image-8727

கண்டீரா ஓர் இறும்பூதை ! : இளையவன் – செயா

மதுரைப் பாவலர் மா.கந்தையா அவர்கள் தமது மாரடைப்பில் நலந்தேறியபின் தமது மக்களுக்க்கு எழுதிய கவிதை மடல் தமிழ் உணர்வும் ஊற்றமும் பெரியாரிய உறைப்பும் மிக்க அப் பாவலர் தமிழ்த்தாய் அருளால் நலமோங்க வாழ வாழ்த்துகிறோம். - முனைவர் மறைமலை இலக்குவனார்     கண்டீரா  ஓர்  இறும்பூதை ! திருப்பாற்   கடலில்   திருஅமுதம்  எடுக்க ஒருபுறம் தேவர்கள் மறுபுறம் அசுரர்கள் மேருமலையை மத்தாக குறும்பாம்பாம் வாசுகியை பெரும்கயிறாகக் கொண்டு  பெருங்கடலைக் கடைந்தனராம் ...
image-8756

தேனி மாவட்டத்தில் அம்மாதிட்டம் – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் அம்மாதிட்டம் பயனாளிகளுக்கு உடனடிச் சான்றிதழ்   தேனிமாவட்டத்தில் உள்ள முதலக்கம்பட்டியில் அம்மாதிட்டம் நடைபெற்றது.   இத்திட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் வீ.முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் முதலக்கம்பட்டி, வைகைப்புதூர், சங்கரமூர்த்திபட்டி, இந்திரா குடியிருப்பு முதலான பகுதியைச்சேர்ந்த ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.   அவர்களுக்கு வேண்டிய சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டையில் பெயர்நீக்கல், பெயர் சேர்த்தல், உரிமை(பட்டா)மாறுதல், ...
image-8754

தேவதானப்பட்டிப் பகுதியில் களமாக மாறிவரும் பாலங்கள்

தேவதானப்பட்டிப் பகுதியில் களமாக மாறிவரும் பாலங்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் பாலங்கள் சாலைகள் ஆகியவை களமாக மாறிவருகின்றன. தேவதானப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் வானம் பார்த்தபூமிப் பகுதியில் எள், தட்டாம்பயிறு, உளுந்தம்பயறு, சோளம் போன்றவற்றைப் பயிரிட்டனர். தற்பொழுது அவை அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறுவடை செய்யப்படும் கூல(தானிய)வகைகளைப் பறித்து அவற்றைக் காயவைத்து அதன்பிறகு அடித்து ...
image-8752

தேனி மாவட்டத்தில் பேணுகையின்றிக் காணப்படும் பொதுப்பணித்துறை கட்டடங்கள்

தேனி மாவட்டத்தில் பேணுகையின்றிக் காணப்படும் பொதுப்பணித்துறை கட்டடங்கள் தேனிமாவட்டத்தில்; பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக அரசு கட்டடங்கள் மிகுதியாக உள்ளன. வைகை அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், சிறப்பு விருந்தினர்கள், அமைச்சர்கள், அரசு உயர்அதிகாரிகள் தங்குவதற்குத் தங்கும் விடுதிகள் ஏராளமாக கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடங்கள் வைகை அணையில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் ஆகும். ஒவ்வொரு கட்டடங்களிலும் விருந்தினர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளும் ...
image-8744

தேனி மாவட்டத்தில் ஆறு ஓடையாகிறது – வைகை அனிசு

தேனி மாவட்டத்தில் ஆறு ஓடையாகிறது தேனிமாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகள் வன்கவர்வினால்(ஆக்கிரமிப்பினால்) ஓடையாகி வருகிறது. தேனி மாவட்டத்தில் மேல்மங்கலம் பகுதியில் பன்றியாறு(வராகநதி) ஓடுகிறது. இந்தஆறு மேற்குமலைத்தொடர்ச்சியில் உற்பத்தி ஆகிப் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம் வழியாக குள்ளப்புரம் வரை செல்கிறது. இந்த ஆற்றை நம்பி ஏராளமான தென்னந்தோப்புகளும் வயல்களும் உள்ளன. மேலும் மேல்மங்கலம். செயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் ஊராட்சிகள் தங்கள் ...
image-8720

எஃகுத்தமிழர் இலக்குவனார் – பொன்.செல்வகணபதி

எஃகுத்தமிழர் இலக்குவனார்   இயற்பெயரிலேயே இலக்கு உடைய எஃகுத் தமிழர் இலக்குவனார்! அன்னைத் தமிழ்மீது ஆசை வைத்தவர் அதைக் காப்பதற்கென்றே மீசை வைத்தார்! பாவின் திறத்தாலே பைந்தமிழ் காத்தவர் பாவேந்தர்! இவரோ நாவின் திறத்தாலே நற்றமிழ் காத்த நாவேந்தர்! · * * * * * பிழைக்கத் தமிழ் படித்தோர் உண்டு தமிழ் படித்துப் பிழைப்பவரும் உண்டு! இவரோ தமிழ் தழைக்கத் தமிழ் படித்த தமிழர்! தமிழ் தழைக்கவே தலை நிமிர்ந்த தலைவர்! வேலை செய்யாமலிருக்க வேலை தேடுவோர் உண்டு! இவரோ வேலை செய்வதற்காகத் தம் வேலை விட்டவர்! தமிழ் வேலை செய்யத் தம்வேலை ...
image-8740

கல்வியும் மருத்துவமும் மாணவர்களின் இரு கண்கள்

கல்வியும் மருத்துவமும் மாணவர்களின் இரு கண்கள்    தேசிய நூலக விழாவில் முன்னாள் மருத்துவத் துணை இயக்குநர் பேச்சு                வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம்,சிரீகிருட்டிணா பயிற்சி மையம், எசு.ஆர்.எம்.இன்போடெக் கணிணிப் பயிற்சி நிறுவனமும் இணைந்து கார்த்திகை 7, 2045 / நவம்பர் 23 அன்று நடத்திய தேசிய நூலக வார விழாவின் ...
image-8718

பேராசிரியர் நமக்கு வழங்கும் நெறியுரைகள்

பேராசிரியர் நமக்கு வழங்கும் நெறியுரைகள் நாம் பேராசிரியர்போல் போராளியாகத் திகழாவிட்டாலும் உரிமையுள்ள தமிழ் மாந்தராகவாவது வாழ வேண்டுமல்லவா? அதற்குப் பேராசிரியரின் பின்வரும் அறிவுரை களை அவர் நமக்கு இட்ட கட்டளைகளாகக் கொண்டு ஒழுக வேண்டும்: மொழியைக்காத்தவர்விழியைக்காத்தவர்! மொழியைச்சிதைத்தவர்விழியைச்சிதைத்தவர்! மொழிக்கும்விழிக்கும்வேற்றுமைஇல்லை! மொழியே விழி விழியே மொழி என்று கிளர்ச்சி கொள்ளுங்கள். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று அறைகூவுங்கள். தமிழ்வாழ்க!தமிழ்வாழ்க! தமிழ்ஓங்குக!தமிழ்உயர்க! என்றுவாழ்த்துங்கள் தமிழில்எழுதுக!தமிழில்பேசுக! தமிழில்பெயரிடுக!தமிழில்பயில்க! என்றுமுழங்குங்கள். மொழிவாழ்வுக்குமுயற்சிசெய்யுங்கள்... உங்கள்முயற்சிவாழ்க! தமிழ்வாழ்ந்தால்தமிழர்வாழ்வர்! தமிழர்வாழ்ந்தால்தமிழ்நாடுவாழும்! தமிழ்வாழ்வேதமிழர்வாழ்வு! (தரவு : புலவர்மணி இரா.இளங்குமரன்: பக்கம் 37: ...
image-8737

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட 50 ஆண்டு கடைப்பிடிப்பு: சென்னைக் கலந்தாய்வு - விவரங்கள் இந்தித் திணிப்புக்கு எதிரான 1965 மாணவர் போராட்டத்தின் 50 ஆம் நினைவு ஆண்டை ஒரு மொழி உரிமை ஆண்டாக அறிவித்துத், தொடர்ச்சியாகப் பல கோரிக்கை நிகழ்வுகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என்று மொழி உரிமைச் செயல்பாட்டாளர்களும் இயக்கங்களும் நவம்பர் 30, 2015 ஞாயிறு ...
image-8629

இன்றும் இருக்கிறார் இலக்குவனார் – ஈரோடு தமிழன்பன்

இன்றும் இருக்கிறார் இலக்குவனார்   வைகை இலக்குவனார் வாழ்ந்தவரை தட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது தமிழ் வெள்ளத்தால் மதுரைத் தென்றல் அவரிடம் மாணவராய் இருந்து புயலாவ தெப்படி என்று பயின்று கொண்டது கண்ணகி எரித்த நெருப்பின் மிச்சத்தில் இந்தித் திணிப்புக்கு எரியூட்டியவர் இலக்குவனார் இயற்றமிழ்மேல் இசைத்தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் பொறாமை ஏற்பட்டதுண்டு! இயலுக்குக் கிடைத்ததுபோல் ஓர் இலக்குவனார் கிடைக்கவில்லையே என்று! ஏகபோகம் எங்குமே எதிர்க்கப்பட வேண்டியதுதான்! ஆனால் புலமை ஏகபோகத்தை எப்படி எதிர்ப்பது? பொழிப்புரை பதவுரைப் புலவரல்லர் அவர், விழிப்புரை உணர்வுரைப் புலவர்! சங்கப் புலவர் நெஞ்சின் சாரம் இங்கு இலக்குவ மின்சாரம்! கழிசடைப் புலவர்கள் மத்தியில் கந்தகக் கொள்ளி அவரை வழிபட்டே சூரியனும் வெப்பத்தைத் தப்பின்றி உச்சரிக்கக் கற்றுக் கொண்டான்! தொல்காப்பியத்தில் அதிரடிப் புலமை நடவடிக்கை அவர் மேற்கொண்டதால்... அன்னைத் தமிழின் பாதுகாப்பு அகழி இன்னும் அதிகம் ஆழமாயிற்று! பொய்யும் வழுவும்... இலக்குவ ஐயர் காலில் விழுந்தன. அந்த நாள் ஆரியப் படை ...
image-8685

செம்மொழி இதழ், சிங்கப்பூர் : ஆவணி-புரட்டாசி 2045

அன்பிற்கினிய செம்மொழி வாசகர்களுக்கு வணக்கம். தமிழவேள் சமூக நற்பணி மன்றத்தின்சமூக இலக்கிய இதழான செம்மொழியை (சூலை-செப். 2014) உங்களுக்கு வாசிக்கத்தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். செம்மொழி இதழை www.semmozhi.net  இணையத்தள முகவரியிலும் வாசிக்கலாம். அன்புடன் எம்.இலியாசு ஆசிரியர், செம்மொழி செயலர், தமிழவேள் நற்பணி மன்றம் HP: 0065-91894649 sangam_elias@yahoo.com.sg 
image-8680

கவி ஓவியா இலக்கியமன்றம், திறனாய்வுத் திருவிழா – மன்னை பாசந்திக்குப் பாராட்டு

கவி ஓவியா இலக்கியமன்றம் திறனாய்வுத் திருவிழா 'சிறுதுளியில் சிகரம்' நூலாசிரியர் மன்னை பாசந்திக்குச் சாகித்ய அகாதமியைச் சேர்ந்த முனைவர் இராமகுருநாதன்  பாராட்டிதழ்  வழங்கல்  நாள் :  ஐப்பசி 30, 2045 நவம்பர் 16, 2014 சென்னை