”மருத்துவ அகராதி” தமிழ் – தமிழ் – ஆங்கிலம் தொகுதி – 1: அறிமுகம்
அறிவுத்தேடல் நூல் “மருத்துவ அகராதி” தமிழ் – தமிழ் – ஆங்கிலம்: தொகுதி – 1 நூலாசிரியர் : அறிஞர் த. வி. சாம்பசிவம் அறிஞர் த. வி. சாம்பசிவம் அவர்களால் 75 ஆண்டுகளுக்கு முன் (1938) எழுதப்பெற்ற 1040 பக்கங்களைக் கொண்ட நூல் இது. தமிழுக்கு ஆக்கம் தரும் நன்முயற்சிகளில் இதுவும் ஒன்று. வாய்ப்புள்ளோர் வாங்கிப்படித்து, தங்கள் நூலகத்தில் பாதுகாக்க வேண்டிய நூல். வெளியீடு: தமிழ்ப்பேராயம் திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் (எசு.ஆர்.எம்) எ சு. ஆர். எம் நகர் காட்டாங்குளத்தூர்…
இராணி மேரிக்கல்லூரி : தேசியக் கருத்தரங்கம், ஒளிப்படங்கள்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் அரசு இராணி மேரிக்கல்லூரியும் இணைந்து நடத்திய செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் தேசியக் கருத்தரங்கம், சென்னை [பெரிதாகக் காணப் படங்களைச் சொடுக்கவும்]
குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ஆம் ஆண்டு நிறைவு விழா
பிரித்தானியா குறோளி தமிழ் கல்விக் கூடத்தின் 9ஆம் ஆண்டு நிறைவு விழா மாசி 16, 2046 – 28/02/2015 மாலை 5 மணிக்குத் தொடங்கியது. இந் நிகழ்விற்கு மாணவர்கள் வேட்டியும் சட்டையும் அணிந்தும் மாணாக்கியர் சேலையணிந்தும் வந்திருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்வினைத் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து பேச்சு, கவிதை, நாடகங்கள் மற்றும் பல கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. மாணவர்கள் ஆசிரியர்களுக்கான மதிப்பளித்தலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. சிறப்பு விருந்தினர்களாகக் குரோளி தன்னாட்சி அவைத் தலைவர் திரு கிளிர் பீட்டர் இலாம்பு(Mr.Cllr Peter Lamb…
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 14– ஆ.வெ.முல்லை நிலவழகன்
[மாசி 17, 2046 / மார்ச்சு 01, 2015 தொடர்ச்சி] காட்சி – 14 அங்கம் : கவிஞர், அன்பரசன் இடம் : குடிலின் முன்வாசல் நிலைமை : (நாடகமாடுவோர் அழகுகளை நயம்பட எடுத்துக் கூறியபின் ஓடிய முடியூர் எண்ணத்தை உரைக்கின்றார் கவிஞர் அன்புக்கு) அன்ப : இத்தனை அழகு இருவருக்கும் இருக்க வேண்டுமா? நடிப்பதற்கு! சத்தியமிட்டே சொல்கிறேன்! இருவருமே நல்ல அழகுதான்! கவி : பார்த்ததும் மனதிலோர் ஒழுக்கத்தைப் பரப்பிடும் அழகு ஒன்றென்றால் பார்த்ததும் காம இச்சைதனை எழுப்பிடும் அழகினை இரண்டெனலாம்! எவ்வகை…
குள்ளப்புரம் ஊராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு
தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் கோடைக் காலத்திற்கு முன்பே குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. குள்ளப்புரம் ஊராட்சிக்குற்பட்ட மருகால்பட்டி, புதூர், கோயில்புரம், சங்கரமூர்த்திபட்டி முதலான சிற்றூர்களில் இருபது நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பாத்திரங்களில் குடிநீரைப் பிடித்து வைக்கின்றனர். நீண்ட நாள் தண்ணீரைப் பாத்திரங்களில் வைத்திருப்பதால் புழுக்களும், நோய் பரப்பும் கொசுக்களும் உற்பத்தி ஆகின்றன. மேலும் இத்தண்ணீரை அருந்துவதன் மூலம் நச்சுக் காய்ச்சல், வயிற்றுக்கழிவு, கொசுக்காய்ச்சல்,…
மட்டக்களப்பில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி!
மட்டக்களப்பில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி! மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடிப் பகுதியில், கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல்போகச்செய்யப்பட்ட நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுப் பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டுள்ள குடும்பங்களில், இருபத்தொரு குடும்பங்களுக்கு தற்றொழில் முயற்சிக்கான ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது. “நெல்லு குற்றி அரிசியாக்கி விற்பனை செய்தல், இடியப்பம் அவித்து உணவகங்களுக்கு விற்பனை செய்தல்” முதலான குடிசைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் குடும்பங்களுக்கே சிறுதொகை நிதி ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது. ‘கொம்மாந்துறை கிழக்கு மாதர் வள அபிவிருத்திச்சங்க’ச் சார்பாளர் திருமதி மதனா ஒழுங்கமைப்பில் நடைபெற்ற குறித்த மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சியில், ‘நாங்கள்’…
ஆரிய நெடுங்கணக்கு தமிழைப் பின்பற்றியது
ஆரிய நெடுங்கணக்கு தமிழைப் பின்பற்றியது ஆரிய மொழிக்குரிய நெடுங்கணக்கு தமிழர் முறையைப் பார்த்துச் செய்யப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் துணிவு. தாங்கள் செல்லுமிடங்கட்குத் தக்கபடி புதிய லிபிகள் ஏற்படுத்திக் கொள்ளும் இயல்புடைய ஆரியர் தமிழர் லிபியை ஒட்டிக் “கிரந்தம்’ என்னும் பெயரில் புதியதோர் லிபி வகுத்தனர் – பரிதிமாற் கலைஞர் : தமிழ்மொழி வரலாறு
மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் புலவர்மணி இரா.இளங்குமரனார்
மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடந்த பொறியாளர் அமரர் பழ.கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒளிப்படங்கள். சிறப்புரை தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் . தரவு : கவிஞர் இரா .இரவி
வ.அ.த.ச.பேரவையின் தமிழ்விழா 2015 – FeTNA Convention 2015
ஆனி 17, ஆனி 20, 2046 / சூலை 02 – சூலை 05, 2015 http://www.fetna2015.org/#tamilvizha
திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை
திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை சார்பில் அம்மா அவர்களின் சாதனைகளை விளக்கித் துண்டறிக்கைகளைத் தேனி மாவட்டக் கழகச் செயலர் டி.டி.சிவக்குமார் வழங்கியபோது எடுத்த படம். அருகில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், தேனிமாவட்ட அம்மா பேரவைச் செயலர் வரதன், மாவட்டத் துணைச் செயலர் முருக்கோடை இராமர், பெரியகுளம் ஒன்றியச் செயலர் செல்லமுத்து, அப்துல்கபார்கான் முதலான பலர் உள்ளனர். திருவரங்கம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து…
திருவரங்கம் தொகுதியில் தேனிக்கழகத் தொண்டர்கள்
திருவரங்கம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வரவேற்ற திண்டுக்கல் தொகுதிக் கழகச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், பண்ணைக்காடு பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், பழனி அன்வர்தீன், ஆத்தூர் ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் இமாக்குலின் சார்மிலி முதலானோர் உள்ளனர். திருவரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மின்-ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரப்புரை மேற்கொள்கிறார். உடன், திண்டுக்கல் தொகுதிச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், ஒன்றியச் செயலர் ஆர்.பி.பி.சண்முகசுந்தரம், கொடைக்கானல் நகர்மன்றத்தலைவர் சிரீதர், ஒன்றியப் பெருந்தலைவர்…
இளவரசு நினைவேந்தல் ஒளிப்படங்கள்
தை 18, 2046 / பிப்.1, 2015: வேளச்சேரி, சென்னை (படங்களைச் சொடுக்கிப் பெரிதாகப் பார்க்கவும்)
