உ.வே.சா.வின் என் சரித்திரம் 27

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 26 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 16கண்ணன் காட்சியின் பலன் காலை எட்டு நாழிகையளவில் குன்னம் போய்ச் சேர்ந்தோம். சிதம்பரம் பிள்ளையும் அவர் நண்பர்களும் எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அங்கே எங்களுக்காக அமைக்கப் பெற்றிருந்த வீட்டில் இறங்கினோம். அந்தச் சாகை அவ்வூரிலிருந்து சிரீ வைணவராகிய இராம ஐயங்கா ரென்பவருடைய வீட்டின் ஒரு பகுதியாகும். அவர் என் தந்தையாருக்கு இளமை முதல் நண்பர்; சித்த வைத்தியத்தில் நல்ல பயிற்சி யுடையவர். அவர் வசிட்டபுரத்தா ரென்னும் வகையைச் சேர்ந்தவர். குன்னத்திலும் அதைச்சார்ந்துள்ள ஊர்களிலும்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 25

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 24. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):25 4. குலமும் கோவும் தொடர்ச்சி பல்லவர் குடி மன்னர் பல்லவர் ஆட்சி     பல்லவர் குடியைச் சேர்ந்த அரசர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டையாளத் தலைப்பட்டார்கள். ஏறக் குறைய அறு நூறாண்டுகள் அன்னார் அரசு புரிந்தனர் என்னலாம். சுந்தரர் தேவாரத்திலும், திருமங்கை யாழ்வார் திருப்பாசுரங்களிலும் பல்லவர்பீடும் பெயரும் குறிக்கபடுகின்றன.41 பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் அரசாட்சி நிலைகுலைந்து அழிந்தது. ஆயினும் அக்குல மன்னர் பெயர் சில…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 28 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 29 சொற்களை ஓரெழுத் தொருமொழி என்றும், ஈரெழுத் தொருமொழி என்றும், தொடர் மொழி என்றும் பகுத்துள்ளார். இப்பகுப்புத் தமிழியல்புக்கு ஒத்ததேயாகும். சொற்களால் திணை, பால், எண், இடம் அறியக்கூடும். ஆகவே, திணை வகையால் சொற்கள் உயர்திணை, அஃறிணை என்று பகுக்கப்பெற்றுள்ளன. இப் பகுப்பும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்தனவாகும். பால்வகையால் ஆண், பெண், பலர், ஒன்று, பல என ஐவகைப்படும். ஆண், பெண், பலர் என்பன உயர்திணைக்கும், ஒன்று, பல என்பன அஃறிணைக்கும் உரியன….

தமிழ்நாடும் மொழியும் 29: பிற்காலப் பாண்டியர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 28: பிற்காலப் பாண்டியர் வரலாறு தொடர்ச்சி) 7. பிற்காலப் பாண்டியர் வரலாறு தொடர்ச்சி சடாவர்மன் குலசேகரன் பட்டம் பெற்றதும் பாண்டியர்கள் முழு உரிமையுடன் விளங்கலானார்கள். அதன்பின் வந்த பல பாண்டிய மன்னர்கள் பேரரசர்களாக விளங்கினர். பாண்டியர் வரலாற்றுக்குப் பெருந்துணை புரியவல்ல கல்வெட்டுகள் பல 13-ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டன. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், சடாவர்மனுக்குப் பின்னர் கி. பி. 1216-இல் பட்டம் பெற்றான். இவன் காலத்தில் சோழ நாட்டை மூன்றாம் இராசராசன் ஆண்டு வந்தான். பாண்டியன் திடீரெனச் சோழ நாட்டைத் தாக்கினான்; இராசராசனை…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3   காட்சி : 4

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3   காட்சி : 4 (பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3 தொடர்ச்சி) அரண்மனை – அந்தப்புரம் பூஞ்சோலை இளவரசி அமைதியாக வீற்றிருக்க, தோழியர் வந்து சூழ்ந்து நகையாடலாக உரையாடுகின்றனர். அறுசீர் விருத்தம் தோழி 1   :                 தங்கநீர்     ஓடை      தன்னில்                                       தறுகண்     முதலை     ஏறி                              எங்குளான்         பகைவன்     என்றே                                       இளவீரன்    செல்லும்    பான்மை                              பொங்கிடும்    ஒளிவெள்       ளத்தில்                                       புலப்படும்      மேகக்     காட்சி                              அங்குறும்     மேற்கு    வானில்                                      …

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 639-647

( தமிழ்ச்சொல்லாக்கம் 621-638 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 639- 647 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 639. கோசித்தல்   –           ஆரவாரித்தல் 640. சிவலிங்கம்   –           அருட்குறி 641. விருத்தபுரி    –           பழம்பதி 642. விமோசனம் –           நீங்குதல்             திருப்புனவாயிற் புராணம் (1928) (திருவாரூர் தியாகராச கவிராச தேசிகர் இயற்றியது) அரும்பதவுரை     :           தூத்துக்குடி பொ. முத்தைய பிள்ளை ★ 643. lmmoveables    –           இயங்காப் பொருள் 644. Terrace   –           மேன்மாடி 645. Screen    –           திரைச்சீலை, இடுதிரை 646. Change  –           சிதறின தொகை…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 26

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 25 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 15 தொடர்ச்சி தமிழ்த் திருவிளையாடற் புராணத்தில் அந்த வரலாறு உள்ள பாகத்திற்கு ‘விருத்த குமார பாலரான படலம்’ என்று பெயர். ஐயாக்குட்டி ஐயர் அந்தச் சரித்திரத்தைச் சொல்லும்போது, “கௌரிக்கு அவள் தகப்பனார் கௌரீ மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த மந்திரம் மிக்க நன்மையைத் தரவல்லது” என்று கூறி அந்த மந்திரத்தையும் எடுத்துரைத்தார். அவர் உரைத்த மந்திரத்தையும் அதை உச்சரிக்கும் முறையையும் அப்பொழுதே நான் மனத்திற் பதியச் செய்துகொண்டேன். அவர் அன்றிரவு மந்திரத்தைச் சொன்னதையே உபதேசமாகக் கருதி…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):24

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 23. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):24 4. குலமும் கோவும் தொடர்ச்சி சிரீவல்லபன்      தென்பாண்டி நாட்டுக்குப் பெருந் தொண்டு செய்த பாண்டியன் சிரீவல்லபன் என்று கருண பரம்பரைக் கதை கூறுகின்றது. தாமிரவருணி யாற்றங்கரையில் உள்ள மணப்படை வீடு அம் மன்னனுக்குரிய படை வீடுகளில் ஒன்றாக விளங்கிற்றென்று தெரிகின்றது. அப் படை வீடு, சிரீவல்லபன் மங்கலம் என்ற ஊரின் ஓர் அங்கமாக அமைந்திருந்ததென்று சாசனம் கூறும். 35 அவ்வூரின் அருகே கொட்டாரம் என்னும் பெயருடைய சிற்றூர் காணப்படுகின்றது….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 28

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 27 தொடர்ச்சி)  ‘பழந்தமிழ்’ – 28   அளவுப்  பெயரும், நிறைப் பெயரும், எண்ணுப் பெயரும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இருந்துள்ளன. பனை என்னும் சொல் அளவுப் பெயராகவும், கா என்னும் சொல் நிறைப்பெயராகவும் வழங்கியுள்ளன.   யாவர் என்னும் சொல் யார் என்றும், யாது என்னும் சொல் யாவது என்றும் மருவி வருவது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ள வழக்காகும்.   அழன், புழன் என்ற இரு சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழக்கிலிருந்தன; பின்னர் மறைந்துவிட்டன.   பல,…

தமிழ்நாடும் மொழியும் 28: பிற்காலப் பாண்டியர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 27: சோழர் காலத் தமிழகம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 28: 7. பிற்காலப் பாண்டியர் வரலாறு பாண்டியரைப் பற்றிக் கூறுவனவற்றுள் காலத்தால் முந்தியன மெகசுதனீசர் எழுதிய இந்திகா , சாணக்கியனின் அருத்தசாத்திரம், அசோகனின் கல்வெட்டுகள் என்பனவாம். பாண்டியர் மதுரை, நெல்லை, இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் ஆண்டார்கள். பாண்டிய நாடு பருத்திக்கும் முத்துக்கும் பெயர்பெற்ற நாடாகும். பிளினி பாண்டிய நாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். கி. மு. 40-லிருந்து கி. மு. 30 வரை ஈழ நாட்டைப் பாண்டியன் ஆண்டதாக…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3   காட்சி:3 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் உதாரன்  :                 கார்நிரம்பும்              வான                      மெல்லாம்                                       கனமழை                 பொழிய                  வெள்ள                              நீர்நிரம்பும்                வயல்க          ளெல்லாம்                                       நெடும்பயிர்    செழிக்க                  வண்ணத்                              தேர்நிரம்பும்              வீதி                        யெல்லாம்                                       திருவிழா                 மலிய                     நாளும்                              பேர்நிரம்பும்              ஆட்சி           மேவும்                                       பெருவேந்                தன்நங்           காய்நீ                              கற்றறிந்த                …

தமிழ்நாடும் மொழியும் 27: சோழர் காலத் தமிழகம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 26 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 27 சோழர் காலத் தமிழகம் தொடர்ச்சி சோழர் பிரதிமைகள் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்டுக் கோவில்களில் வைக்கப்பட்டன. இராசராசன், அவன் அரசி உலகமாதேவி இவர்களது செப்புப் பிரதிமை உருவங்களைத் தஞ்சாவூர் பெரிய கோவிலில் செய்துவைத்த செய்தியை அக்கோவில் சாசனமொன்று கூறுகின்றது. இதேபோன்று திருக்காளத்திக் கோவிலில் இருந்த மூன்றாம் குலோத்துங்கனது உருவச்சிலை செப்பினால் ஆயது. இவனது மற்றொரு கற்சிலை உருவம் காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் காணப்படுகிறது. சிவன், பார்வதி, கணபதி, முருகன் போன்ற தெய்வ உருவங்களும், மனிதன், பறவை முதலிய இயற்கை…