குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 45. இன நலமே பாதுகாப்பு! மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௮ – 458) மனம் நன்னலமாக இருப்பினும் சான்றோர்க்கு இனநலமே பாதுகாப்பானது. பதவுரை: மன-மனத்தின்; நலம்-நன்மை; நன்கு-மிகுதியும்; உடையர்-உ்டையவர்கள்; ஆயினும்-ஆனாலும்; சான்றோர்க்கு-அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கும் பண்பாளர்க்கு; இனநலம்-இனத்தின் நன்மை; ஏமாப்பு-வலிமை, பாதுகாவல்; உடைத்து-உடையது. கருத்துரைகள் மன நலம் இருப்பினும் சிற்றினம் சேராமல் நல்லினத்துடன் சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பு…
வெருளி நோய்கள் 1351 -1355 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1346 -1350 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1351 -1355 தென்னசி மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென்னசி வெருளி.தென்னிசி மாநிலம் ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது; எட்டு அமெரிக்க மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது.இம்மக்களின் வணிகம், நாகரிகம்,பண்பாடு,நடைமுறை மீது தேவையற்ற பேரச்சம் கொள்வோர் வெருளிக்கு ஆளாகின்றனர்.00 தேடு பொறி குறித்த வரம்பற்ற பேரச்சம் தேடு பொறி வெருளி. தேடுபொறிகள் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் என்ற பேரச்சத்தால் தேடுபொறிகளை வெறுப்போர் உள்ளனர்.கூகுள், யாஃகூ முதலான பல்வேறு தேடுபொறிகள் உள்ளன….
நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 28. பெரியோரைப் பிணித்துக் கொள்க! அடைந்தார்ப் பிரிவு மரும்பிணியுங் கேடு முடங்குடம்பு கொண்டார்க் குறலாற் – றொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை யுறப்புணர்க வம்மாவென் னெஞ்சு. – நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 173 [அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரைஉறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.] கருத்துரை: அன்பானவர்களைப் பிரிதலும் தீர்க்க இயலா நோயும் கேடுகளும் உடம்பிற்கு…
வெருளி நோய்கள் 1346 -1350 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1341 -1345 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1346 -1350 தென் கரோலினா(Southcarolina) மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென் கரோலினா வெருளி.தென்கரோலினா அரசு, அதன் மக்கள், விளைபொருட்கள், பழக்கவழக்கம் போன்றவற்றால் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கவலை கொண்டு பேரச்சம் கொள்வர்.00 தென் தகோட்டா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென் தகோட்டா வெருளி.தென் தகோட்டா அரசு, அதன் மக்கள், விளைபொருட்கள், பழக்கவழக்கம் போன்றவற்றால் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கவலை கொண்டு பேரச்சம் கொள்வர்.00 தெற்குப் பகுதி குறித்த வரம்பற்ற பேரச்சம் தென் வெருளி.தென்திசை…
வெருளி நோய்கள் 1341 -1345 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1336 -1340 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1341 -1345 அறியப்படாத ஆள், இடம், பொருள் முதலியன குறித்த அளவுகடந்த பேரச்சம் தெரிந்திராமை வெருளி.முன்பின் அறிந்திராதவர்களுடன் பழகுவதால் இன்னல்கள் நேரலாம் என அஞ்சுவர். முன்பின் என்றால் முன்னரோ பின்னரோ எனக் கருதி எப்படி இது சரியாகும் என எண்ணுகிறோம். “முன்பின் செத்திருந்தால்தானே சுடுகாடு தெரியும்” என்றால் நமக்கு முன்னவரோ பின்னவரோ செத்திருந்தால்தானே சுடுகாடு சென்றிருப்போம் எனப் பொருள். அதுபோல் முன்பின் அறியாதவர்கள் என்றால் அவரது குடும்பத்தில் அல்லது வாழ்விடத்தில் அல்லது பணியிடத்தில்…
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : இலக்குவனார் திருவள்ளுவன்
(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : தொடர்ச்சி) 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 ஈ.வெ.இரா.உரை, நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்தது 11ஆம் கட்டுரை. இநதி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல்முறையாகப் பெண்கள் கைது என்பது குறித்து 12 ஆம் கட்டுரை கூறுகிறது. எண்மர் கைது குறித்தது 13 ஆம் கட்டுரை. நவம்பர் 14 அன்று ஐந்து பெண்கள் கைதானதற்குப் பிறகு நவம்பர் 21 அன்று எட்டுத்தாய்மார்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப் பட்டனர். பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில்…
வெருளி நோய்கள் 1336 -1340 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1331 -1335 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1336 -1340 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5
வெருளி நோய்கள் 1331 -1335 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1326 -1330 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1331 -1335 தூக்கு வண்டி(bucket truck, or boom truck) தொடர்ந்த அளவு கண்ட பேரச்சம் தூக்கு வண்டி வெருளி.வாளி வண்டி என்றால் தண்ணீர் வாளிபோல் எண்ணுவர். மேலே ஏற்றி பணியாற்ற உதவுவதால் ஏற்றி என்று சொல்லலாமா? அப்படியானால் கட்டடம், கம்பம் போன்றவற்றின்மீது ஏறுவதற்கு உதவுவது எனப் பொருள் வரும். வாளி போன்ற தாங்கியைத் தூக்கி உயர்த்துவதன் மூலம் அதில் உள்ளவர்கள் மின் கம்பம் முதலான உயரப்பகுதிகளில் அவற்றில் ஏறாமலேயே பணியாற்ற முடிகிறது….
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, தாய்லாந்து, சூன் 2026
வெருளி நோய்கள் 1326 -1330 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1321 -1325 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1326 -1330 துன்பம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் துன்ப வெருளி.துன்பத்தினால் வரும் வருத்தத்தையும் இது குறிக்கும். எனினும் மன வருத்த வெருளி(Lypiphobia) எனத் தனியாக உள்ளதால், இதனைத் துன்ப வெருளி என்றே சொல்லலாம்.எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!எனப் புதிய பறவையில் கண்ணதாசன் பாடல் இடம்பெறும்.இது துன்ப வெருளியின் வெளிப்பாடே.அதுபோல்எங்கே நிம்மதி நிம்மதி என்றுதேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லைஎன மற்றொரு…
வெருளி நோய்கள் 1321 -1325 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1316 -1320 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1321 -1325 துருக்கியர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் துருக்கிய வெருளி. துருக்கியர், துருக்கிய மொழி, துருக்கியர் கலை, துருக்கியர் பண்பாடு, துருக்கிய நாடு, தொழில், விளை பொருள்கள், துருக்கிய அரசியல் முதலானவற்றைப் பேரிடர் தருவதாக எண்ணிப் பெரு வெறுப்பும் மிகு அச்சமும் கொண்டிருப்பர் இத்தகையோர். 00 கருவாய் துழாவுதல்(cunnilingus) தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் துழாவு வெருளி.cunnus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பெண்குறி. lingere என்னும் இலத்தீன் சொல்லின்…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௬. தமிழ்நாடும் தமிழும்
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ௬. தமிழ்நாடும் தமிழும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை நனியும் நலிவுற்றுளது என்பது தெளிவு. ஏனெனில், தமிழ்நாட்டிலுள்ள மக்களின் பெயர்கள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள கடைகளின் பெயர்களும், தொழில் நிறுவனங்களின் பெயர்களும் தமிழாயில்லை. தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கடவுளரின் பெயர்களும் தமிழன்று. கோவில் வழிபாடுகளும் தமிழில் நடத்தப்படவில்லை. இலங்கையிலும், மலேசியாவிலும், சிங்கையிலும் தமிழ் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் தமிழுக்குத்…
