திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் – வேணு குணசேகரன்

திருத்தமிழ்ப்பாவை தமிழ்த்தாயின் கட்டளை ஏற்றுத் ‘ திருத்தமிழ்ப்பாவை’ பாடினேன் கவிஞர் வேணு குணசேகரன் தமிழ்த்தாய் தைத்திங்கள் பிறக்குமுன் எமக்கொரு கட்டளை இட்டாள். அந்தக் கட்டளையை எம்மால் முதலில் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு எமது சிற்றறிவே காரணம்.  மார்கழியில் வைணவர்கள் திருப்பாவையையும், சைவர்கள் திருவெம்பாவையையும் ஓதி மகிழ்வதுபோலத் தமிழ்த்தாயும் தமக்கென ஒன்றைச் செய்யுமாறு பணித்திருக்கும் அந்த நுண்ணிய கட்டளையை அவளருளாலே பின்னர்ப் புரிந்து கொண்டேன். ஆயின் அது எம்மால் இயலுமா என்று கொஞ்சம்கூடச் சிந்திக்கவில்லை.   மாறாகத், திருப்பாவை, திருவெம்பாவைப் பாசுரங்களைப்போல, அவள்…

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6

(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6  தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6 உண்மை கூறா உலகில் வாழ்வது அம்ம கொடிது; அன்றியும் மாணவ! சொல்வ தொன்று; செய்வ தொன்று வீட்டில் ஒன்று; வெளியில் ஒன்று;                              165 கண்டால் ஒன்று; சென்றால் ஒன்று; நேர்மையும் இன்று; நிலையும் இன்று; அழுக்கா றென்ற ஆழ்கடல் உண்டே; அவாவெனும் கொடிய அராவும் உண்டே; வெகுளி யென்ற வெந்தீ உண்டே                              170 இன்னாச் சொல்எனும் ஈட்டியும் உண்டே தன்னலம் என்ற தாக்கணங்…

திருக்குறள் அறுசொல் உரை: 111. புணர்ச்சி மகிழ்தல் : வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ. அரங்கராசன் தொடர்ச்சி)   திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 111. புணர்ச்சி மகிழ்தல் தலைவன் மணந்து, கூடிமகிழ்ந்த இன்பத்தை, எடுத்துக் கூறுதல்.    (01-10 தலைவன் சொல்லியவை) கண்டு,கேட்(டு), உண்(டு),உயிர்த்(து), உற்(று)அறியும் ஐம்புலனும்,       ஒண்தொடி கண்ணே உள.       கண்டு,கேட்டு, உண்டு,முகர்ந்து,      தொடுஇன்பம் இவளிடமே உண்டு. பிணிக்கு மருந்து பிறமன்; அணிஇழை       தன்நோய்க்குத், தானே மருந்து.       நோய்க்கு மருந்து வேறு;…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 5/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 4/7 தொடர்ச்சி)      வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 5/7     “சி.இலக்குவனாரின் பழந்தமிழ் இயல்புகள்” குறித்துத் தொகுப்புரையை அளித்துள்ளார் முனைவர் வெ.சஞ்சீவராயன்; பதினொரு தலைப்புகளில் பழந்தமிழைப் பாங்குடன் ஆய்ந்தவற்றை விளக்கி அவற்றின் சுருக்கத்தைத் தந்துள்ளார்; இலக்குவனாரைப் பொருத்தவரையில் பழந்தமிழ் என்பது தொல்காப்பியத்திற்கும் சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்ட நெடியதொரு காலத்தில் வழங்கிய தூய்மையான தமிழாகும் என்றும் விளக்குகிறார்.  …

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 41(2.11) பேதைமை யொழித்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 40(2.10)  தொடர்ச்சி)  மெய்யறம் இல்வாழ்வியல்  41(2.11) பேதைமை யொழித்தல் 401.பேதைமை யேதங்கொண் டூதியம் விடுதல்; பேதைமை என்பது ஒருவன் தனக்குக் கேடு தரும் பண்புகளைப் பின்பற்றி நன்மை தரும் பண்புகளை விட்டுவிடுதல்; கடிந்தவை தம்பால் காதன்மை செய்தல்; மேலும் பெரியோரால் விலக்கப்பட்ட செயல்களை விரும்பி செய்தல்; நாணன் பருள்புகழ் பேணுத லின்மை; மேலும் பழிச் சொல்லுக்கு வெட்கப்படாமை, அன்பு இல்லாமை, அருள் இல்லாமை, புகழ் தரக்கூடிய நல்ல செயல்களைச் செய்யாமை; அறிந்துணர்ந் துரைத்து மடங்கா தொழுகல்; அரிய நூல்களைக் கற்று உணர்ந்து…

மறக்க முடியுமா? : திருவாரூர் தங்கராசு – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – திருவாரூர் தங்கராசு   “சட்டத்தை எதிர்த்த தோழர்களை எல்லாம் தேடிப்பிடித்து, அவர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.   1946இல் இந்தியாவில் மேலாட்சி(டொமினியன்) தகுதியுள்ள இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்பட்டது. அரசியல் வரையறை அவையின் தலைவராக இராசேந்திரபிரசாத்து தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை கூடியது. இந்த அவை , அம்பேத்துகார் தலைமையில் அரசியலமைப்புச்சட்ட வரைவுக் குழுவை அமைத்தது.  டி.டி.கிருட்டிணமாச்சாரி, அல்லாடி கிருட்டிணசாமி, கோபால்சாமி…

குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கத்தின் மாநிலப் போட்டிகள்

  குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் நாமக்கல் : குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் 68- ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்றன. இவற்றில் கவிதை, கட்டுரை, ஓவியம்  முதலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. கவிதைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘இளங்கவி விருது 2017’, கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் ‘சிந்தனைச் சிற்பி விருது 2017’, ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘வரைகலைச் சுடரொளி விருது 2017’ ஆகிய விருதுகளும் சான்றிதழ்களும்…

வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா? – ஈழத்து நிலவன்

வீரம் நிறைந்த தமிழினமே! சோரம் போகலாமா?  உரக்கச் சொல்வோம் எங்கள் உரிமையை!  உறுதியாய்க் கேட்போம் எங்கள் விடுதலையை ! தென்தமிழீழத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டு நகரில் தை 8 / சனவரி 21ஆம் நாள்  சனிக்கிழமை ‘எழுக தமிழ்‘ நிகழ்வு நடைபெறவுள்ளது.   இது காலத்தின் ஒரு முதன்மையான வரலாற்றுக் கடமையாகும். சிங்களப் பேரினவாதிகள் அரச ஆதரவோடு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும் எமது ஆதரவை நல்குவோமாக! அம்பாறை, திருகோணமலை,…

தலைவர் கருணாநிதியும் இளைய தலைவர் தாலினும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர் கருணாநிதியும் இளைய தலைவர் தாலினும்   பொருளாளர் என்ற பொறுப்பில் இருந்து தலைவர்போல் செயல்பட்டு வருகிறார் தாலின்.  இருப்பினும் அவர் தலைவராகவே ஆக வேண்டும் என்று அவரது அன்பர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அழகிரி போன்ற குடும்ப உறுப்பினர்களும் மூத்த தலைவர்களும் கலைஞர் கருணாநிதி இருக்கும் வரையில் தலைவர் அவர்தான் என்று வலியுறுத்தி வருகின்றனர்.   இதற்கான காரணம், இளைஞர் அணி என்பதை, மகளிர் அணி, வழக்குரைஞர் அணி முதலான பிற 17 அணிகள்போல் கருதாமல் தனிக்கட்சிபோல் நடத்தியமைதான். அரசர்வீட்டுக் கன்றுக்குட்டியாகத் தாலின்…

‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’: அணிந்துரை: பழ.நெடுமாறன்

‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ : அணிந்துரை: பழ.நெடுமாறன்           புலவர் சா.பன்னீர்செல்வம் அவர்கள் ‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ என்னும் தலைப்பில் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியர் கூறிய திசைச் சொல் என்பதின் சரியான விளக்கம் யாது என்பதைச் ‘செந்தமிழா கொடுந்தமிழா?‘ என்னும் தலைப்பிலான கட்டுரை கூறுகிறது.                    செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்                    தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி எனத் தொல்காப்பியர் கூறுவதற்கு இளம்பூரணர், “செந்தமிழ்…

எண்வகை மணம் – சோமசுந்தர பாரதியார்

எண்வகை மணம்   (எனவே ) ஐந்திணை ஒழுக்கமாகிய களவு, கற்புத் திருமணமும், கைக்கிளை மணம், பெருந்திணை வாழ்வு இம் மூன்றும் தமிழர் வாழ்விலே நிகழ்ந்த இயற்கை நிகழ்ச்சிகள். இவை எந்த நாட்டிலிருந்தும் இந்த நாட்டில் குடிபுகுந்தவையல்ல; எந்தச் சமூகத்தாரிடமிருந்தும் தமிழர்கள் கடன் வாங்கியவையல்ல; எந்த மொழிகளிலிருந்தும் தமிழ்மக்கள் கற்றுக்கொண்டவையும் அல்ல; தமிழர் சமுதாயத்தில் தாமே தோன்றி நிலவிய இயற்கை மணவாழ்வாகும். இதுவே தொல்காப்பியக் கண்ணாடி நமக்குக் காட்டும் உண்மை. – நாவலர் சோமசுந்தர பாரதியார்