கண்ணதாசன் 88ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா

 கவியரசு கண்ணதாசன் 88ஆம் பிறந்த நாள் விழாவும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் (பம்மல்) – 24ஆம் ஆண்டு விழாவும் தி.நகர் – வாணிஅரங்கத்தில்(மஃகாலில்) ஆனி 06, 2046 / சூன் 21,2015 ஞாயிறன்று நடைபெற்றன. திருவாட்டி வாணி செயராமிற்குக் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.  இயக்குநர்கள் சுப.(எசு.பி.)முத்துராமன், பி.வாசு, ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.  விழா ஏற்பாடு – எம்.கே.மணி,   காவிரிமைந்தன்,   அ.நாகப்பன்,   ஏ கே.நாகராசன்,   மன்னார்குடி மலர்வேந்தன் மற்றும் பலர். (படங்களைப் பெரிய அளவில் பார்க்கப் படங்கள் மேல்…

இந்திய நாகரிகம் என மொழிவன எல்லாம் தமிழர் நாகரிகங்களையே! – தனிநாயக அடிகள்

  இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்கினால் மாக்சுமுல்லர், வின்றர்னிட்சு போன்றவர்கள் வட மொழி இலக்கியத்தின் பெருமையையே விரித்துக் கூறுவர். தமிழ் இலக்கியத்தைப் பற்றி, ஒரு சொல்லேனும் ஒரு குறிப்பேனும் காணக் கிடையா. இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம் என அவர்கள் மொழிவன எல்லாம் திராவிட நாகரிகம், திராவிட மொழிகள் இவற்றையே அடிப்படையாக் கொண்டவையாயினும், பல்லாண்டுகளாக நடுவு நிலைமை கடந்தோர் பலர் இவ்வுண்மையை மறைத்தும் திரித்தும் ஒளித்தும் நூல்கள் யாத்துள்ளனர். இன்று இவ்வுண்மையை எடுத்துக் கூறுவதற்குப் பெரிதும் மனத் துணிவு வேண்டியுள்ளது. ஆதலால் உலகம்…

தகவல் அறியும் உரிமைச்சட்டமும் தள்ளாடும் அதிகாரிகளும் -2

(தொடர் கட்டுரை) 2     1863 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் இசுலாமியர்களின் மசூதி மற்றும் நிருவாகத்தை இசுலாமியர்களிடம் ஒப்படைத்தது. எந்தக் குறிப்பிட்ட சாதியினரிடமோ, துணைச்சாதியினரிடமோ, சாதிக்கு வெளியே இருந்தவர்களிடமோ ஒப்படைக்கவில்லை; எந்தக் குறிப்பிட்ட பிரிவினரிடமும் ஒப்படைக்கவில்லை.  மசூதிகள் இசுலாமியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் அவர்கள் தங்கள் இசுலாமியச் சமயச்சட்டத்திற்கு மாற்றிக்கொண்டார்கள். இறைவனுக்காக ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கள் ‘வக்பு’ எனப்பட்டது. அதன்பின்னர் வக்பு வாரியமாக மாற்றப்பட்டது. தமிழகத்தில் ‘தமிழ்நாடு வக்பு வாரியம்’ என அமைக்கப்பட்டு அதன் தலைமையகம் சென்னையில் அமைக்கப்பட்டது. இவ்வாறு வக்பு செய்யப்பட்ட சொத்துக்களைப்…

அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா 80 ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா

அறிவியல் தமிழறிஞர் மணவை முசுதபா 80 ஆவது  பிறந்தநாள் பெருமங்கல விழா அறிவியல் தமிழ் அறக்கட்டளை தொடக்க விழா ஒன்பான் அறிஞர்களுக்கு அறக்கட்டளை விருது வழங்கல் மணவை முசுதபா வாழ்க்கைக் குறிப்பேடு வெளியீடு விருதாளர்களைப் பற்றிய குறிப்பேடு வெளியீடு அறிவியல்தமிழறிஞர் திரு. மணவை முசுதபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள்  பெருமங்கல விழா  இன்று(ஞாயிற்றுக்கிழமை வைகாசி 31, 2046 / சூன் 14, 2015 மாலை) சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்திய அலுவலர் சங்ககக்கட்டடத்தில் நடைபெற்றது. கலைமிகு மீனாட்சி குழுவினர் தமிழிசைப்…

14ஆவது தமிழ்இணைய மாநாடு, சிங்கப்பூர்: சில நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்

வைகாசி 16-18, 2046 / மே30-சூன் 01, 2015 ஆகிய நாள்களில் சிங்கப்பூரில் நிகழ்ந்த 14 ஆவது தமிழ்இணைய மாநாட்டின் தொடக்கவிழா, இரண்டாம் நாள் விருந்து,  நிறைவு விழா, மூன்று நாள்களிலும் நடைபெற்ற உரைகள் சிலவற்றின் நிகழ்வுப் படங்கள். [படங்களுக்குரியவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு அனுப்பினால் பின்னர் படங்களுடன் பெயர்களை இணைக்கலாம்.] படங்கள் – அகரமுதல & ஓம்தொலைக்காட்சி

இணைய மாநாட்டுத் தகவல்நுட்பக்காட்சி ஒளிப்படங்கள் சில, சிங்கப்பூர்

  சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் 14ஆவது இணைய மாநாடு  மூன்று நாள் நடைபெற்றது.   இம்மாநாட்டில்   தொடக்க நாளான சித்திரை 16, 2046 / மே 30, 2015 சனியன்று சிங்கப்பூர்த் தலைமையமைச்சுத்துறையமைச்சர் ஈசுவரன்  தகவல்நுட்பக் காட்சியரங்கத்தைத் திறந்து வைத்தார். படங்கள் : அகரமுதல & தினமலர்

சிங்கப்பூரில் கவிக்கோ கருவூல அறிமுக விழா

  கவிக்கோ அப்துல் இரகுமான்  75 ஆவது பிறந்தநாள் பவளவிழாவும் கவிக்கோ கருவூல வெளியீட்டு விழாவும் சென்னை அண்ணாசாலை காமரசார் அரங்கத்தில்   ஆவணி 12, 2046 / ஆக.29,2015 சனிக்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்த அறிமுக நிகழ்ச்சி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் சித்திரை 17, 2046 / மே 31 ஞாயிறு காலை சிங்கப்பூர் ஆனந்தபவன் உணவக மாடியரங்கத்தில் நடைபெற்றது. பவளவிழா ஒருங்கிணைப்பாளர்கள்  பேராசிரியர் கவிமாமணி அப்துல்காதர், பதிப்பாளர் சாசகான் ஆகியோர் உரையாற்றினர்.

மசுகட்டுத் தமிழ்ச்சங்கத்தின் பூவையர் பூங்கா நிகழ்ச்சி – சுரேசமீ

 மசுகட்டுத் தமிழ்ச் சங்கம் மகளிர் மட்டுமே கலந்துகொண்ட ‘பூவையர் பூங்கா’ எனும் ஒரு நாள் நிகழ்ச்சியை மசுகட்டு வாடிக்கபீரிலுள்ள, கிறிசுடல் சூட்டு உறைவகத்தில் சித்திரை 22, 2046 / மே 5, 2015 அன்று நடத்தியது.  இந் நிகழ்ச்சியில், வெள்ளித்திரை- சின்னத்திரை நடிகை நளினி, மகளிர் புற்றுநோய் மருத்துவர் மரு. சுமனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்!   ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எனக் கூடியிருந்த பெண்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள் என்றால் மிகையாகாது! அழகிப் போட்டியில் தொடங்கிய நிகழ்ச்சி, சொல் விளையாட்டு,…

64 கலைகள்

இசைக்கலை ஆடற் கலை சிற்பக்கலை சித்திரக்கலை கட்டடக்கலை கவிதைக்கலை நாடகக்கலை இசைக்கருவிகள் இசைக்கும் கலை நீரலை இசைக்கலை (சலதரங்கம்) பன்மொழித்திறமை பல நூல்களைக் கற்றுணர்தல் கவி நயம் விளக்கல் கவிநடையில் பேசுதல் கவிதை வினா விடை கவிதையை முழுமையாக்கல் ஒப்புவித்தல் அழகுறப் பேசுதல் பல்சொற்பொருள் திறன் திறனாய்வுக் கலை குண இயல்புகளை அறிதல் ஒப்பனைக் கலை வண்ணப்பூச்சுக்கலை திலகமிடும் கலை கூந்தல் முடிக்கும் கலை ஆடை அணியும் கலை நகை அணியும் கலை தோட்டம் அமைத்தல் மலரால் அழகுபடுத்தல் கோலமிடுதல் உருவங்களைத் தோற்றுவித்தல் பொம்மைகள்…

சண்டைகளும் கலகங்களும் பெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே

மதச் சண்டைகளும் வேற்றுமைக் கலகங்களும் பெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே   இதனை நன்குணர்ந்தே சுவாமி விகேகாநந்தரும் மதச் சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருத்தலும், இருப்பதும் சமசுகிருத மொழியாகும் என்றும் சமசுகிருத மொழி நூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்றும் வருந்திக் கூறினார். – தமிழ்க்கடல் மறைமலையடிகள்

இலக்குவனார் இலக்கியப் பேரவை 100 ஆவது நிகழ்வு ஒளிப்படங்கள்

 சென்னை,  அம்பத்தூர் வைகாசி 2, 2046 / மே 16, 2015  சனிக்கிழமை  (படத்தின் மேலழுத்திப்  பெரிதாகக் காண்க.)