மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6
(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6 தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 6/6 உண்மை கூறா உலகில் வாழ்வது அம்ம கொடிது; அன்றியும் மாணவ! சொல்வ தொன்று; செய்வ தொன்று வீட்டில் ஒன்று; வெளியில் ஒன்று; 165 கண்டால் ஒன்று; சென்றால் ஒன்று; நேர்மையும் இன்று; நிலையும் இன்று; அழுக்கா றென்ற ஆழ்கடல் உண்டே; அவாவெனும் கொடிய அராவும் உண்டே; வெகுளி யென்ற வெந்தீ உண்டே 170 இன்னாச் சொல்எனும் ஈட்டியும் உண்டே தன்னலம் என்ற தாக்கணங்…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 41(2.11) பேதைமை யொழித்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 40(2.10) தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 41(2.11) பேதைமை யொழித்தல் 401.பேதைமை யேதங்கொண் டூதியம் விடுதல்; பேதைமை என்பது ஒருவன் தனக்குக் கேடு தரும் பண்புகளைப் பின்பற்றி நன்மை தரும் பண்புகளை விட்டுவிடுதல்; கடிந்தவை தம்பால் காதன்மை செய்தல்; மேலும் பெரியோரால் விலக்கப்பட்ட செயல்களை விரும்பி செய்தல்; நாணன் பருள்புகழ் பேணுத லின்மை; மேலும் பழிச் சொல்லுக்கு வெட்கப்படாமை, அன்பு இல்லாமை, அருள் இல்லாமை, புகழ் தரக்கூடிய நல்ல செயல்களைச் செய்யாமை; அறிந்துணர்ந் துரைத்து மடங்கா தொழுகல்; அரிய நூல்களைக் கற்று உணர்ந்து…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 40(2.10) பெரியாரைத் துணைக்கொளல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09). தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் பெரியாரைத் துணைக்கொளல் பெரியா ரரியன பெரியன செய்பவர்; பெரியவர் என்பவர் செய்வதற்கு அரிய, மிக உயர்ந்த செயல்களைச் செய்பவர்; பொறியா ளுளத்தை யறிவா லாள்பவர்; மேலும் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள மனத்தைத் தமது அறிவின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்; இகபர வியலெலா மெண்ணிநன் கறிந்தவர்; மேலும் இவ்வுலகத்தின் இயல்பினைப் பற்றியும் இறைவனைப்பற்றியும் நன்கு அறிந்து இருப்பவர்; 394.நல்லின வியலெலா நண்ணி நிற்பவர்; மேலும் நல்லினப் பண்புகளை எல்லாம் பெற்றிருப்பவர்; பின்னுறுந் தீங்கெலா முன்னறிந்…
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6
(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6 ‘குறள்நெறி பரவின் குடியெலாம் சிறக்கும் 140 அமைதி நிலவும் அன்பு தவழும் போர்முறை ஒழியும்; பொய்மை மறையும் செம்மை ஆட்சி சீர்பெற் றோங்கும்’ என்றே கூறி இன்குறள் பாக்களை தெருவெலாம் பரப்பச் செய்யும் தொண்டில் 145 உளம்உரை உடல்பொருள் ஒல்லுவ வெல்லாம் அளித்திடக் காண்பாய் அகம்மிக மகிழத் திங்கள் தோறும் திருக்குறள் கழகக் கூட்டம் நடாத்தி நாட்டின் உயர்வைப் பெருக்கிடும்…
தண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை
தண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை தெண்டிரை மூன்று திசையினுங் காப்ப வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப் பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம். நனிமிகு பண்டுநற் நற்றமிழ்ச் செல்வி பனிமலை காறும் பகைசிறி தின்றி இனிதுயர் வெண்குடை நீழ லிருந்து தனியர சோச்சித் தமிழகங் காத்தாள். சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை மாரி வழங்கும் வடதலை நாட்டை ஆரிய ரென்னு மயலவர் தங்கள் பேரறி யாத பெருமையி னாண்டாள். விந்த வடக்கு…
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6
(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் :3 / 6 தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6 அவர்கருத் தறிந்தே அன்பாய் ஒழுகும் 110 தம்பியும் மக்களும் தமரும் பெற்றவர். கோவிந்த சாமியாம் கூறும் தம்பி கொடுப்பதும் கொள்வதும் குறைமிக வின்றி அறநெறி போற்றிடும் அரிய வணிகர். புன்னகை தவழும் நன்னல முகத்தர். 115 அடக்கமே வடிவம்; அன்பே பண்பு அண்ணனுக் கேற்ற அருள்உளத் தம்பியர் உடலால் இருவர் உளத்தால் ஒருவர் பகுக்க முயல்வோர் பயன்பெறத்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை: திருக்குறள் ஆராய்ச்சி 5/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 6/6 பொருளியலிலும் நாட்டியல் ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் (திருக்குறள் 463) இக்குறளுக்குப் பொருள்சார் விளக்கம் மட்டும் தராமல், ‘‘பிறர் நாட்டை அடிமைப்படுத்தச் சென்று தம் நாட்டை இழந்த செயல்கள் வரலாறுகளில் நிறைய உள’’ [18] எனப் புதுமையாக நாட்டாசை அடிப்படையிலும் விளக்குகிறார். பேராசிரியரின் திருவள்ளுவர் கால ஆராய்ச்சி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பிற அறிஞர்கள்…
திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் அதிகாரம் 109. தகை அணங்கு உறுத்தல் தகுதிமிகு தலைமகளது அழகு, தலைமகனது மனத்தை வருத்துதல் (01-10 தலைமகன் சொல்லியவை) அணங்குகொல்…? ஆய்மயில் கொல்லோ…? கணங்குழை மாதர்கொல்….? மாலும்என் நெஞ்சு. தெய்வ மகளோ….? மயிலோ….? மண்மகளோ….? என்மனம் மயங்கும். நோக்கினாள்; நோக்(கு)எதிர் நோக்குதல், தாக்(கு)அணங்கு தானைக்கொண்(டு)…
மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் : 3/6
(மாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார், தொடர்ச்சி) மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 3/6 ஆயினும் 70 பாரியும் ஓரியும் வாழ்ந்த பாரில் உற்றுழி உதவும் நற்றவ வள்ளலார் அற்றோர் அல்லர்; ஆதலின் செல்வாய் அணி புதுக் கோட்டை; அண்ணன் வீடு எங்குள தெனநீ எவரை வினவினும் 75 அன்புடன்…
போற்றியே தொழுகின்றோம்! -ஈழத்து நிலவன்
விழிகளை மூடிக் குழிகளில் உறங்கும் வீரக் குழந்தைகளே! – நாங்கள் விடுதலை வென்றிடக் குழிகளை விட்டு வெளியினில் வாருங்கள்! – நீங்கள் வெளியினில் வாருங்கள்! (விழிகளை மூடிக்…) உயிரினைக் கொடுத்து உறவினைக் காத்த உங்களை மறப்போமா? உறங்கியே வாழும் உங்களை மறந்த மனிதராய் இருப்போமா? (விழிகளை மூடிக்…) மானம் அழிவின்றி வாழவே உயிரைத் தானம் செய்தீரே! – இந்த வானமே போற்றும் வையகம் வாழ்த்தும் என்று நீ வாழ்வீரே! (விழிகளை மூடிக்…) நள்ளிரா வேளையில் கல்லறை தேடியே நாம் உமை வணங்குகின்றோம்! –…
கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! – ஈழத்து நிலவன்
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்! இன்னும் எத்தனைக் காலம்தான் கண்ணீர் விடப் போகின்றீர்கள் இழந்தவற்றை எண்ணி? இன்னும் எவ்வளவு நேரம்தான் கண்ணீர் சிந்தப் போகின்றீர்கள் உங்கள் தனியரின் கல்லறையின் முன்னால் கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல கருத்தரிப்பதற்கே! ஓர் இருளின் உகத்தை எரிப்பதற்காகத் தான் அவன் சூரியனாகிப் போனான் போராளி நடந்த சுவடுகளைத் தொட்டுப் பாருங்கள் சுள்ளென்று சுடும் அவன் விடுதலையின் தாகங்கள் ! அவன் உயிரின் ஆன்மா எதை நினைத்து உறங்கிப் போயிருக்கும் தனது…
தமிழருக்(கு) அரணாய் நின்றான் வாழியவே!
ஈழப் புலிமகன் வீரத் தலைமகன் எறிகணை தொடுத்தான்! ஆழிப்பேரலை போலச் சினமுடன் அடியாய் அடியடித்தான்! அடிமை இல்லாத தமிழீழம் படைக்க நினைத்தான்! அனைவரும் சமமாய் வாழ்ந்திட ஒன்றாய் இணைத்தான்! தரைப்படை கடற்படை வான்படை கட்டி அமைத்தான்! மில்லர் தற்கொடைப் படையால் எதிரிகள் முற்றுகை தகர்த்தான்! அறநெறியோடு போர்முறை காத்து வென்றான் – வைய அரங்கில் இவனே தமிழருக்(கு) அரணாய் நின்றான்! தமிழாய் நெருப்பாய்த் தலைவன் பிறந்தே வந்தான் – புதுத் தமிழீழ அரசு ஒன்றைப் பொதுவாய்த் தந்தான்! அடுப்பில் கிடந்த பெண்ணைப் புலியாய்ப் படைத்தான் – பெண் அடிமை…