பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் உதாரன் : கார்நிரம்பும் வான மெல்லாம் கனமழை பொழிய வெள்ள நீர்நிரம்பும் வயல்க ளெல்லாம் நெடும்பயிர் செழிக்க வண்ணத் தேர்நிரம்பும் வீதி யெல்லாம் திருவிழா மலிய நாளும் பேர்நிரம்பும் ஆட்சி மேவும் பெருவேந் தன்நங் காய்நீ கற்றறிந்த …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் அமுதவல்லி : கவிதை யாக்கும் மரபெல்லாம் கன்னித் தமிழின் நிலைகொண்டு குவியும் படியாய் எனதுள்ளம் குறித்தீர் என்றும் என்நன்றி புவியோர் போற்றும் இலக்கியங்கள் பொருந்தும் மரபைச் சொல்வீரேல் கவியோர் நெஞ்சின் போக்குணர்ந்து கவிதை சுவைத்தல் எளிதாமே…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 மோனைப்புலவன் – அல்லி கலித்தாழிசை மோனை : மேற்றிசையில் ஒளிகுறைய மேகங்கள் கருத்துவர தோற்றந்தான் மிகுந்தமயில் தோகையை விரித்தாட காற்றினிலே குயிலோசை கனிவைமிக எழுப்புகையில் வேற்றாளாய் எனைவிலக்கி விரைந்துநீ செலலாமோ ஆதவனும் மேற்றிசையில் அழகொளியைப் பரப்பிவிட போதினையே மலர்த்தியங்கே புகுகின்ற …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 5 அமுதவல்லி – உதாரன் கலி விருத்தம் அமுதவல்லி : புண்பட்ட நெஞ்சும் பொலிவுற மாந்தர் பண்பாடுந் தமிழைப் பணிந்து வணங்குவேன் பண்பட்ட திறனாம் புலமை யென்னுங் கண்பெற்ற கவிஞர்க்குக் கனிவான வணக்கம் பதின்சீர் விருத்தம் வெண்பா அரும்பா வீணாம் முயற்சி யென்றே விலகி …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 3 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 4 உதாரன் – அமுதவல்லி எண்சீர் விருத்தம் அமுதவல்லி : பாராண்ட தமிழ்மன்னர் பணிந்து காத்த பைந்தமிழை வளர்க்கின்ற புலவீர் வாழ்க சீரார்ந்த தளையென்றும் சிறப்பு நல்கும் செவிக்கினிய தொடையென்றும் அடிய ளந்து நேராக வகுத்தளித்த நெறியைச் சொன்னீர் …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 3
(புதிய புரட்சிக்கவி’- களம் : 2 காட்சி : 2 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 2 காட்சி : 3 முச்சந்தி – மோனைப்புலவன், அல்லி கலிவிருத்தம் மோனை: அன்பே அருமருந்தேஅன்றுநீ சொன்னபடிபுன்னை மரத்தடியில்புலரும் பொழுதளவும்கண்ணைஇமை மூடாமல்காத்துநான் தவித்திருந்தேன்சொன்னசொல் மாற்றினாய்சுகம்ஏ மாற்றினாய் அல்லி: வேளை தவறாதுவீதியிலே நின்றபடிவாளை மீன்போல்வார்த்தை வழுக்கஊளை வாயின்ஊத்தைப் பல்காட்டும்மூளையிலாப் புலவரேமூச்சை நிறுத்தும் அறுசீர் விருத்தம் மோனை: புத்தம் புதிய மலராள்நம்புவியாள் மன்னன் மகளுக்குநித்தம் யாப்பை உரைக்குங்கவிநிகழ்த்தும் பாங்கை எனக்குரைப்பாய்தத்துப் பித்தென் றவனும்மிகப்பித்துப் பிடித்துப் பேசுவனேல்சித்தங் கலங்கா தென்னிடம்நீசிறிதும்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 2
(புதிய புரட்சிக்கவி’- களம் : 2 காட்சி : 1 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி களம் : 2 காட்சி : 2 உதாரன், மேடையில் தன்பகுதியில் அமர்ந்திருக்கிறான். இளவரசி மறுபுறமாக வந்து தன்னிருக்கையில் அமர்கிறாள் அறுசீர் விருத்தம் இளவரசி: அறிவுங் கொளுத்தித் தமிழ்ப்பாடல்அகமுங் குளிரப் பயிற்றுகிறசெறிவு மிக்கோய் செந்தமிழைச்சேர்த்து வணங்கி மகிழ்கின்றேன்நெறியாய்ச் செய்யுள் அடிப்படையைநேற்றே உரைத்தீர் நனிநன்றுகுறிப்பீர் இன்று தளையோடுகொள்ளுந் தொடையை முறையோடு கவிஞன்: வளையுள் வளைந்தி ருக்கும்வனப்புறு சாரை தானும்இளைய தவளை கவ்வஇருநீர் சீறிப் பாயவிளையுங் கரும்பின் பூவும்விதிர்த்திடும் தேன்பெ…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 2 காட்சி : 1
(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 5 – தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 2 காட்சி : 1 அரண்மனை வளாகத்தில் அழகிய பூஞ்சோலை. அமைவான மேடையில் இரண்டிருக்கை – இரண்டிற்கும் நடுவில் எழிலான திரை – கவிஞன் ஒரு புறம் காத்திருக்க – இளவரசியை மறுபுறம் அமரச் செய்து, இப்பாலிருக்கும் உதாரனையணுகி –அகவல்அல்லி: சங்கத்தமிழ் மிக்கோய் சாற்றினோம் வணக்கம்எங்கள் தலைவி இருக்கையில் அமர்ந்துளான்பொங்குந் தமிழால் புகல்கநும் பாடம்பங்கமிலாத் தமிழ்ப்பணி தொடர்க வாழ்க உதாரன்: மானுடந் தாயே மன்னும் இளையாய்தமிழே…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 5
(புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 4 – தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 1 காட்சி : 5 அரண்மனைப் பகுதி, அரசனும், அமைச்சனும் இருக்க, உதாரன் வருகிறான் கலி விருத்தம் அரசன் பண்பாடும் தமிழில் பழகுதமிழ்ப் பாடல் விண்ணோடும் முகிலாய் விளைக்குங்கவி மன்னா என்னினிய வணக்கம் எற்றருள்க ஈங்கே பொன்னினிய இருக்கை பொலிவுபெறச் செய்க உதாரன் என்னாடு வாழ்க இனியதமிழ் போற்றிப் …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.36-1.7.41
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.31-1.7.35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் 36. தந்துவைத்த வொருபொருளைத் தான்கொள்ளு மாறேபோல் வந்தடுத்துத் தீயாழி வாய்க்கொண்டு போயதன்பின் இந்திரத்தை யினிதாண்டன் றிருந்தபெருந் தமிழ்ச்சோழன் செந்தமிழின் மணங்கமழுந் திராவிடம்புக் கிருந்தனனே. 37. பூண்டசுவை யதுகண்ட பூனையுறி யுறிதாகத் தாண்டுமெனு முதுமொழியோற் றமிழ்சுவைத்த பாழ்ங்கடலும் ஆண்டெழுநூ றதன்முன்ன ரரைகுறையா வுள்ளதுங்கொண் டீண்டுள்ள வளவினநாட் டிடஞ்சுருங்கச் செய்ததுவே. 38. எத்தனையோ வகப்பொருணூ…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.31-1.7.35
(இராவண காவியம்: 1.7.26 – 1.7.30தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் ஷ வேறு வண்ணம் 31. குஞ்சோ ரைந்தின் மூன்றொழியக் கோலென் றலறுங் குருகேபோல் வஞ்சாய் நீயுன் பொருளிழந்து மண்மே டாவா யென்றலற அஞ்சா தக்கா ராழிபினும் ஐந்நூற் றோடீ ராயிரத்தே எஞ்சா நின்ற பெருவளத்தோ டிந்திரப் பேரின் றாக்கியதே. 32. அந்தோ முன்போற் றமிழ்மக்க ளானார் வடபா லடைவாகிக் கொந்தார் கானக் குலமுண்டு கொழுதே யடிமைக் குடியாக நந்தா…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.26 – 1.7.30
(இராவண காவியம்: 1.7.21 -1.7.25. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம் துணையா நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகிஇணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல்அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியேபுணையா வந்த பாழ்ங்கடலே பொன்றா யோநீ யின்றோடே. 27. நன்றே பழகித் துணைசெய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே ஒன்றார் போலப் பாழ்ங்கடலே உயிர்கொண் டொழிந்தா யோகெடுவாய் என்றே புலம்பித் தமிழ்மக்கள் இடம்விட் டகலா விடரெய்தித் தன்றா யிழந்த கன்றேபோல் தம்மூ ரிழந்து தவித்தாரே. 28.அன்னை புலம்பத்…