பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை ஒதுக்குதல் வேண்டும்-சி.இலக்குவனார்
பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை ஒதுக்குதல் வேண்டும் சிற்றினம்-சிறிய இனம். ஒழுக்கத்தாலும் அறிவாலும் குறைந்திருப்போரை இனமாகக் கொள்ளுதல் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ளோர்க்கு நன்மை பயவாது. பதவியுயரச் செல்வமும் செல்வாக்கும் உயரும். செல்வம் உயர உயர வீணரும், வெற்றுரைகாரரும், சூதாடுவோரும் வலியவந்து சேர்வர். அவர்களை அகற்றாது நட்பாகக் கொள்ளின் ஆளும் தலைவர் அல்லற்பட்டு அழிய வேண்டியதுதான். பொறுப்புகளும் கடமைகளும் மிகமிக, ஒவ்வொன்றையும் நேரில் ஆய்ந்து நிறைவேற்றுதல் இயலாது. சுற்றியிருப்போர் சொல்லும் கூற்றை நம்புதல் வேண்டியவரும். அவர் சொல்லும் கூற்று உண்மை வயப்பட்டதாயின், யார்க்கும்…
ஆளும் தலைவர்க்கு வலிமை மக்கள் அன்பும் ஒத்துழைப்பும் – சி.இலக்குவனார்
ஆளும் தலைவர்க்கு வலிமை மக்கள் அன்பும் ஒத்துழைப்பும் ஆளும் தலைவர்க்கு வலிமையாவது மக்கள் அன்பும் ஒத்துழைப்பும் ஆகும். மக்கள் அன்பைப் பெற்றதலைவர் பகைவரை எளிதில் வெல்வர். மக்கள் அன்பைப் பெற விரும்பினால், கடுஞ்சொல் அற்றவராய் இருத்தலோடு நேர்மையாகவும், யாவரிடமும் ஒத்த அன்புடையவராகவும் ஒழுகுதல் வேண்டும். உறவினர்க்கு ஒரு நீதியும் உறவினர் அல்லாதார்க்கு ஒரு நீதியும் வழங்குதல் கூடாது. நெறிமுறை கடந்து யாவர் செல்லினும், அவரை விருப்பு வெறுப்பின்றி ஒறுத்து நன்னெறிப்படுத்துதல் வேண்டும். இல்லையேல் மக்கள் வெறுப்பர். மக்கள் வெறுப்பின், மாபெரும் தலைவரும் தாழ்ச்சியுற…
அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி-சி.இலக்குவனார்
அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சி ஆட்சி புரியும் தலைமைப் பொறுப்பில் உள்ளோர். முறை வேண்டுவார்க்கும் குறை வேண்டுவார்க்கும் காட்சிக்கு எளியராய் இன்முகம் உடையராய் இருத்தல் வேண்டும். பதவியின் உயர்வால் மக்களை அச்சுறுத்தும் நிலையில் இருத்தல் கூடாது. அங்ஙனம் இருப்பின் பேயைப்போல் மக்களால் அவரும் அஞ்சப்படுவர். மக்கள் உளத்தில் அன்பை வளர்த்து ஆளுதல் வேண்டுமேயன்றி, அச்சத்தைப் புகுத்தி ஆளமுயலுதல் கூடாது. அச்சத்தின் துணையால் ஆளப்படும் ஆட்சி பேயாட்சிதான் ஆகும். மக்களாட்சி முறையில் பதவிகிட்டும் வரையில் மக்களோடு நெருங்கிப் பழகுவதும், பதவிகிட்டிய பின்னர்…
மக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர் – சி.இலக்குவனார்
மக்கள் வெறுப்பைப் பெற்றோர் விரைவில் அழிய வேண்டிய நிலையை அடைவர் ஆளும் நிலையில் இருப்போர், மக்கள் விரும்பாத கொடுஞ் செயல்களைப் புரியின், “நம்மை ஆள்கின்றவர் கொடியர்” என்று மக்களால் வெறுக்கப்படுவர். மக்கள் ஆட்சியில் மக்களால் வெறுக்கப்படுவோர் ஆளும் நிலையிலிருந்து அகற்றப்படுவர். சில நாடுகளில், ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டோர், ஒரு குறிப்பிட்ட காலம் வரையில், ஐந்தாண்டோ ஆறாண்டோ பதவியில் இருக்கலாம். மறுதேர்தலில் மக்கள் மதிப்பிழந்து வீழ்ச்சியடைவர். சில நாடுகளில் ஆளும் காலத்திலேயே கொடியோரை வேண்டாம் என்று விலக்கும் முறைமை இருக்கின்றது. ஆதலின் ஒரு குறிப்பிட்ட காலம்…
அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் – சி.இலக்குவனார்
அரசியல் தொண்டில் ஈடுபடுபவர்கள் உள்ளத்தில் பதிக்க வேண்டிய குறள் அற்றேம் என்று அல்லற் படுபவோ? பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர் பெற்றேம்-என்றுஅரசியல் பதவிகளை அடைந்து விட்டோம் என்று கருதி, ஓம்புதல்-அவற்றைத் தம்மினின்றும் நீங்காமல் காத்தலை, தேற்றாதவர் – தெளிந்து அறியாதவர், அற்றேம் என்று – அவை தம்மைவிட்டு நீங்கிய காலத்தில் இழந்து விட்டோம் என்று, அல்லல்படுபவோ – துன்பப்படுவார்களோ? துன்பப்பட்டார். அரசியல் பதவிகளைப் பெற்றுப் பணியாற்றுங்கால் உண்டாகும் இடர்ப்பாடுகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று முதல் ஒன்பது குறட்பாக்களிலும் கூறி, அப்…
திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 107. இரவு அச்சம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 108. கயமை மானுட அறங்களைப் பின்பற்றாத கீழ்மை மக்களது இழிதன்மை. மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன ஒப்பாரி யாம்கண்ட(து) இல். மக்கள்போல், தோன்றும் கயவரோடு ஒப்பாவார், எவரும் இலர். நன்(று)அறி வாரின், கயவர் திருஉடையார்; நெஞ்சத்(து) அவலம் இலர். நல்லாரைவிடக் கீழோர் பேறுஉடையார்; ஏன்எனில், கீழோர் கவலைப்படார். தேவர் அனையர் கயவர்,…
திருக்குறள் அறுசொல் உரை 107. இரவு அச்சம் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 106. இரவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 107. இரவு அச்சம் உழைக்கும் திறத்தர், மானத்தர், பிச்சை எடுக்க அஞ்சுதல். கரவா(து), உவந்(து)ஈயும், கண்அன்னார் கண்ணும், இரவாமை கோடி உறும். மறைக்காது, மகிழ்ந்து கொடுப்பாரிடமும், பெறாமை கோடிப் பெருமை. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக, உல(கு)இயற்றி யான் பிச்சையால்தான் வாழ்வுஎன்றால், ஆட்சியான், அலைந்து திரிந்து கெடட்டும். “இன்மை இடும்பை, இரந்து,தீர் வாம்”என்னும்…
திருக்குறள் அறுசொல் உரை 106. இரவு : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 105. நல்குரவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 106. இரவு உழைப்புத் திறன்இல்லார், பொதுநல உதவியாளர் கேட்டுப் பெறலாம். இரக்க இரத்தக்கார்க் காணின்; கரப்பின், அவர்பழி தம்பழி அன்று. தகுதியாரிடம் உதவி கேட்க; மறைத்தால், மறைத்தார்க்கே, பழி. இன்பம் ஒருவற்(கு) இரத்தல், இரந்தவை துன்பம் உறாஅ வரின். துன்பம் இல்லாமல் வருமானால், கேட்டுப் பெறுதலும் இன்பம்தான். கரப்(பு)இலா நெஞ்சின் கடன்அறிவார்…
திருக்குறள் அறுசொல் உரை 105. நல்குரவு : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 104 உழவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 105. நல்குரவு உணவு,உடை, உறைவிடம் போன்றவை எதுவும் இல்லாத ஏழ்மைநிலை. இன்மையின் இன்னாத(து) யா(து)….?எனின், இன்மையின் இன்மையே, இன்னா தது. ஏழ்மையைவிடக், கொடிது யாது….? ஏழ்மையே எழ்மையினும் கொடிது. இன்மை எனஒரு பாவி, மறுமையும், இன்மையும் இன்றி வரும். வறுமைக் கொடும்பாவி, எப்பிறப்பிலும் தொடரும்; தொடர்ந்து வருத்தும். தொல்வரவும், தோலும் கெடுக்கும், தொகைஆக, …
திருக்குறள் அறுசொல் உரை – 104. உழவு : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 104. உழவு உலகையே வாழ்விக்கும், உயிர்த்தொழில் உழவின் உயர்வு, இன்றியமையாமை. சுழன்றும் ஏர்ப்பின்ன(து) உலகம், அதனால், உழந்தும் உழவே தலை. உலகமே உழவின்பின்; துயர்தரினும், தலைத்தொழில் உழவையே செய். உழுவார் உலகத்தார்க்(கு) ஆணி,அஃ(து) ஆற்றா(து) எழுவாரை எல்லாம் பொறுத்து. எல்லாரையும் தாங்கும் உழவர்; உலகத்தேர்க்கு அச்சுஆணி ஆவர். உழு(து)உண்டு வாழ்வாரே வாழ்வார்…
திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 102. நாண் உடைமை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 103. குடி செயல் வகை குடும்பத்தை, குடியை உயர்த்துவாரது செயற்பாட்டு ஆளுமைத் திறன்கள். ”கருமம் செய”ஒருவன், ”கைதூவேன்” என்னும் பெருமையின், பீ(டு)உடைய(து) இல். ”குடும்பக் கடமைசெயக் கைஓயேன்” என்பதே பெரிய பெருமை. ஆள்வினையும், ஆன்ற அறிவும், எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. நீள்முயற்சி, நிறைஅறிவு சார்ந்த தொடர்செயல் குடியை வாழ்விக்கும். “குடிசெய்வல்” என்னும்…
திருக்குறள் அறுசொல் உரை – 102. நாண் உடைமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 102. நாண் உடைமை இழிசெயல் வழிவரும் அழியாப் பழிக்கு வெட்கி,அது ஒழித்தல். கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. பழிச்செயலுக்கு வெட்குவதே, வெட்கம்; மகளிர்தம் வெட்கம், வேறு.. ஊண்,உடை, எச்சம், உயிர்க்(கு)எல்லாம் வே(று)அல்ல; நாண்உடைமை மாந்தர் சிறப்பு. உணவு,உடை, பிறஎல்லாம் பொது; நாணம் மக்களுக்குச் சிறப்பு. ஊனைக் குறித்த…