க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 2/5 தொடர்ச்சி) 3 க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம்:    மற்றோர் இடத்தில், காவலர்களை நையாண்டி செய்கின்றார் பாவலர். நாட்டில் நடக்கும் பெரும்பெரும் கொள்ளைகளையும், கொலைகளையும் அரசியல்வாதிகளுக்கு அடிவருடிக்கொண்டு கண்டுங் காணாமல் போகும் காவல்துறை, இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்  ஏழைகளை ஐயப்பட்டு உசாவல் என்ற பெயரில் அழைத்துச் சென்று கடுமையாக அடித்துத் துன்புறுத்துவதையும் இரண்டு சக்கர வண்டிகளின் ஆய்வு என்ற பெயரால் தேவையற்ற கேள்விகள் கேட்டு வண்டி உரிமையாளர்களிடம் கையூட்டுபெற்றுக்கொண்டு அனுப்புவதையும் மனத்தில் கொண்டு…

என் பா ! – க.தமிழமல்லன்

என் பா ! இயற்றுகின்ற என்பாக்கள் எதுகை மோனை இயல்பாக அமைந்திருக்கும் இன்பப் பாக்கள்! வயல்வெளியில் விளைந்திருக்கும் பயிரைப் போல, வலிமைதரும் வளமைதரும் படிப்போர்க் கெல்லாம்! குயவன்செய் பாண்டமல்ல கருக்கா வெள்ளி! குடங்குடமாய்த் தங்கத்தை உருக்கி வார்த்த உயர்அணிகள் எனும்வைரம் பதித்த பாக்கள்! உயர்எண்ணம் அழகாக ஒளிரும் பாக்கள்! குமுகாய மீட்சிகளைக் கூறும் பாக்கள், கொடியோரின் தீப்போக்கைக் குட்டும் பாக்கள்! அமுங்கிவரும் அடித்தட்டு மக்கள் நன்மை அடைதற்கு முழக்கமிடும் அன்பு வெள்ளம்! உமிமூட்டை அடுக்கிவைத்தே அரிசி என்பார்! உதவாத சொல்லடுக்கிப் பாக்கள் என்பார்! தமிழ்க்கொலையைச்…

யார் வந்தாலும் வரவேற்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

யார் வந்தாலும் வரவேற்போம்!  வைகாசி 06, 2047 / மே 19, 2016 : வாக்குகள் எண்ணப்பட்டுச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்  அறிவிக்கப்பட்டிருக்கும்; யார் ஆட்சி அமைக்கப் போவது என்று தெரிந்திருக்கும். அதன்படி யார்  ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் வரவேற்போம்! தேர்தலுக்கு முன்னர் யார், எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும், அல்லது யார் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தாலும், விரும்பியவர் ஆட்சி அமைத்தாலும் விரும்பாதவர் ஆட்சி அமைத்தாலும் வரவேற்போம்!   அஇஅதிமுக வின்  மீது மக்கள் காணும் குறைகள்  வேறுகட்சி மீது இருந்தது என்றால்,…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200:  தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225   201. மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் :  233.1 புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 235.3 செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார். – பெரியபுராணம்:…

மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! -இலக்குவனார் திருவள்ளுவன்

: மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487)    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த நிலப்பகுதி, பெருங்கடல்கோள்களால் தனித்தீவாக மாறிய நிலப்பகுதி, அதுவே இலங்கை என்றும் ஈழம் என்றும் அழைக்கப்பெறும் தமிழர்க்கான நிலப்பகுதி. இங்கோ சாதி வேறுபாடுகளையும் உயர்வு தாழ்வுகளையும் கற்பித்த ஆரியச் சமயத்தால் அழிவினைச் சந்தித்தது தமிழகம். அங்கோ வந்தவர்க்கு அடைக்கலம் கொடுத்ததால், அருள்நெறி போற்றும் புத்தச் சமத்தினரின் இன வெறியால் சிங்களம் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தித்…

அறிவிப்பு: 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.

  அறிவிப்பு : 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.   அன்புடையீர் வணக்கம். வேறு சில பணிகளால், இனி வரும் மூன்று திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப்பெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர், அகரமுதல

ஔவை சண்முகம் பிறந்தநாள் விழா: திருவுருவப் படங்கள் திறப்பு : ஒளிப்படங்கள்

  [சித்திரை 13, 2047 / ஏப்பிரல் 26, 2016 மாலை 6.00] தாமரைத்திரு ஔவை சண்முகம் 104 ஆவது பிறந்தநாள் விழா திருவுருவப் படங்கள் திறப்பு தமிழ்ச்சான்றோர் விருது வழங்கல்  [படங்களை அழுத்தின்  பெரிதாகக் காணலாம்.]

அழிந்து வரும் நிலையில் ஃகெல்சிரிகம பேருந்து நிலையம் – பா.திருஞானம்

அழிந்து வரும் நிலையில்  பேருந்து நிலையம்  கொத்(து)மலை  பகுதிக்குட்பட்ட  ஃகெல்பொட தோட்டம்  ஃகெல்சிரிகம  பகுதியில் காணப்படும்  பேருந்து நிலையம் அண்மைக் காலமாக உடைந்து காணப்படுகின்றது. இதனால் இந்தப் பேருந்து தரிப்பிடத்தைப் பாவித்து வரும் பயணிகள், பாடசாலை மாணவர்கள், பல இன்னல்களைத் துய்த்து வருகின்றனர்.   இந்தப் பேருந்து தரிப்பிடத்தில் நுவரெலியா, வெளிமடை, பண்டாரவலை, பதுளை, தியத்தலாவ, கதிர்காமம், பூண்டுலோயா பகுதிகளில் இருந்து கண்டி, கொழும்பு, யாழ்ப்பானம், கம்பளை போன்ற இடங்களுக்குச் செல்லும்  பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. நாளாந்தம் 1000 த்திற்கு மேற்பட்ட பயனிகள் பாவித்தும் வருகின்றனர்….

உயிர் பிரியும் தறுவாயிலும் கொடை வழங்கிய நெடுஞ்சேரலாதன் – மயிலை சீனி வேங்கடசாமி

உயிர் பிரியும் தறுவாயிலும் கொடை வழங்கிய வள்ளல்  சேரவேந்தர் நெடுஞ்சேரலாதன்   நெடுஞ்சேரலாதன் சேரநாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்து வருகையில் கொங்குநாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆட்சி செலுத்தி வந்தான். இவர்கள் காலத்தில் சோழநாட்டை ஆண்டு வந்த வேந்தன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி என்றும் பெரு விறற்கிள்ளி என்றும் அழைக்கப்பட்டான்.   நெடுஞ்சேரலாதனுக்கும் இந்தச் சோழ அரசனுக்கும் போர் மூண்டது. அந்தப் போரானது ‘போர்’1 என்னுமிடத்தில் நடைபெற்றது. சோழன் அவனைப் ‘போர்’ என்ற நகரத்திற்கு வெளியே எதிர்த்துப் போராடினான். போரில் இருதிறத்துப் படைகளும்…

மாணிக்கவாசகம் மாணவி பரமேசுவரி தினமலர் பட்ட அவைக்குத்தேர்வு

தினமலர் பட்டம் –  பட்ட அவை உறுப்பினராகத் தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி பரமேசுவரி தேர்வு “அரசும் ,அரசியல் கட்சிகளும் மாணவர்களுக்கு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன ?”  என  எழுதி அனுப்புங்கள் என்று தினமலர் பட்டம் இதழில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்களிடம் கேட்டு இருந்தனர். அதன் தொடர்ச்சியாக இப் பள்ளியில் இருந்து பல்வேறு மாணவர்களை ஊக்கப்படுத்தி இப்போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னோம். அதனில் சிவகங்கை மாவட்ட அளவில் அரசு,அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 8. தன்னை யறிதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 7. தொடர்ச்சி) 8 தன்னை யறிதல்   71.தன்னை யறித றலைப்படுங் கல்வி. தன்னை அறிந்து கொள்வதே முதன்மையான கல்வி ஆகும். மனிதரி லுடம்பு மனமான் மாவுள. மனிதரில் உடல், மனம், ஆன்மா ஆகியவை உள்ளன. தோன்முதற் பலவின் றொகுதிகா ணுடம்பு. காணுகின்ற இந்த உடல் என்பது தோல் முதலிய பலவற்றின் தொகுதி ஆகும். உடம்பெலா நிற்கு முயரறி வுரன்மனம். உடல் எல்லாம் பரவி நிற்கும் உயர்ந்த அறிவின் சக்தி மனம் ஆகும். உடம்பு மனமுமா ளுயரறி வான்மா. உடலையும்…

நெடுஞ்சேரலாதனின் போர்முறை – மயிலை சீனி.வேங்கடசாமி

நெடுஞ்சேரலாதனின் போர்முறை   ‘கூற்று வெகுண்டுவரினும் மாறாதவன்’1 என்றும், ‘பகைவர் உள்ளத்தை வருத்தும் போர்ச் செயல்களைச் செய்பவன்’2 என்றும் வரும் செய்திகளால் இவனது போராற்றலை நன்கு உணர்கின்றோம்.   இவனும், இவனது படைவீரர்களும் எழுமரம் போன்ற உறுதியான நெஞ்செலும்பை உடையவர்கள்;3 முறுக்கான உடற்கட்டு உடையவர்கள்;4 இவனது படை வரிசை வரிசையாக வந்தது.5 நெடுஞ் சேரலாதன் தன் மார்பில் பச்சைநிறக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்திருந்தான்.6 நெடுஞ்சேரலாதன் யானை மீதேறிப் போர்க்களம் சென்றான்.7 அப்போது அவன் படைப் பிரிவுகளின் கண்களாக விளங்கினான்.8 படைகளைத் தழுவிச் செல்லும்…