இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 1/2 ஆரா அருந்தமிழ், இசைமலி தமிழ், இன்புறுந் தமிழ், இன்றமிழ், ஈரத்தமிழ், உரையார் தமிழ், உரையுறை தமிழ், ஏரினார் தமிழ், ஏழிசை இன்றமிழ், ஒண்டமிழ், ஒண்தீந் தமிழ், ஒளிர்பூந்தமிழ், கலைமலி தமிழ், கலைவளர் தமிழ், குலமார் தமிழ், குலமுத்தமிழ், குற்றமில் செந்தமிழ், குன்றாத் தமிழ், கொழுந்தமிழ், சங்கத் தமிழ், சங்க முத்தமிழ், சங்கமலி செந்தமிழ், சந்த நிறை தண்டமிழ், சந்தமார் தமிழ், சந்தமார்ந்தழகிய தண்டமிழ், சந்தமாலைத் தமிழ், சந்தமின்றமிழ், சந்துலாந் தமிழ், சீர்மன்னு செந்தமிழ், சீர்மிகுந்த…
ஏ, தாழ்ந்த தமிழகமே! – 4/8
(ஏ, தாழ்ந்ததமிழகமே! 3/8 தொடர்ச்சி) ஏ, தாழ்ந்த தமிழகமே! 4/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] கற்பனைக் கொலை இன்று நாடக மேடைகளில் நடக்கிற வள்ளித் திருமணத்திற்கும். அதிலிருந்துதான் இது கற்பனையானதோ என்று எண்ணும்படியான ஓர் இயற்கை நிகழ்ச்சி சங்க இலக்கியத்தில் வருணிக்கப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். பண்டைக் காலப் புலவர்களின் கள்ளங் கபடமற்ற உள்ளத்தையும், இடைக்காலத்திலே இரட்டை…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 256-266
(தமிழ்ச்சொல்லாக்கம் 245 – 255தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 256. விசித்திரம் – பேரழகு நூல் : அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி) நூலாசிரியர் : கவித்தலம் துரைசாமி மூப்பனார். ★ 257. பிரசண்ட மாருதம் : பெருங்காற்று (1909) இதழ் : செந்தமிழ், செளமிய ௵ மார்கழி, தொகுதி : 8 பகுதி : 2. பக்கம் – 71 கட்டுரையாளர் : வீராசாமி ஐயங்கார் ★ 258. சந்திபாதம் – முதலிற்பிடித்துப் பஞ்சாப் போடுதல் 259.அவதூதம் – புறங்கையாற் கீழே…
ஊரும் பேரும் – திரு.வி.க. அவர்களின் முகவுரையும் ஆசிரியர் இரா.பி.சேது நன்றியுரையும்
தமிழகம் ஊரும் பேரும் முகவுரை உலகை ஒழுங்கு முறையில் இனிது நடாத்தி வரும் அமைப்புகள் பலப்பல. அவற்றுள் உயிர்ப்பாய்த் திகழ்வது ஒன்று. அது நூல் என்பது. நூலின் உள்ளுறை யாது? அறிவு. ஆதலின், நூல் அமைப்பை அறிவுச் சுரங்கம் என்று கூறலாம். நூல்கள் பல திறம். பல திறத்துள் இரவியும் தனித்தும் நிற்பது வரலாறு. வரலாறு வான் போன்றது. வான் மற்றப் பூதங்களிற் கலந்தும், அவற்றைக் கடந்து தனித்தும் நிற்பதன்றோ? “ஊரும் பேரும்” என்னும் இந் நூல் வரலாற்றின்பாற்பட்டது. இவ் வரலாறு தமிழ் நாட்டின்…
தமிழன் என்றோர் இனமுண்டு, தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு – க.பூரணச்சந்திரன்
தமிழன் என்றோர் இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். அந்தத் தனிப்பண்பு என்ன என்று நீண்டநாள் சிந்தித்துப் பார்த்ததுண்டு. கடைசியில், என் சிந்தனையில், அது ஓர் எதிர்மறைப் பண்பாகத்தான் இருக்கிறது. “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு” என்று ஒரு சொலவடை வழங்கிவருகிறது. வந்தாரை வாழவைப்பது மட்டுமல்ல, வந்தவர்கள் ஒழுகலாறுகளையும்(கலாச்சாரத்தையும்) தங்களதாக ஏற்றுக்கொண்டு தங்கள் சொந்த ஒழுகலாறுகளைக் கோட்டைவிடுவதுதான் தமிழனின் தனிப்பண்பு. சமற்கிருதத்திற்கும் அதன் இலக்கிய இலக்கணத்துக்கும் தத்துவ வளத்திற்கும் தமிழ்…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 245 – 255
(தமிழ்ச்சொல்லாக்கம் 238 – 244 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 245. அநுபந்தம் – பின்வருவது 246. அபிதானம் – பெயர் 247. அபிநயம் – கைமெய்காட்டல் 248. அவிழ்தம் – மருந்து 249. இலக்குமி – தாக்கணங்கு 250. இலக்கு – குறிப்பு 251. சுபாவம் – இயற்கை 252. கோமளம் – இளமை 253. சுதந்தரம் – உரிமை 254. திலகர் – மேம்பட்டவர் 255. வருணாச்சிரமம் – சாதியொழுக்கம் நூல் : மார்க்கண்டேய புராணம் வசன காவியமும் அரும்பத…
பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே! : 3/8
(ஏ, தாழ்ந்ததமிழகமே! 2/8 தொடர்ச்சி) ஏ, தாழ்ந்த தமிழகமே! – 3/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] புலவர்களுக்கே பழக்கம் ஒருவர் எழுதின புத்தகத்திற்கு மறுப்போ அதில் ஏதாவது குறையோ காணாவிட்டால், சில புலவர்களுக்குத் தூக்கமே வராது. திருவிளையாடல் புராணத்திற்கு விளக்கவுரை என்று திரு.வி.கலியாணசுந்தரனாரால் ஒரு புத்தகம் பிரசுரிக்கப்படும். அந்தப் புத்தகம் அச்சில் இருக்கின்ற அதே நேரத்தில், அதே…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 238 – 244
(தமிழ்ச்சொல்லாக்கம் 228 – 237தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 238. சுக்கிலம் – வெண்மை 239. கிருட்டிணம் – கருமை 240. பீதம் – பொன்மை 241. இரக்கதம் – செம்மை 242. அரிதம் – பசுமை 243. கபிலம் – புகைமை 244. இரத்தினம் – மணி நூல் : தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் (1909) பக்கம் : 8. நூலாசிரியர் – தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமி இராசு. (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதா தமிழ்ச்சொல்லாக்கம்
தமிழணங்கே! தமிழணங்கே! – புதேரி தானப்பன்
தமிழணங்கே! தமிழணங்கே! நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமேஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுறஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கேதமிழணங்கே உன்.சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே!வாழ்த்துதுமே! இந்தப் பாடல் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களால் 1891 ஆம் ஆண்டு பாடப்பட்டது. அவர், ‘மனோன்மணியம்’ என்னும் கவிதை வடிவிலான நாடக நூல் எழுதினார். அந்த நூலின் பாயிரத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தாக இப் பாடலைப் பாடினார். அதன்பிறகு ஓரிருவர் கவிதை நடையில் நாடக நூல் எழுதினர்….
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 228 – 237
(தமிழ்ச்சொல்லாக்கம் 218 -227தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 228. தேசிய கீதம் – நாட்டுப் பாட்டு (1908) பரலி ச. நெல்லையப்பர் 229. அஞ்சலி – கும்பிடல் 230. அதீதம் – எட்டாதது 231. அபிநயம் – கைமெய் காட்டல் 232. சம்மதம் – உடன்பாடு 233. சுதந்தரம் – உரிமை 234. கனிட்டர் – இளையவர் 235. நிருத்தம் – கூத்து 236. இரத்தம் – புண்ணீர் 237. விவாகம் – மணம் நூல் : மார்க்கண்டேய புராணம் வசன…
தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 218 -227
(தமிழ்ச்சொல்லாக்கம் 213 – 217 தொடர்ச்சி) (சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 218. அசாதாரண தருமம் – சிறப்பியல்பு 219. ஆசீர்வாத ரூபம் – வாழ்த்து 220. திருக்கு – அறிவு 221. நாநா – பல 222. பரசுபரம் – ஒன்றற் கொன்று 223. பத்தியம் – பாடல் 224. பிரதியோகி – எதிர்மறை 225. பிராக பாவம் – முன்னின்மை 226. விசேடம் – அடைகொளி 227. விட்சேபம் – புடைபெயர்ச்சி நூல் : வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் (1908) குறிப்புரை…
பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!: 2/8
(ஏ, தாழ்ந்த தமிழகமே!1/8 தொடர்ச்சி) ஏ, தாழ்ந்த தமிழகமே!: 2/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] சங்க இலக்கியம் கவிஞர்களையும், மற்றவர்களையும் அன்று போற்றாததற்கும், இன்று போற்றுதற்கும் இன்னுமொரு காரணமுண்டு. சங்க இலக்கியங்களிலே, நமது கண்ணும் கருத்தும் படாதபடி திரையிட்டு வந்தார்கள். உங்களில் பலர் சங்க இலக்கியங்களைப் படித்திருக்கலாம். சிலர் புரிந்து கொண்டிருக்கலாம்; சிலர் புரிந்தது போல் பாவனை…
