கவிஞர் முடியரசனின் பூங்கொடி 31 : முத்தக் கூத்தன் கல்லறை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 30 : தாமரைக்கண்ணி அறிவிப்பு-தொடர்ச்சி) பூங்கொடி முத்தக் கூத்தன் கல்லறை கலக்கந் தருசுடு காட்டில் நெஞ்சுரம்சேருவ தெங்ஙனம்: செப்புதி எனலும்,கூறுவென் கேண்மின் கூர்மதி யுடையீர்? 60மொழிக்குயிர் ஈந்தநல் முத்தக் கூத்தன்பளிக்கறைப் புதைகுழி பாங்குடன் மிளிரும்,அதனைக் காணின் அச்சம் தொலையும்,மதமுறு கொடியர் மனச்செருக் கொழிக்கநெஞ்சுரம் ஏறும், நிமிர்ந்து நடப்பீர்! 65வஞ்சனை மாக்கள் வண்டமிழ் மொழிக்குநஞ்சினை ஊட்ட நாட்டில் மறைந்துளார்;அவர்தம் கொடுஞ்செயல் அழித்திட வேண்டின்முத்தக் கூத்தன் கல்லறை முன்போய்நத்தித் தொழுதால் நரம்புரம் ஏறும், 70குருதியில் உணர்ச்சி கொதிக்கும், நும்மினப்பெருமையை அழிப்போர் பிறக்கிடச் செய்வீர்!நாடும்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 – 1020

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003-1009- தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 – 1020 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) ★

உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 68 : ஆறுமுக பூபாலர் – தொடர்ச்சி) என் சரித்திரம் – அத்தியாயம் 41 தொடர்ச்சிஒரு செய்யுள் செய் இவ்வளவு சாக்கிரதையாக ஏற்பாடு செய்து கொண்டு விழிக்கும்ஆறுமுகத்தா பிள்ளையிடம் காலையில் நான் போய், “என் புத்தகத்தைக்காணவில்லை” என்று சொல்லுவேனானால் அவருக்குக் கோபம் வருமென்பதைநான் அறிவேன். ஆகையால் அவரிடம் சொல்லலாமென்று என் ஆசிரியர் கூறிய பின்பும், நான் பேசாமல் வாடிய முகத்துடன் அங்கேயே நின்றேன். ‘ஒரு செய்யுள் செய்யட்டும்’ சிறிது நேரத்திற்குப் பின் ஆறுமுகத்தா பிள்ளை துயில் நீங்கி எழுந்துஅவ்வழியே சென்றார்….

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.2 – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.1 – புலவர் கா.கோவிந்தன் – தொடர்ச்சி) தமிழர் பண்பாடு(தொடக்க காலம் முதல் கி.பி. 600 வரை) 1.முன்னுரை – தொடர்ச்சி சென்னைப் பல்கலைக்கழகத்தின், இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறைகளின் பேராசிரியராகிய முதுபெரும் அறிஞர் திருவாளர் எசு.கிருட்டிணசாமி ஐயங்கார் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த பண்டைத்தமிழ் அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் பற்றிய செய்திகள் அவ்வளவையும் துருவித் துருவி ஆய்ந்து வெளிப்படுத்தித் தம்முடைய பல்வேறு நூல்களில் திறன் ஆய்வு செய்துள்ளார், ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் பண்டைக்காலத்து மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 30 : தாமரைக்கண்ணி அறிவிப்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 29 : கல்லறை காண் காதை – தொடர்ச்சி) பூங்கொடிதாமரைக்கண்ணி அறிவிப்பு கோமகன் ஆயிழை இவள்மேற் கொண்டகாமந் தணிந்து கழிந்தனன் அல்லன்,படிப்பதும் இதனுள் பழுதுகள் புரியின் 30அடுத்தவர் ஒறுப்பர் ஆதலின் புறத்தே வருமிடைக் காண்பான் வழியிடை ஒதுங்கிஇருத்தலுங் கூடும் இதுநீர் ஒர்ந்துதிருத்தகு நல்லீர்! தெருவழிச் செல்லேல்பொழிலின் பின்புறம் பொருந்திய ஒருசிறு 35வழியுள தவ்வழி மருங்கிற் செல்லின்சுடுகா டொன்று தோன்றும்; ஆண்டுக்கடுநவை உறாஅது; கலங்கேல், அந்செறிதாண்டிச் செல்கெனத் தாமரைக் கண்ணி வேண்டி நின்றனள், விளங்கிழை அல்லி 40 அல்லி அஞ்சுதல் பினஞ்சுடு…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003 – 1009

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003 – 1009 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

உ.வே.சா.வின் என் சரித்திரம் 68 : ஆறுமுக பூபாலர்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 67 : ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு – தொடர்ச்சி) என் சரித்திரம் :  அத்தியாயம்-41 ‘ஆறுமுக பூபாலர்’ ஆறுமுகத்தா பிள்ளையைப் பார்த்தாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கும். பிறருக்கு ஆக வேண்டியவற்றைக் கவனித்தாலும் என்ன காரணத்தாலோ எல்லோரிடத்தும் அவர் கடுகடுத்த முகத்தோடு பெரும்பாலும் இருப்பார்; நான் மிகவும் சாக்கிரதையாக நடந்து வந்தும் அவருக்கு என்னிடம் அன்பு உண்டாகவில்லை. பிள்ளையவர்களிடத்தில் அவர் மிக்க மரியாதையும் அன்பும் உடையவராக இருந்தார். அக்கவிஞர் பெருமான் என்னிடம் அதிகமான அன்பு காட்டுவதையும் அவர் அறிவார், அப்படி…

ஊரும் பேரும் 62 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – விண்ணகரம்

(ஊரும் பேரும் 61 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – தானமும் தருமமும் – தொடர்ச்சீ) ஊரும் பேரும் விண்ணகரம் தமிழ் நாட்டில் ஈசனது கோவில் ஈச்சரம் என்று பெயர் பெற்றாற்போன்று, விட்ணுவின் கோவில் விட்ணுகிரகம் என வழங்கிற்று. அப்பெயர் விண்ணகரம் என்று மருவிற் றென்பர்.5 வைணவ உலகம் தலைக்கொண்டு போற்றும் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஆறு விண்ணகரங்கள் உள்ளன. திருவிண்ணகரம்கும்பகோண்த்திற்கு மூன்று கல் அளவில் உள்ள திருமால் கோவில் திருவிண்ணகரம் என்று விதந்துரைக்கப்பட்டது.6 ஆழ்வார்களில் நால்வர் அதற்கு மங்களா சாசனம் செய்துள்ளனர். “திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்தன்னொப்பார் இல்லப்பன்தந்தனன்…

தமிழ் வளர்த்த நகரங்கள் 21 – அ. க. நவநீத கிருட்டிணன்: தமிழ் வளர்த்த தில்லை

(தமிழ் வளர்த்த நகரங்கள் 20 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கியங்களில் தில்லை – தொடர்ச்சி) தமிழ் வளர்த்த நகரங்கள்தமிழ் வளர்த்த தில்லை 15 இலக்கியத்தில் இறைமணம் சங்கக்கால இலக்கியங்களிலிருந்து தற்கால இலக்கியங்கள்வரை எந்த நூலை நோக்கினாலும் அதில் இறை மணம் கமழாமல் இருப்பதில்லை. முழுதும் இறை மணமே கமழும் இயல்புடைய இலக்கியங்களைச் சமய நூல்கள் என்பர் சான்றோர். பெரும்பாலும் தில்லை மாநகரம் வளர்த்த தமிழெல்லாம் சமயத்தமிழ், அதிலும் சைவத்தமிழ் என்றே சொல்ல வேண்டும். ‘திருமுறைகளைக் காத்த தில்லை தேவாரம் பாடிய மூவர்பெருமக்களும்…

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.1 – புலவர் கா.கோவிந்தன்

தமிழர் பண்பாடு – முன்னுரை தமிழர் பண்பாடு(தொடக்க காலம் முதல் கி.பி. 600 வரை)1.முன்னுரை வரலாற்றின் குறிக்கோள் வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க் களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடாத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் பழங்கதை, அரசகுல மகளிரின் கற்பழிப்பு, ஒரு சிலரின் வெறியாட்டத்தைப் பழி வாங்குவது…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 984-990 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002 992.பஞ்சபாணம் – ஐந்தம்பு நாளியல் விளக்கம் என்னும் நந்தன வருடத்துச் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் (1951)ஆசிரியர் : வித்வான் : சோ. அருணாசல தேசிகர் (சீர்காழி)★ நூல் : திருச்சிறுபுலியூர் உலா (1951)குறிப்புரை : கி. இராமாநுசையங்கார் (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

உ.வே.சா.வின் என் சரித்திரம் 67 : ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 66 : பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம் – தொடர்ச்சி) என் சரித்திரம்ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு ஆறுமுகத்தாபிள்ளை நல்ல உபகாரி; தம் செல்வத்தை இன்ன வழியில் பயன்படுத்த வேண்டுமென்ற வரையறையில்லாதவர். அந்த ஊரில் தம்மை ஒரு சிற்றரசராக எண்ணி அதிகாரம் செலுத்தி வந்தார். யார் வந்தாலும் உணவளிப்பதில் சலிக்கமாட்டார். பிள்ளையவர்கள் அவர் வீட்டில் தங்கிய காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேட தினமாகவே இருக்கும். கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு நாள்தோறும் சிலர் வந்தவண்ணம் இருப்பார்கள். வெளியூர்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியர்களாக…