aathiraa02

  ஞாயிறு இராமசாமி அவர்களால் நடத்தப் பெறும் ஞாயிறு அமைப்பின் கவியரங்கம், மும்பை, செம்பூர் மகளிர் சங்க(மகிலா சமாசம்) அரங்கில் மாசி 17, 2046 – 01/03/15 அன்று மாலை 6.மணிக்கு நடைபெற்றது.

  கவியரங்கத்திற்குக்  கவிஞர் ஆதிரா முல்லை தலைமை வகித்தார்.

 இதில் மும்பைத் தமிழ்ச்சங்கத் தலைவர், செயலாளர்  முதலான 13 கவிஞர்கள் கவிதை படித்தனர்.

  கவிஞர் பரணி அவர்களின் கவிதை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்று பரிசும் சான்றிதழும் வழங்கப் பெற்றன.

 கவியரங்கின் முடிவில் ஞாயிறு இராமசாமி அவர்களால் தமிழிசைப் பாடல்களும் இசைக்கப் பெற்றன.