே அப்படியானால் இப்போது உள்ள…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 2/2 பழந்தமிழ் நிலை என்னும் தலைப்பில் பழந்தமிழ்ச் சொற்களைப்பற்றி விளக்குவதுடன் தற்போது வழக்கு வீழ்ந்துள்ள பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அளித்து இவற்றை வழக்கில் கொணர்ந்து தமிழை வளப்படுத்த வேண்டும் என்கிறார். அடுத்த தலைப்பில் பழந்தமிழின் எழுத்துச் சான்றுகளை இந்தியக் கண்டத்தின் பிற மொழி இலக்கியக் காலங்களுடன் ஒப்பிட்டு விளக்கித் தமிழும் இந்திய அரசின் முதன்மைமொழியாக, அலுவல் மொழியாகத், தேசிய மொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்கிறார். பழந்தமிழ்ச் சொல்…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 281- 288
(தமிழ்ச்சொல்லாக்கம்: 274-280 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 281-288 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 281- 288. தழுவுதல் 281. லதாவேட்டிதாலிங்கம் — கொடிபோலக் சுற்றித் தழுவுதல் 282. விருட்சாதிரூடாலிங்கனம் — மரத்தைப் போலேறித் தழுவுதல் 283. திலதண்டுலாலிங்கனம் — எள்ளும் அரிசியும் போலக்கலந்து தழுவுதல் 284. சீர நீராலிங்கனம் — பாலும் நீரும் போல ஒன்றுபடத் தழுவுதல் 285. ஊருப்பிரகூடாலிங்கனம் — தொடையால் நெருக்கித் தழுவுதல் 286. சகனோபசிலேசாலிங்கனம் — குறிகள் சேரத் தழுவுதல் 287. (இசு)தனாலிங்கணம் — கொங்கையழுந்தத் தழுவுதல் 288. (இ)லாலாடிகாலிங்கணம்…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 274-280
(தமிழ்ச்சொல்லாக்கம் : 267 – 273 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 274-280 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 274-280. பண்கள் 274. சட்சம் — குரல் 275. ரிசபம் — துத்தம் 276. காந்தாரம் — கைக்கிளை 277. மத்திமம் — உழை 278. பஞ்சம் — இளி 279. தைவதம் — விளி 280. நிசாதம் — தாரம் நூல் : கொக்கோகம் (1910) பக்கம் -106 நூலாசிரியர் : அதிவீரராம பாண்டியன் உரையாசிரியர் : கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்
ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1
(ஊரும் பேரும் – முகவுரையும் நன்றியுரையும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 1. தமிழகமும் நிலமும் தமிழகம் பழம் பெருமை வாயந்த பாரதநாட்டின் தென்பால் விளங்குவது தமிழ்நாடு. சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரால் தமிழகம் தொன்றுதொட்டு ஆளப்பட்ட தென்பர். பொதுவுற தமிழகம் நோக்கும்பொழுது பழந் தமிழகத்தில் மேல்நாடு சேரனுக்கும், கீழ்நாடு சோழனுக்கும், தென்னாடு பாண்டியனுக்கும் உரியன வாயிருந்தன என்பது புலனாகும். இங்ஙனம் மூன்று கவடாய் முளைத்தெழுந்த தமிழகம் மூவேந்தரது ஆட்சியில் தழைத்தோங்கி வளர்ந்தது.*1 நால் வகைப்பட்ட நிலங்கள். தமிழகத்தில் அமைந்திருக்கக் கண்டனர் பண்டைத் தமிழர்.*2…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 267 – 273
(தமிழ்ச்சொல்லாக்கம் 256-266 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் : 267 – 273 (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 267. DEG – நீண்ட சதை மன்னன் வருகிறான் என்பது கேட்டுணர்ந்த இராசகுமாரத்தி தனக்கு நேரக்கூடிய அகெளரவம் ஒன்றையே பெரிதெனக்கருதித் தன் ஆசை மணாளனை, ஆங்கிருந்த (DEG) என்ற நீண்ட சமையல் பாத்திரத்தில் புகுந்து மறைத்தாள். இதழ் : இதழ் செந்தமிழ் (1910) தொகுதி – 8. பகுதி – 10 சாதாரண ௵ ஆவணி ௴ கட்டுரை : (இ)லெபன்னிசா கட்டுரையாசிரியர் : வீ. சுப்பிரமணிய…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 60
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 59 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 22 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடினேன் பசியினால் இளைத்தேன்வீடுதோ றிரந்து பசியறாது அயர்ந்தவெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்நீடிய பிணியால் வருந்துகின்றோரென்நேருறக் கண்டுளந் துடித்தேன்ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சுஇளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். — திருவருட்பா தந்தியில் தெரிவித்திருந்தபடி அரவிந்தன் கோடைக்கானலுக்கு வரமுடியாமல் சொந்தக் கிராமத்துக்குப் போக நேர்ந்த காரணத்தை முதலில் பூரணிக்கு விவரித்தார் மீனாட்சிசுந்தரம். அவன் வராதது அவளுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதை மிக நுணுக்கமாக அவர் புரிந்து கொண்டார். அந்த ஏமாற்றம் வெளியே தெரிந்து விடாமல்…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 256-266
(தமிழ்ச்சொல்லாக்கம் 245 – 255தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 256. விசித்திரம் – பேரழகு நூல் : அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி) நூலாசிரியர் : கவித்தலம் துரைசாமி மூப்பனார். ★ 257. பிரசண்ட மாருதம் : பெருங்காற்று (1909) இதழ் : செந்தமிழ், செளமிய ௵ மார்கழி, தொகுதி : 8 பகுதி : 2. பக்கம் – 71 கட்டுரையாளர் : வீராசாமி ஐயங்கார் ★ 258. சந்திபாதம் – முதலிற்பிடித்துப் பஞ்சாப் போடுதல் 259.அவதூதம் – புறங்கையாற் கீழே…
ஊரும் பேரும் – திரு.வி.க. அவர்களின் முகவுரையும் ஆசிரியர் இரா.பி.சேது நன்றியுரையும்
தமிழகம் ஊரும் பேரும் முகவுரை உலகை ஒழுங்கு முறையில் இனிது நடாத்தி வரும் அமைப்புகள் பலப்பல. அவற்றுள் உயிர்ப்பாய்த் திகழ்வது ஒன்று. அது நூல் என்பது. நூலின் உள்ளுறை யாது? அறிவு. ஆதலின், நூல் அமைப்பை அறிவுச் சுரங்கம் என்று கூறலாம். நூல்கள் பல திறம். பல திறத்துள் இரவியும் தனித்தும் நிற்பது வரலாறு. வரலாறு வான் போன்றது. வான் மற்றப் பூதங்களிற் கலந்தும், அவற்றைக் கடந்து தனித்தும் நிற்பதன்றோ? “ஊரும் பேரும்” என்னும் இந் நூல் வரலாற்றின்பாற்பட்டது. இவ் வரலாறு தமிழ் நாட்டின்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 59
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 58 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 21 தொடர்ச்சி சிற்றப்பா வாழ்வை நடத்திய விதத்தையும் பாதிப் புத்தகம் படித்து நிறுத்தினாற் போல் முடித்துக் கொண்ட விதத்தையும் நினைத்தால் அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. தந்தி வந்தபோது மீனாட்சிசுந்தரமும் முருகானந்தமும் அருகில் இருந்தனர். தந்திச் செய்தியை அவர்களும் படித்து அறிந்து கொண்டிருந்தனர். ‘ஏறக்குறைய இலட்ச ரூபாய் சொத்துக்காரர் இறந்து போயிருக்கிறார். அவ்வளவுக்கும் உரிமையாளனாகப் போகிற இவன் ஏன் இப்படி ஒரு பரபரப்பும் அடையாமல் மலைத்துப் போய் நின்று கொண்டிருக்கிறான்?’ என்று அரவிந்தனைப் பற்றி நினைத்தார்கள்…