திருக்குறள் அறுசொல் உரை – 073. அவை அஞ்சாமை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 072. அவை அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 073. அவை அஞ்சாமை கூட்டத்தார் திறன்களை ஆராய்ந்து சற்றும் அஞ்சாது பேசும்திறன் வகைஅறிந்து வல்அவை வாய்சோரார், சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். தூயநல் சொல்அறிஞர் சொல்வல்லார் கூட்டத்தில் வாய்தவறாது பேசுவார். கற்றாருள் கற்றார் எனப்படுவர், கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். கற்றார் மனம்பதியச் சொல்வாரே கற்றாருள் கற்றார் எனப்படுவார். பகைஅகத்துச் சாவார், எளியர்; அரியர்,…
திருக்குறள் அறுசொல் உரை – 072. அவை அறிதல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 071. குறிப்பு அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 072. அவை அறிதல் அறிஞர் கூட்டத்தின் இயல்புகள் ஆராய்ந்து ஒப்ப நடத்தல். அவைஅறிந்(து), ஆராய்ந்து சொல்லுக, சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். சொல்வள நல்அறிஞர், அவையின் இயல்பை ஆராய்ந்துதான் பேசுவர். இடைதெரிந்து, நன்(கு)உணர்ந்து, சொல்லுக, சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். தமக்கும், அவைக்கும், இடைநிற்கும் இடைவெளியை நன்குணர்ந்து சொல்க. அவைஅறியார், சொல்லல்மேற் கொள்பவர், சொல்லின் …
திருக்குறள் அறுசொல் உரை – 071. குறிப்பு அறிதல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 071. குறிப்பு அறிதல் பிறரது மனஉணர்வுகளைக் கண்கள், முகங்கள்வழி ஆராய்ந்து அறிதல். கூறாமைநோக்கிக் குறிப்(பு) அறிவான், எஞ்ஞான்றும், மாறாநீர் வையக்(கு) அணி. முகக்குறிப்பால் மனஉணர்வை அறிவார் உலகிற்கே நல்நகை ஆவார். ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத், தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல். மனத்தின் உள்கருத்தை ஐயம்அற, உணர்வார் தெய்வத்திற்குச் சமம். குறிப்பின் குறிப்(பு)உணர் வாரை, உறுப்பினுள், யாது…
திருக்குறள் அறுசொல் உரை – 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 069. தூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ஆட்சியரிடம் பழகும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள். அகலா(து), அணுகாது, தீக்காய்வார் போல்க, இகல்வேந்தர் சேர்ந்(து)ஒழுகு வார். மாறுபட்டு ஆள்வாரோடு விலகாமல், நெருங்காமல் ஆய்ந்து பழகு. மன்னர் விழைய விழையாமை, மன்னரால் மன்னிய ஆக்கம் தரும். ஆட்சியார் விரும்புவதை விரும்பாமை, நிலைக்கும் நன்மைகள் தரும். போற்றின், அரியவை போற்றல்; கடுத்தபின், தேற்றுதல்…
திருக்குறள் அறுசொல் உரை – 069. தூது : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 068. வினை செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 069. தூது தூதரது கல்விஅறிவு, தூதுஇயல் அறிவு, செயல்உறுதி, சொல்முறை. 681. பண்(பு)உடைமை, தூ(து)உரைப்பான் பண்பு. நாட்டுப்பற்றும், உயர்குடிப் பிறப்பும், பண்பும், தூதர் இலக்கணம். அன்(பு),அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, தூ(து)உரைப்பார்க்(கு) இன்றி யமையாத மூன்று. அன்பும், அறிவும், சொல்ஆய்வுத் திறனும், தூதர்க்கு மிகத்தேவை. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல், வேலாருள் வென்றி வினைஉரைப்பான்…
திருக்குறள் அறுசொல் உரை – 067. வினைத் திட்பம் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 066. வினைத் தூய்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 067. வினைத் திட்பம் செயல்வெற்றிக்கு மிகவும் தேவையான செயல்உறுதி மேலாண்மைத் திறன்இயல் வினைத்திட்பம் என்ப(து), ஒருவன் மனத்திட்பம்; மற்றய எல்லாம் பிற. செயல்உறுதி என்பது மனஉறுதி; மற்றவை, எல்லாம் வேறு. ஊ(று)ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ்இரண்டின் ஆ(று)என்பர் ஆய்ந்தவர் கோள். வரும்முன் காத்தலும், வந்தபின் தளராமையும் ஆய்வாளர் கொள்கை. கடைக்கொட்கச், செய்தக்க(து) ஆண்மை; இடைக்கொட்கின்,…
திருக்குறள் அறுசொல் உரை – 068. வினை செயல் வகை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 067. வினைத் திட்பம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 068. வினை செயல் வகை தூய செயலை, மனஉறுதியுடன் செய்தற்கு உரிய வழிமுறைகள் சூழ்ச்சி முடிவு துணி(வு)எய்தல்; அத்துணிவு, தாழ்ச்சியுள் தங்குதல் தீது. ஆழ்ந்தாய்ந்து எடுத்த நல்முடிவைக், காலம் தாழ்த்தாது, துணிந்துசெய். தூங்குக, தூங்கிச் செயல்பால; தூங்கற்க, தூங்காது செய்யும் வினை. செயல்களைப் பொறுத்துக் காலம் தாழ்த்தியும், தாழ்த்தாதும் செய்க. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்,…
திருக்குறள் அறுசொல் உரை – 066. வினைத்தூய்மை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 065. சொல்வன்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 066. வினைத் தூய்மை செயற்பாடுகளில் குற்றம் குறைகள் இல்லாமை; தூய்மை உள்ளமை. துணைநலம், ஆக்கம் தரூஉம்; வினைநலம், வேண்டிய எல்லாம் தரும். நலத்துணை முன்னேற்றத்திற்கு உதவும்; நலச்செயல் எல்லாமும் தரும். என்றும் ஒருவுதல் வேண்டும், புகழொடு நன்றி பயவா வினை. புகழோடு, நன்மை தராச்செயலை, எப்போதும் விலக்கல் வேண்டும். ஓஒதல் வேண்டும், ஒளிமாழ்கும் செய்வினை, ஆஅதும் என்னும் அவர். …
திருக்குறள் அறுசொல் உரை – 065. சொல்வன்மை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 064. அமைச்சு தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 065. சொல்வன்மை கேட்பார் உள்ளம் கொள்ளும்படி, சொற்களைச் சொல்லும் வல்லமை. நாநலம் என்னும் நலன்உடைமை, அந்நலம், யாநலத்(து) உள்ளதூஉம் அன்று. எல்லாத் திறன்களுள்ளும் மிகச்சிறந்த வெல்திறன் பேச்சுத் திறனே. ஆக்கமும், கேடும், அதனால் வருதலால், காத்(து)ஓம்பல் சொல்லின்கண் சோர்வு. வளர்ச்சியும், வீழ்ச்சியும், தரும்பேச்சைத், தவறு இல்லாது பேசுக. கேட்டார்ப் பிணிக்கும்…
திருக்குறள் அறுசொல் உரை – 064. அமைச்சு : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 064. அமைச்சு அமைச்சர்தம் தகுதிகள், பண்புகள், ஆளுமைத் திறன்கள். செயற்பாடுகள். கருவியும், காலமும், செய்கையும், செய்யும் அருவினையும், மாண்ட(து) அமைச்சு. செய்கருவி, காலம், செயல்கள், செய்முறைகளில் சிறந்தார், அமைச்சர். வன்கண், குடிகாத்தல், கற்(று)அறிதல், ஆள்வினையோ(டு) ஐந்துடன் மாண்ட(து) அமைச்சு. கல்வி, குடிஅறிவு, குடிகாத்தல், முயற்சி, உறுதி அமைச்சியல். பிரித்தலும், பேணிக்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 060. ஊக்கம் உடைமை
(அதிகாரம் 059. ஒற்று ஆடல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 060. ஊக்கம் உடைமை எவ்வகைச் சூழலையும் கலங்காது, எதிர்கொண்டு சமாளிக்கும் மனஉறுதி ‘உடையர்’ எனப்படுவ(து) ஊக்கம்; அஃ(து)இல்லார், உடைய(து) உடையரோ மற்று? ஊக்கம் உடையாரே, ‘உடையார்’; மற்றையார், உடையார் ஆகார். உள்ளம் உடைமை, உடைமை; பொருள்உடைமை, நில்லாது; நீங்கி விடும். ஊக்கமே, நிலைக்கும் பெரும்செல்வம்; பொருள்செல்வமோ நில்லாது; நீங்கும். ”ஆக்கம் இழந்தேம்” என்(று), அல்லாவார்,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 059. ஒற்று ஆடல்
(அதிகாரம் 058. கண்ணோட்டம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 059. ஒற்று ஆடல் உள்,வெளி நாடுகளில், எல்லா நடப்புக்களையும், உளவு பார்த்தல் ஒற்றும், உரைசான்ற நூலும், இவைஇரண்டும், தெற்(று)என்க, மன்னவன் கண். உளவும், உளவியல் நூல்தெளிவும் ஆட்சியரிடம் அமைதல் வேண்டும். எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும் வல்அறிதல், வேந்தன் தொழில். எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பவற்றை, ஆட்சியான் உளவால் ஆராய்க. ஒற்றினான் ஒற்றிப், பொருள்தெரியா மன்னவன் …