கண்ணதாசன் – வண்ணக்கவி வாசன் : வெ.அரங்கராசன்
கண்ணதாசன் – வண்ணக்கவி வாசன் சிறுகூடல்பட்டி — தந்த பெருங்கவிப் பெட்டி! தேன்தமிழ்த் தொட்டி! — பனங் கற்கண்டுக் கட்டி! பைந்தமிழ்ப் புலமையில் நீஎன்றும் கெட்டி! கவிச்சுவை உள்ளத்தில் நிற்குமே ஒட்டி! வஞ்சரை உன்பாட்டு உதைக்குமே எட்டி! கொஞ்சமும் தயங்காது விரட்டுமே முட்டி! கண்ணதாசன், வண்ணக்கவி வாசன்! பண்ணுள்ள பாட்டுக்குநீ நேசன்! …
திருக்குறள் அறுசொல் உரை: 133. ஊடல் உவகை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால் 15. கற்பு இயல் 133. ஊடல் உவகை கூடல் இன்பத்தைக் கூட்டும் ஊடல் பற்றிய உளமகிழ்ச்சி. (01-04 தலைவி சொல்லியவை) இல்லை தவ(று)அவர்க்(கு) ஆயினும், ஊடுதல் வல்லது அவர்அளிக்கும் ஆறு. தவறுஇல்லை எனினும், இன்பத்தைக் கூட்டவே, அவரோடு ஊடுவேன். உடலில் தோன்றும் சிறுதுனி, நல்அளி வாடினும், பாடு பெறும். ஊடல்தரும் சிறுதுயரம் வாட்டினும், கூடல் இன்பத்தைப்,…
திருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி:தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 132. புலவி நுணுக்கம் தவறுஇல்லாப் போதும், கூடல்இன்ப மிகுதிக்காக நுட்பமாய்ச் சினத்தல் (01-02 தலைவி சொல்லியவை) பெண்இயலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர், நண்ணேன், பரத்த!நின் மார்பு. பெண்களின் பார்வைகளால் கற்பினை இழந்தவனே! உன்னை நெருங்கேன். ஊடி இருந்தேம்ஆத், தும்மினார், யாம்தம்மை, “நீடுவாழ்” கென்பாக்(கு) அறிந்து. ஊடலில் தும்மினார், “நீடுவாழ்க”என வாழ்த்துவேன் என்று நினைந்து. (03-10 தலைவன் சொல்லியவை) …
திருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் :தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 131. புலவி தலைமக்கள் ஒருவர்மீது ஒருவர், கொள்ளும் பொய்ச்சினமும், பிணக்கும் (01-05 தலைவி சொல்லியவை) புல்லா(து) இராஅப் புலத்தை, அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. அவர்படும் துயரைக் காண்போம் சிறிது; மனமே! நீ வேறுபடு. 1302. உப்(பு)அமைந்(து) அற்(று)ஆல் புலவி, அதுசிறிது மிக்(கு)அற்(று)ஆல் நீள விடல். உணவில் உப்பின்…
திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : புதுமை விளக்கம் தரும் ஒரு புதிய முயற்சி – முகிலை இராசபாண்டியன்
‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’ – புதுமை விளக்கம் தரும் ஒரு புதிய முயற்சி ஆய்வுரை இந்தியப் பொதுநூலாகத் திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய அரசிடம் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகப் பொதுநூலாகத் திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கையும் தற்போது எழுந்து கொண்டி ருக்கின்றது. ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இன்று புதிதாய்ப் பிறந்தது போன்ற தன்மையுடன் எல்லாருக்குமான அறிவியல் கருத்துகளை அள்ளித் தரும் பெருமை கொண்ட திருக்குறள் உலகப் பொதுநூலாக அறிவிக்கப்படும் காலம் வரும் என்பதற்கு இந்த…
திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : அணிந்துரை: கு.மோகனராசு
திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் அணிந்துரை அன்று திருக்குறள் முனுசாமி அவர்கள், தம் நகைச்சுவைப் பேச்சால் கேட்பவர் மனம் மகிழப் பட்டி தொட்டிகள், நகரங்கள் எனத் தமிழகத்தின் பெரும்பகுதிகளிலும் திருக்குறளைப் பரப்பினார். திருக்குறள் எழுச்சியை உருவாக்கினார். இன்று இணைய வலைத் தளங்களின் துணையையும் ஏற்றுத் தம் நகைச்சுவைத் திறத்தால், திருக்குறளுக்கு ஏற்றம் தந்து வருபவர் திருக்குறள் தேனீ பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்கள். அந்த வரிசையில் வந்ததுதான் திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் என்னும் இந்த நூல். இந்த நூலில்…
திருக்குறள் அறுசொல் உரை 105. நல்குரவு : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 104 உழவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 105. நல்குரவு உணவு,உடை, உறைவிடம் போன்றவை எதுவும் இல்லாத ஏழ்மைநிலை. இன்மையின் இன்னாத(து) யா(து)….?எனின், இன்மையின் இன்மையே, இன்னா தது. ஏழ்மையைவிடக், கொடிது யாது….? ஏழ்மையே எழ்மையினும் கொடிது. இன்மை எனஒரு பாவி, மறுமையும், இன்மையும் இன்றி வரும். வறுமைக் கொடும்பாவி, எப்பிறப்பிலும் தொடரும்; தொடர்ந்து வருத்தும். தொல்வரவும், தோலும் கெடுக்கும், தொகைஆக, …
திருக்குறள் அறுசொல் உரை – 104. உழவு : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 104. உழவு உலகையே வாழ்விக்கும், உயிர்த்தொழில் உழவின் உயர்வு, இன்றியமையாமை. சுழன்றும் ஏர்ப்பின்ன(து) உலகம், அதனால், உழந்தும் உழவே தலை. உலகமே உழவின்பின்; துயர்தரினும், தலைத்தொழில் உழவையே செய். உழுவார் உலகத்தார்க்(கு) ஆணி,அஃ(து) ஆற்றா(து) எழுவாரை எல்லாம் பொறுத்து. எல்லாரையும் தாங்கும் உழவர்; உலகத்தேர்க்கு அச்சுஆணி ஆவர். உழு(து)உண்டு வாழ்வாரே வாழ்வார்…
திருக்குறள் அறுசொல் உரை – 102. நாண் உடைமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 102. நாண் உடைமை இழிசெயல் வழிவரும் அழியாப் பழிக்கு வெட்கி,அது ஒழித்தல். கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. பழிச்செயலுக்கு வெட்குவதே, வெட்கம்; மகளிர்தம் வெட்கம், வேறு.. ஊண்,உடை, எச்சம், உயிர்க்(கு)எல்லாம் வே(று)அல்ல; நாண்உடைமை மாந்தர் சிறப்பு. உணவு,உடை, பிறஎல்லாம் பொது; நாணம் மக்களுக்குச் சிறப்பு. ஊனைக் குறித்த…
திருக்குறள் அறுசொல் உரை – 090. பெரியாரைப் பிழையாமை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 089. உள்பகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை பெரியார்சொல் கேட்பார், பிழைசெய்யார் பெரியார்சொல் கேளார், பிழைசெய்வார். ஆற்றுவார் ஆற்றல், இகழாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. செயல்வல்ல பெரியாரை இகழாது, மதித்துச் செயல்படல் சிறப்பு. பெரியாரைப் பேணா(து) ஒழுகின், பெரியாரால் பேரா இடும்பை தரும். பெரியார்தம் சொல்வழி நடவாமை, பெயராப் பெரும்துன்பம் தரும். கெடல்வேண்டின், கேளாது செய்க; அடல்வேண்டின், …
திருக்குறள் அறுசொல் உரை – 087. பகை மாட்சி : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 086. இகல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 087. பகை மாட்சி படைஅறிவு, வலிமை, நல்துணை பொறுமை போன்றன பகைச்சிறப்புகள். வலியார்க்கு மா(று)ஏற்றல் ஓம்புக; ஓம்பா மெலியார்மேல் மேக பகை. வலியார் பகையை, விலக்குக; மெலியார் பகையை, விரும்புக. அன்(பு)இலன், ஆன்ற துணைஇலன், தான்துவ்வான், என்பரியும் ஏ(து)இலான் துப்பு….? அன்பு,துணை, வலிமை இல்லான், பகைவரை எப்படி எதிர்கொள்வான்….? அஞ்சும், அறியான், அமை(வு)இலன், ஈகலான், தஞ்சம்…
திருக்குறள் அறுசொல் உரை – 086. இகல்: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 085. புல்அறிவு ஆண்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 086. இகல் வெறுப்பு, பகைமை, பேரிழப்பு துயரம்எனப் பெருக்கும் மனமாறுபாடு. இகல்என்ப .எல்லா உயிர்க்கும், பகல்என்னும் பண்(பு)இன்மை பாரிக்கும் நோய். பிரிவுஎனும் தீப்பண்பை வளர்க்கும் கொடிய நோய்தான் மனமாறுபாடு. பகல்கருதிப் பற்றா செயினும், இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. பிளவால் விரும்பாதன செய்வார்க்கும், மாறுபாட்டால், தீங்கு செய்யாதே. இகல்என்னும் எவ்வநோய் நீக்கின், தவல்இல்லாத்…