செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம் நடத்தும் ஐம்பெரு விழா

 இடம் தமிழ் வள்ளல் சந்திரசேகர் திருமண மண்டபம் மேற்கு மாம்பலம், சென்னை 33 நாள் கார், 8, தி.ஆ. 2044 / நவ,24, கி.ஆ.2013 ஞாயிறு காலை 08.55முதல் நண்பகல் 01.40 வரை (நண்பகல் உணவு 01.50)   செந்தமிழ் விரும்பிகள் மாமன்ற வெள்ளிவிழா எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! எழுச்சி விழா : கருத்தரங்கம், கவியரங்கம்(தாயே! தமிழே! நீ எங்கே!)  தமிழ்த்திரு தியாகு அவர்களுக்குப் பாராட்டுவிழா சிறந்த தமிழ்மாணவன், நற்றமிழாசிரியர் விருது வழங்கும் விழா அருவினை புரிந்த ஆன்றோர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா…

இலங்கைப் போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும்: சிதம்பரம்

  குற்றவாளியே நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்! இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களை, அந்நாட்டு அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார். மேலும், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையானஉசாவல் தேவை” என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில்  நடைபெற்ற இரண்டாவது தெற்கு ஆசிய மாநாட்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக முழுமையாக உசாவல் நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இலங்கை அரசுக்கு உள்ளது”…

பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள்’ விழா

தில்லி பிரகதித் திடலில் நடைபெற்றுவரும் இந்திய-பன்னாட்டு வணிகக் கண்காட்சியில் ‘தமிழ்நாடு நாள்’ விழாவை தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புச் சார்பாளர் எசு.டி.கே. சக்கையன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி-செய்தித் துறை செயலாளர் முனைவர்  மு.இராசாராம் தலைமையில் விழா நடைபெற்றது. தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் சசுபீர் சிங்கு பசாசு, துணை இயக்குநர் கு.தாணப்பா, செய்தி விளம்பரத் துறை உதவி இயக்குநர் முத்தையா  முதலானோர் பங்கேற்றனர். விழா நடைபெற்ற திறந்தவெளி அரங்கில் பரதநாட்டியம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை முதலான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன….

நெல்லையை உலுக்கிய தமிழர்களப் பேரணி

 தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளை முன்னிட்டுத் தமிழர்களம், திருநெல்வேலி நகரில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது.  தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.  பொதுவளஆய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்தும், முள்ளிவாய்க்கால் முற்றத்தை தமிழக அரசு இடித்ததைக் கண்டித்தும், கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரியும், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக் கோரியும், தமிழகப் பள்ளிகளில் அரசே முன்னின்று நடத்தும் தமிழ் அழிப்பு-ஆங்கிலத் திணிப்பை எதிர்த்தும், தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் தொடர்பாகவும் பேரணியில்…

மும்பையில் பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா

மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாகத் தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா                 மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாகத் தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக  17.09.2013 செவ்வாய்க் கிழமை  மாலை 7.30 மணியளவில் தாராவில் உள்ள கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. சு.குமணராசன், பெ.கணேசன், அலிசேக் மீரான், அ. இரவிச்சந்திரன், வே.ம.உத்தமன், கழகப் பொறுப்பாளர்கள் முதலியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’

அன்புடையீர், வணக்கம்.  ஒரு புதிய முயற்சியாக, நம் தமிழ் மக்களின் தேவைக்கான ஒரு முயற்சியாக  தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’ அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதை 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘அறிஞர் அண்ணா அறக்கட்டளை’ சார்பில் அமைக்கவிருக்கிறோம். இது யாரும் எதிர்பாராத முயற்சிதான். ஆனால் இந்த ‘அறிஞர் அண்ணா இல்லம்’ மனிதகுலம் இருக்கும் வரை நிலைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இதை அமைக்க விரும்புகிறோம்.  ஆகவே இப்போது இருக்கிற அரசியல் கட்சிகளின் சூழ்நிலையில், எந்த கட்சியின் தலையீடும் இல்லாத வகையில் இந்த இல்லத்தை உடனடியாக நாம்…

பூட்டப்பட்டது அண்ணா மேம்பாலம்!

  மாணாக்கர் எழுச்சி!   முள்ளிவாய்க்கால் முற்றத்தை உடனே மறு சீரமைப்பு செய்ய வேண்டியும் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன்  முதலான தமிழ் ஆர்வலர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டியும்  மாணாக்கர் போராட்டம் நாடெங்கும் நடைபெறுகிறது. அதில் ஒன்றாக, வரலாற்றில் முதன்முறையாக சென்னை அண்ணா மேம்பாலத்தைச் சங்கிலியால் பூட்டிப் போக்குவரத்தை முடக்கினர்  மாணாக்கர்கள். இப்போராட்டத்தில் 70 மாணாக்கர்களும் இயக்குநர் கௌதமன்  முதலான உணர்வாளர்கள் பலரும் தளையிடப்பட்டுள்ளனர். போராட்டங்கள் மேலும் பரவும் முன்னர் அரசு தலையிட்டு நல்ல முடிவு காணும் எனப் பொதுமக்கள்…

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!

  இந்திய – சிங்களக் கூட்டுப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவேந்தும் விதமாக, தஞ்சை விளாரில், உலகத் தமிழர் பேரமைப்பால் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுவரையும், பூங்காவையும் இடித்த தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 போராளிகளை விடுதலை செய்யக் கோரியும்

மதிமுக வழக்குரைஞர் மாநாடு : விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி தீர்மானம்

    மதிமுகக் கழக வழக்குரைஞர் மாநாடு 16.11.13 சனிக்கிழமை காலை 10.00 மணிக்குச்  சென்னை, எழும்பூர், வேனல்சு சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராசு மகாலில் கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்குரைஞர் தேவதாசு தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் காலை அமர்வில் பின்குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

அனைவரும் பார்க்க வேண்டிய முள்ளிவாய்க்கால் முற்றம்

 – வழக்கறிஞர் இரா.இராசேந்திரன், கரூர்.  தஞ்சை விளார் சாலையில் 2009 மே 17,18,19 நாள்களில் இலங்கை அரசபடையினர் தமிழ்ஈழ முள்ளிவாய்க்காலில் 1,50,000 தமிழர்களை கொன்று ஒழித்த இனஅழிப்பு போரில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவிடமாக உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முயற்சியால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம்

முப்பது நாள்களில் தமிழ்

அன்புடையீர், வணக்கம். தமிழம்.வலை உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும்/ தமிழ் மழலையர்களுக்கும் தமிழ் கற்பிக்க விரும்புகிறது. அவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, தமிழ் கற்றுக் கொண்டதில் எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும். ( எனது 25 ஆண்டு கல்விப்பணியில் நான் கண்டறிந்தவை இவை ) தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க வைப்பதற்கான பாடத்திட்டங்களும், அணுகுமுறைகளும் என்னிடம் உள்ளன. இதனைக் கற்பிக்க…