உ.வே.சா.வின் என் சரித்திரம் 74 : புலமையும் அன்பும்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 73 : திருவாவடுதுறைக் காட்சிகள் 2- தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-45 புலமையும் அன்பும் குருபூசைத் தினத்தன்று இரவு ஆகாரம் ஆனபிறகு அங்கே நடைபெறும் விசேடங்களைப் பார்க்கச் சென்றேன்.சிரீ சுப்பிரமணிய தேசிகர் ஓர் அழகிய சிவிகையில் அமர்ந்து பட்டணப் பிரவேசம் வந்தார். உடன் வந்த அடியார்களின் கூட்டமும் வாண வேடிக்கைகளும் வாத்திய முழக்கமும் அந்த ஊர்வலத்தைச் சிறப்பித்தன. பல சிறந்த நாதசுவரக்காரர்கள் தங்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். சிவிகையின் அலங்காரம் கண்ணைப் பறித்தது. பட்டணப் பிரவேச காலத்தில் சிசியர்கள் வீடுகளில் தீபாராதனை…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 73 : திருவாவடுதுறைக் காட்சிகள் 2.

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 72 : திருவாவடுதுறைக் காட்சிகள் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 44 தொடர்ச்சிதிருவாவடுதுறைக் காட்சிகள் 2 அங்கே சுவாமி சந்நிதியிலுள்ள (இ)ரிசபம் மிகப் பெரியது. “படர்ந்தஅரசு வளர்ந்த (இ)ரிசபம்” என்று ஒரு பழமொழி அப்பக்கங்களில் வழங்குகிறது.அவ்வாலயம் திருவாவடுதுறை மடத்தின் நிருவாகத்துக்கு உட்பட்டது.இயல்பாகவே சிறப்புள்ள அவ்வாலயம் ஆதீன சம்பந்தத்தால் பின்னும்சிறப்புடையதாக விளங்குகிறது. உற்சவச் சிறப்புகுரு பூசை நடைபெறும் காலத்தில் இவ்வாலயத்திலும் இரதோத்சவம்நடைபெறும். உற்சவம் பத்துநாள் மிகவும் விமரிசையாக நிகழும். இரதசப்தமியன்று தீர்த்தம். பெரும்பாலும் இரதசப்தமியும் குருபூசையும் ஒன்றையொன்றுஅடுத்தே வரும்; சில வருடங்களில்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 72 : திருவாவடுதுறைக் காட்சிகள்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 71 : சரசுவதி பூசையும் தீபாவளியும் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 44திருவாவடுதுறைக் காட்சிகள் மார்கழி மாதக் கடைசியில் எனக்கு சுர நோய் முற்றும் நீங்கிற்று;ஆயினும் சிறிது பலக் குறைவுமட்டும் இருந்து வந்தது. பிள்ளையவர்களிடம்போக வேண்டுமென்ற விருப்பம் வர வர அதிகமாயிற்று. அவர் பட்டீச்சுரத்துக்குப் புறப்படுகையில், சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைக்கு வந்து அங்குள்ள பலருக்குப் பாடம் சொல்லி வரவேண்டுமென்று கட்டளையிட்டதை அறிந்த நான் அவர்திருவாவடுதுறையில் வந்திருப்பாரென்றே எண்ணினேன்; ஆயினும் ஒருவேளைவாராமல் மாயூரத்திலேயே இருக்கக்கூடுமென்ற நினைவும் வந்தது. என்சந்தேகத்தை அறிந்த என்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 70 : சிலேடையும் யமகமும்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-42 சிலேடையும் யமகமும் பட்டீச்சுரத்தில் இருந்தபோது பிள்ளையவர்கள் இடையிடையேகும்பகோணம் முதலிய இடங்களுக்குப் போய் வருவதுண்டு. அப்பொழுதுநானும் உடன் சென்று வருவேன். பட்டீச்சுரத்திலுள்ள ஆலயத்திற்கு ஒருநாள்சென்று தரிசனம் செய்து வந்தோம். அக்கோயிலில் தேவி சந்நிதானத்தில் சிரீகோவிந்த தீட்சிதரது பிம்பமும் அவர் பத்தினியாரது பிம்பமும் இருக்கின்றன.அவற்றை நாங்கள் கண்டு களித்தோம். தஞ்சையிலிருந்து அரசாண்ட அச்சுதப்பநாயக்கரிடம் அமைச்சராக இருந்து பல அரிய தர்மங்களைச் செய்தவர் சிரீகோவிந்த தீட்சிதர். அவர் பட்டீச்சுரத்து அக்கிரகாரத்தில் வசித்து…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 68 : ஆறுமுக பூபாலர் – தொடர்ச்சி) என் சரித்திரம் – அத்தியாயம் 41 தொடர்ச்சிஒரு செய்யுள் செய் இவ்வளவு சாக்கிரதையாக ஏற்பாடு செய்து கொண்டு விழிக்கும்ஆறுமுகத்தா பிள்ளையிடம் காலையில் நான் போய், “என் புத்தகத்தைக்காணவில்லை” என்று சொல்லுவேனானால் அவருக்குக் கோபம் வருமென்பதைநான் அறிவேன். ஆகையால் அவரிடம் சொல்லலாமென்று என் ஆசிரியர் கூறிய பின்பும், நான் பேசாமல் வாடிய முகத்துடன் அங்கேயே நின்றேன். ‘ஒரு செய்யுள் செய்யட்டும்’ சிறிது நேரத்திற்குப் பின் ஆறுமுகத்தா பிள்ளை துயில் நீங்கி எழுந்துஅவ்வழியே சென்றார்….

தமிழ்த் தேசியத் திருவிழா!, தமிழ்த் தன்னுரிமை இயக்கம், சென்னை

எங்கள் தமிழ் வாழ்க! தமிழ்த் தன்னுரிமை இயக்கம் முத்தமிழ்க் காவலர் ஐயா கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா! தமிழர் திருநாள் பொங்கல் விழா! தமிழ் வல்லார் பெருமக்களுக்கு விருது வழங்கும் விழாவெனத் தமிழ்த் தேசியத் திருவிழா! இடம்: செ நா தெய்வநாயகம் பள்ளி, வெங்கடநாராயணன் சாலை, தியாகராயநகர் சென்னை-600017 நாள்: திருவள்ளுவர் ஆண்டு மார்கழித்திங்கள் 26 2054(10/1/2024) புதன்கிழமை மாலை 4:00 மணி கவியரங்கம்: தலைப்பு: வெல்லும் தமிழ்நாடு!  தலைமை: கவிஞர் தாமரைப்பூவண்ணன் ஒருங்கிணைப்பு: கவிஞர் நல்ல…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 68 : ஆறுமுக பூபாலர்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 67 : ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு – தொடர்ச்சி) என் சரித்திரம் :  அத்தியாயம்-41 ‘ஆறுமுக பூபாலர்’ ஆறுமுகத்தா பிள்ளையைப் பார்த்தாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கும். பிறருக்கு ஆக வேண்டியவற்றைக் கவனித்தாலும் என்ன காரணத்தாலோ எல்லோரிடத்தும் அவர் கடுகடுத்த முகத்தோடு பெரும்பாலும் இருப்பார்; நான் மிகவும் சாக்கிரதையாக நடந்து வந்தும் அவருக்கு என்னிடம் அன்பு உண்டாகவில்லை. பிள்ளையவர்களிடத்தில் அவர் மிக்க மரியாதையும் அன்பும் உடையவராக இருந்தார். அக்கவிஞர் பெருமான் என்னிடம் அதிகமான அன்பு காட்டுவதையும் அவர் அறிவார், அப்படி…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 67 : ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 66 : பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம் – தொடர்ச்சி) என் சரித்திரம்ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு ஆறுமுகத்தாபிள்ளை நல்ல உபகாரி; தம் செல்வத்தை இன்ன வழியில் பயன்படுத்த வேண்டுமென்ற வரையறையில்லாதவர். அந்த ஊரில் தம்மை ஒரு சிற்றரசராக எண்ணி அதிகாரம் செலுத்தி வந்தார். யார் வந்தாலும் உணவளிப்பதில் சலிக்கமாட்டார். பிள்ளையவர்கள் அவர் வீட்டில் தங்கிய காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேட தினமாகவே இருக்கும். கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு நாள்தோறும் சிலர் வந்தவண்ணம் இருப்பார்கள். வெளியூர்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியர்களாக…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 66 : பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 65 : நல்லுரை – தொடர்ச்சி) என் சரித்திரம்40 பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம் ஒரு புலவருடைய பெருமையை ஆயிரக்கணக்கான பாடல்களால் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. உண்மைக் கவித்துவம் என்பது ஒரு பாட்டிலும் பிரகாசிக்கும்; ஓர் அடியிலும் புலப்படும். பதினாயிரக்கணக்காக இரசமில்லாத பாடல்களை இயற்றிக் குவிப்பதைவிடச் சில பாடல் செய்தாலும் பிழையில்லாமல் சுவை நிரம்பியனவாகச் செய்வதே மேலானது. “சத்திமுற்றப் புலவர் என்பவரைப் பற்றித் தமிழ் படித்தவர்களிற் பெரும்பாலோர் அறிவார்கள். அப்புலவர் இயற்றிய அகவல் ஒன்று அவரது புகழுக்கு முக்கியமான காரணம். ‘நாராய் நாராய்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 65 : நல்லுரை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 64 : யான் பெற்ற நல்லுரை – தொடர்ச்சி) நல்லுரை சில மாதங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியிலிருந்து சதாசிவம் பிள்ளை வந்தான். இந்தத் துறைசையந்தாதியை அவன் எடுத்துவந்து பாடஞ் சொல்லும்படி தொந்தரவு செய்தான். நான் படித்துப் பார்த்தேன்; ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஐயா அவர்களிடத்திலேயே போய்க் கேட்டுக்கொள்’ என்று அனுப்பிவிட்டேன். அங்கே தங்களிடம் வந்திருப்பானே?” “வரவில்லை” “அவனைப்போல இன்னும் யாராவது வந்து அருத்தம் சொல்லவேண்டுமென்று உபத்திரவம்பண்ணினால் இவரிடம் தள்ளிவிடலாமே என்ற எண்ணத்தினாலேதான் இந்தக் கேள்வி கேட்டேன்.” ‘ஆற்றிலே போட்டுவிடுங்கள்’ அப்போது ஆறுமுகத்தா பிள்ளை…

திருச்சி அறிவாளர் பேரவை, முப்பெரும் விழா, சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருது வழங்கல்

திருச்சி அறிவாளர் பேரவைமுப்பெரும் விழா பேரவையின் 24 ஆவது ஆண்டு விழாநிறுவுநர் பிறந்த நாள் விழாசான்றோர் பெருந்தகை விருது விழா கார்த்திகை 24, 2054 ஞாயிறு 10.12.2023 காலை 10.00 சிறப்பு விருந்தினர் மாண்புமிகு ந.நல்லுசாமிமேனாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு வாழ்த்துரை தமிழ்த்திரு மு.சிதம்பரபாரதி முன்னிலைதொழிலதிபர் பி.கே.தியாகராசன்தொழிலதிபர் வாழையிலை மனோகரன்துவரங்குறிச்சி ந.பாலசுப்பிரமணியன்நாயகன் ஆ.மோகன் ஆட்சித்தமிழறிஞர்இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு நிறுவுநர் கோ.அரங்கநாதன் அவர்களின் நினைவாக, சீர்மிகு சான்றோர் பெருந்தகைவிருது வழங்கிச் சிறப்பிக்கிறோம். தாங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தோடும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.பேராசிரியர் முனைவர்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 64 : யான் பெற்ற நல்லுரை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 63 : நான் கொடுத்த வரம் 2 -தொடர்ச்சி) யான் பெற்ற நல்லுரை 39 மறுநாள் காலையில் நாங்கள் திருவிடைமருதூரைவிட்டுப் புறப்பட்டோம். பட்டீச்சுரத்திற்குக் கும்பகோணத்தின் வழியாகவே போகவேண்டும். கும்பகோணத்தில் வித்துவான் தியாகராச செட்டியாரைப் பார்த்துவிட்டுச் செல்லவேண்டுமென்பது பிள்ளையவர்களின் கருத்து. தியாகராச செட்டியார் தியாகராச செட்டியாருடைய பெருமையை நான் பல நாட்களுக்கு முன்பிருந்தே கேள்வியுற்றவன். கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்த அவர் சிறந்த படிப்பாளி என்றும் அவரிடம் படித்த மாணாக்கர்கள் எல்லாரும் சிறந்த தமிழறிவுடையவர்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். கல்லூரியில் உள்ள…