பூங்கொடி 10  – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி

(பூங்கொடி 9  – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை ஊரார் பழிமொழி இசைத்தொழில் புரியும் இவள் இத் தொழிலை வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல் ? 35செருக்கினள் கொல்லோ செல்வம் மிகவாய்ப் பெருக்கினள் கொல்லோ ? என்றுரை பேசி ஏளனம் செய்தனர் என்ற கேன்மொழிக்கு அருண்மொழி அலருக்குக் கூசாமை அருண்மொழி நகைத்தனள் அருளினள் சிலசொல்; பொதுப்பணி புரிவோர் புகழ்வும் இகழ்வும் 40 நினைத்திடல் வேண்டும் ஒருநிகர் எனவே; ஆருயிர்த் தோழி! அந்நாள் வடிவேற் பேருடைச் செம்மலைப் பேணிஎன் காதற்…

பூங்கொடி 9  – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை

(பூங்கொடி 8  – கவிஞர் முடியரசன்: பழியுரை காதை: வஞ்சியின் கவலை- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை அருண்மொழியின் இசைப்புலமை  செவ்விய இசைநூல் இவ்வுல குள்ளன அவ்வள வும்பயில் அறிவினள்; பிறமொழி 20 இசைபல முயன்று வசையற வுணர்ந்து நசையுடன் ஆய்ந்து நம்தமிழ் இசைக்கே ஆக்கம் தந்தவள்; அரியதோர் இசைப்புனல் தேக்கிய கலைக்கடல்; தெள்ளிய இசையால் உலகை வென்றவள்; உயர்ந்தவள் குரலால் 25 குழலும் யாழும் கொட்டம் அடங்கின; பாடும் முறையாற் பாவை பாடுவள்; ஆடாள், கோணாள், அங்கக் குறும்புகள் நாடாள், அந்த நல்லிசைச்…

பூங்கொடி 8  – கவிஞர் முடியரசன்: பழியுரை காதை: வஞ்சியின் கவலை

(பூங்கொடி 7  – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக- தொடர்ச்சி) 2. பழியுரை காதை வஞ்சியின் கவலை முத்தமிழ் காக்கும் முதற்பணி பூண்ட நத்தும் வடிவேல் நன்மணம் புணர்ந்த பத்தினித் தெய்வம் பாங்குயர் அருண்மொழி இத்தரை உய்ய ஈன்றருள் மகளாம் 5 தத்தை பூங்கொடி தாயொடு மங்கலத் தைத்திரு நாளில் தமிழிசை வழங்க வாராத் துயரால் மயங்கிய வஞ்சி சோரா  நின்றனள் ; தன்மகட் டோழி தேன்மொழி யைக்கூஉய்த் திருநகர் கூறும் 10 தீமொழி அருண்மொழிக் குரையெனச் செப்பினள், தேன்மொழி செல்லல் அவ்வுயிர்த் தோழியும் அருண்மொழி…

பூங்கொடி 7  – கவிஞர் முடியரசன்: ஒற்றுமை பரப்புக

(பூங்கொடி 6  – கவிஞர் முடியரசன்: விழாவயர்காதை தொடர்ச்சி) ஒற்றுமை பரப்புக  எத்திசை நோக்கினும் எழுப்புக மேடை தத்தங் கொள்கை தவிர்த்து நாடும் மொழியும் வளம்பெற முன்னுவ தொன்றே வழியெனக் கருதி வழங்குக பேருரை முத்தமிழ் ஒலியே முழங்குக யாண்டும் சிறுசிறு பகையைச் சிங்தைவிட் டகற்றுக ஓரினம் காமென உன்னுக பெரிகே. வாழிய வாழிய காரினம் மழையைக் கரவா தருள்க பசிப்பிணி வறுமை பகைமை நீங்கி வசைக்கிலக் கிலதாய் வளர்க அரசியல் செல்வங் கல்வி சிறந்துமிக் கோங்குக வாழிய பொங்கல் வாழிய திருநாள்’  என்னுமிவ்…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6 தொடர்ச்சி

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி 6: தொடர்ச்சி உதாரன்: அரசனுக்குப் பின்னிந்ததூய நாட்டைஆளுதற்குப் பிறந்தவொருபெண்ணைக் கொல்லஅரசனுக்கோ அதிகாரம்உங்க ளுக்கோஅவ்வரசன் சட்டத்தைஅவம தித்தான்சிரமறுத்தல் வேந்தனுக்குப்பொழுது போக்கும்சிறியகதை நமக்கெல்லாம்உயிரின் வாதைஅரசன்மகள் தன்னாளில்குடிகட் கெல்லாம்ஆளுரிமை பொதுவாக்கநினைத்தி ருந்தாள் மோனை: புறம்பேசிப் பொல்லாங்குபுரிவான் தானும்பொருந்திமனத் துயர்களையும்நண்ப னாகான்மறம்பேசி மனத்திலாண்மையில்லா தானும்மங்கையரின் காதலிலேவெற்றி கொள்ளான்திறம்பேசுந் திருட்டுவழிச்செல்வன் தானும்செய்கின்ற பூசனையால்பக்த னாகான்அறம்பேசும் அருந்தமிழைக்காவா தானும்அற்றத்தை மறைக்கின்றமனித னாகான் அறுசீர் விருத்தம்  எண்சீர்…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 5 காட்சி : 6கொலைக்களம் – அதிகாரிகள், கொலைஞர், உதாரன், அமுதவல்லி, பொதுமக்கள்கலி விருத்தம் அதிகாரி: சாவிலும் பிரியா இன்பம் காணஆவிநீர் துறக்குமுன் அந்நாள் தொட்டுப்பூவுலக மரபினைப் போற்றும் படியாய்மேவுஞ் சொல்சில மேன்மையீர் சொல்வீர் எண்சீர் விருத்தம் உதாரன் : பேரன்பு கொண்டோரேபெரியோ ரேஎன்பெற்றதாய் மாரேநல்லிளஞ்சிங் கங்காள்நீரோடை நிலக்கிழிக்கநெடும ரங்கள்நிறைந்தபெருங் காடாகப்பெருவி லங்குநேரோடி வாழ்ந்திருக்கப்பருக்கைக் கல்லின்நெடுங்குன்றில் பிலஞ்சேரப்பாம்புக் கூட்டம்போராடும் பாழ்நிலத்தைஅந்த…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 5

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 4 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி : களம் : 5 காட்சி : 5அரண்மனை – அரசனும் அமைச்சனும்அறுசீர் விருத்தம் அமைச்சன் : வாடிய முல்லையைக் கண்டேவாய்த்தநற் றேரங்கே நிறுத்திநீடிய புகழ்கொண்ட பாரிநிறுவிய தமிழ்மரபில் வந்தோய்கூடிய காதலரைக் கொன்றேகொடும்பழி ஏற்றிடலும் நன்றோதேடிய பெருமையெலாந் தீரத்திக்கெலாம் பழிவந்து சேரும் எண்சீர் விருத்தம் அரசன்: தமிழ்காக்கும் முனைப்பினிலேதடையேது மில்லைதமிழ்ப்புலவோர் நிலைகாக்கமறுப்பேது மில்லைஇமிழ்கடல்சூழ் புவியினுக்கேஉயிராவா னென்றேஇறையாகும் மன்னவரைச்சொன்னவரும் நல்லதமிழ்காத்த புலவர்தாம்அவ்வுரையுந் தீதோஅடிமரத்தை நுனியிருந்துவெட்டுதல்நன் றாமோஉமிழ்நீராய் மன்னர்குலம்வீழுமாயின்…

புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 3

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5   காட்சி : 2 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 5 காட்சி : 3அரசவை. அரசன், அமைச்சர் முதலியோர்.உதாரன் வீரர் சூழ நிறுத்தப்பட்டிருக்கிறான்.சிந்து கண்ணி அரசன் : கொற்றவன் பெற்ற குலக்கொடியை – கவிகற்க உன்பால் விடுதேன் – அடக்குற்றம் புரிந்தனையா இல்லையா இதைமட்டும் உரைத்துவிடுவெற்றி எட்டுத்திக்கும் முற்றிலுஞ் சென்றுமேவிட ஆள்பவன் நான் – அடஇற்றைக்கு நின்தலை அற்றது -மற்றென்னைஎன்னென்றுதான் நினைத்தாய் உதாரன் : மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் – முகில்வார்க்கும் மழை நாடா…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 2

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5   காட்சி : 1 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 2 மோனைப்புலவன் – அல்லி அகவல் அல்லி : ஏனையா புலவரே என்ன வியப்பிது   கன்னிநான் வருதலைக் கண்ணாற் கண்டும்   புன்னை நிழலில் பொருள்தே டுகின்றாய்   தின்னுங் கருவாடு திகட்டுமோ பூனைக்கு   கன்னியென் பார்வை கசந்ததோ நினக்கு           மோனை : அய்யகோ அத்தை மகளே அல்லியே…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4   காட்சி : 5 தொடர்ச்சி) களம் : 5 காட்சி : 1 நாற்சந்தியில் பொதுமக்கள் அறுசீர் விருத்தம் முதியோன் 1 :           மண்ணாள்               வேந்தன்                  குலக்கொடிக்கு                                       மறவா           வண்ணம்                 யாப்புரைக்க                              எண்ணி                   யழைத்தார்               சூதாக                                       இளமைப்                பருவந்          தோதாக                              பெண்ணாள்              கவியின்                  தமிழாலே                                       பிணையல்               கொண்டாள்              அன்பாலே                              நண்ணும்                 அவையில்                இற்றைநாள்                                       நல்ல                      முடிவைக்                காண்குவமோ முதியோன் 2:…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4  காட்சி : 5

(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4   காட்சி : 4 தொடர்ச்சி) களம் : 4  காட்சி : 5 கவிஞனும், இளவரசியும் காதற்பூங்காவில் உலவுகின்றனர். இறுதிக்கட்டத்தில் மன்னன் மறைந்திருந்து காணுகிறான். இசைப்பாடல் அவன் :                  வானத்து                           முழுநிலா                                                 வஞ்சியுன்                          பால்வடியும்                                       தாமரை                             முகம் நாணி                                                 தயங்குதடி                         வான்முகிலில்                                       நெஞ்சையே             கருப்பாக்கி                                                 நிலவரை                           போட்டொளிக்கும்                                       கருப்புப்                            பணக்காரர்                                                 கனவில்                            பிதற்றுதலாய்                                       வஞ்சியே                          என்மனது                                                 வாட்டுந்                            துயராலே                                       பஞ்சினும்                         மெலிதாகிப்                                                 பதைத்துப்                        …

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4  காட்சி : 4

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 தொடர்ச்சி) அரசன் அமர்ந்திருக்க – தோழியர் வருகின்றனர். களம் : 4  காட்சி : 4 பஃறொடை வெண்பா அல்லி :         குடிமக்கள்                         போற்றும்                                       முடிவேந்து                        வாழ்க                              அடிபணிவார்            காக்கும்                                       அருள்வேந்து            வாழிய                              நாட்டின்                            ஒளிவிளக்காம்                                        நங்கை                    இளவரசி                              ஏட்டி                               லெழுதவொணா                                       இன்பமுடன்            வாழியவே அரசன் :         மங்கையீர்                         நீங்கள்                                       மதிக்குந்                           தலைவிதான்                              பங்கமில்                           யாப்பைப்…