இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! – பெரியார்
இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! திருக்குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். தந்தை பெரியார் ஈ வே. இராமசாமி
தமிழ்நாட்டில் வேரூன்றிய கருத்துகளின் தொகுப்பே திருக்குறள் – சுவைட்சர்
தமிழ்நாட்டில் வேரூன்றிய கருத்துகளின் தொகுப்பே திருக்குறள் அன்பு சமூக சேவையாக வளர்ந்து சிறக்க வேண்டும் எனும் கருத்து திருக்குறளிலேதான் வலியுறுத்தப்படுகிறது. நெடுங்காலமாகத் தமிழ்நாட்டிலே வேரூன்றி வளர்ந்த கருத்துகளைத் திருவள்ளுவர் குறள் வெண்பா வடிவில் எடுத்துரைத்தார். “செயல் மூலமாகவும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய இயலுகிறதே! அதற்காகச் செயலில் ஈடுபடு’ என்பது வள்ளுவர் இடும் கட்டளையாகும். – ஆல்பர்ட்டு சுவைட்சர்: இந்திய எண்ணமும் இதன் மேம்பாடும்: பக்கம் 198(Albert Schweitzer, Indian Thought and its Development)
குறள்மலைச்சங்கத்தின் திருக்குறள் கருத்தரங்கம், நூல் வெளியீடு
தை 24, 2047 / பிப்.07, 2016 தரமணி, சென்னை
1330 அடி நீளத் திருக்குறள் பதிப்பு
மார்கழி 25, 2046 / சனவரி 10, 2015 காலை 10.00, சென்னை தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழ் ஆன்றோர் அவை (திருவள்ளூர்)
திருக்குறள் அறுசொல் உரை – 095. மருந்து : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 094. சூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 095. மருந்து நோய்கள் வரும்முன் காக்கும், வந்தால், நீக்கும் மருத்துவம். மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. உடல்சூடு, குளிர்ச்சி, காற்று, நிறையினும், குறையினும் நோயே. ”மருந்(து)”என வேண்டாஆம் யாக்கைக்(கு), அருந்திய(து), அற்றது, போற்றி உணின். “மருந்து”என, வேண்டாம், உணவு முழுதும் செரித்தபின் உண்டால். அற்[று]ஆல் அள(வு)அறிந்(து) உண்க; அஃ(து)உடம்பு பெற்றான், நெடி(து)உய்க்கும் ஆறு….
திருக்குறள் அறுசொல் உரை – 094. சூது : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 093. கள் உண்ணாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 094. சூது பரம்பரைப் புகழ்,பண்பு, மதி,அன்பு பொருள்கெடுக்கும் சூதை விடு. வேண்டற்க, வென்(று)இடினும் சூதினை; வென்றதூஉம், தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று. மீன்விழுங்கிய தூண்டில் இரைதான் சூதில் வருவெற்றி; வேண்டாம். ஒன்(று)எய்தி, நூ(று)இழக்கும் சூதர்க்கும், உண்டாம்கொல் நன்(று)எய்தி, வாழ்வ(து)ஓர் ஆறு? ஒன்றுபெற்றுப், பலஇழக்கும் சூதாடிக்கும் நன்றுஆம் வாழ்வு உண்டாமோ? உருள்ஆயம் ஓயாது கூறின், பொருள்ஆயம், போஒய்ப் புறமே படும். ஓயாது…
திருக்குறள் அறுசொல் உரை – 093. கள் உண்ணாமை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 092. வரைவின் மகளிர் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 093. கள் உண்ணாமை நல்உணர்வு, உடல்நலம், செல்வம் அழிக்கும் கள்ளைக் குடிக்காமை. உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும் கள்காதல் கொண்(டு)ஒழுகு வார். கள்ளைக் காதலிப்பார் எப்போதும் அஞ்சப்படார்; புகழையும் இழப்பார். உண்ணற்க கள்ளை; உணில்உண்க, சான்றோரால் எண்ணப் படவேண்டா தார். கள்ளைக் குடிக்காதே; பெரியார்தம் மதிப்பு வேண்டாம்எனில், குடிக்க. ஈன்றாள் முகத்தேயும், இன்னா(து)ஆல், என்மற்றுச்…
திருக்குறள் அறுசொல் உரை – 092. வரைவின் மகளிர் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 092. வரைவின் மகளிர். பொருள்விருப்பால் மட்டுமே, பலரை விரும்பும் திருமணம்ஆகா மகளிர். அன்பின் விழையார், பொருள்விழையும் ஆய்தொடியார், இன்சொல் இழுக்குத் தரும். அன்புஇன்றிப் பொருள்கள் விரும்பும் பரத்தையின் இன்சொல் இழிவுதரும். பயன்தூக்கிப், பண்(பு)உரைக்கும் பண்(பு)இல் மகளிர், நயன்தூக்கி, நள்ளா விடல். பெறுபயன் ஆய்ந்து பண்போடு பேசும், பரத்தையரை நெருங்காதே. பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்(டு)அறையில்…
திருக்குறள் அறுசொல் உரை – 091. பெண்வழிச் சேறல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் மிகுகாமத்தால் அடிமையாகி, மனைவியின் மொழிவழிச் சென்று அறம்மறத்தல். மனைவிழைவார், மாண்பயன் எய்தார்; வினைவிழைவார், வேண்டாப் பொருளும் அது. பெண்வழி நடப்பார், பயன்அடையார்; நல்செயல் வல்லார், விரும்பார். பேணாது பெண்விழைவான் ஆக்கம், பெரியதோர் நாணாக நாணுத் தரும். மனைவிக்கு அடிமை ஆகியார் வளநலம், வெட்கப்படத் தக்கவை. இல்லாள்கண் தாழ்ந்த இயல்(பு),இன்மை; எஞ்ஞான்றும், …
திருக்குறள் அறுசொல் உரை – 090. பெரியாரைப் பிழையாமை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 089. உள்பகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை பெரியார்சொல் கேட்பார், பிழைசெய்யார் பெரியார்சொல் கேளார், பிழைசெய்வார். ஆற்றுவார் ஆற்றல், இகழாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. செயல்வல்ல பெரியாரை இகழாது, மதித்துச் செயல்படல் சிறப்பு. பெரியாரைப் பேணா(து) ஒழுகின், பெரியாரால் பேரா இடும்பை தரும். பெரியார்தம் சொல்வழி நடவாமை, பெயராப் பெரும்துன்பம் தரும். கெடல்வேண்டின், கேளாது செய்க; அடல்வேண்டின், …
திருக்குறள் அறுசொல் உரை – 089. உள்பகை: வெ. அரங்கராசன்
அதிகாரம் 088. பகைத் திறம் தெரிதல் தொடர்ச்சி 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 089. உள்பகை வெளியில் தெரியாமல், மனத்துள்ளே ஒளிந்துஇருந்து, அழிக்கும் கொடும்பகை நிழல்நீரும், இன்னாத இன்னா; தமர்நீரும், இன்னாஆம் இன்னா செயின். நோய்தரும் நிழல்நீரும், தீமைதான்; நோய்தரும் உறவும், தீமைதான். வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக, கேள்போல் பகைவர் தொடர்பு. வெளிப்பகைக்கு அஞ்சாதே; உறவுபோல் நடிக்கும் உள்பகைக்கு அஞ்சு. உள்பகை அஞ்சித் தன்காக்க, உலை(வு)இடத்து,…
திருக்குறள் அறுசொல் உரை – 088. பகைத் திறம் தெரிதல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 087. பகை மாட்சி தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 088. பகைத் திறம் தெரிதல் பகைவரது பலவகைத் திறன்களை ஆராய்ந்து தக்கவாறு நடத்தல். பகைஎன்னும் பண்(பு)இல் அதனை, ஒருவன் நகையேயும், வேண்டல்பாற்(று) அன்று. பகைஆக்கும் பண்புஇல்லா எதுவும், வேடிக்கை என்றாலும் வேண்டாம். வில்ஏர் உழவர் பகைகொளினும், கொள்ளற்க, சொல்ஏர் உழவர் பகை. வீரரைப் பகைத்தாலும், சொல்திறப் பேரறிஞரைப் பகைக்க வேண்டாம். ஏமுற் றவரினும் ஏழை, தனியனாய்ப்,…